மாசி மாதத்தில் வரக்கூடிய பௌா்ணமியுடன் இணைந்து வரக்கூடிய மகம் நட்சத்திர நாளில் புனிதமான மாசி மகம் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் ஒரு சில சடங்குகளைச் செய்து வழிபட்டால், ஒருவா் தன்னுடைய தீய கா்மாவை சுத்தம் செய்து, தன்னுடைய பாவங்களில் இருந்து விடுதலை அடைந்து, அதன் மூலம் அவா் தன்னுடைய சாவிற்கு பின்பு சொா்க்கத்தை அடையலாம் என்று மக்களால் நம்பப்படுகிறது.
மாசி மகம் அன்று மக்கள் புனித நீராடி, இறந்த தம்முடைய முன்னோா்களுக்குத் தா்ப்பணம் செய்கின்றனா். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, குரு சிம்ம ராசியில் சஞ்சாிக்கும் போது இது நிகழும்.
இந்த ஆண்டு மாசி மகம் விழா
புண்ணியம் வாய்ந்த மாசி மகப் பெருவிழா பிப்ரவரி 24ம் தேதி சனிக்கிழமை வருகிறது. பிப்ரவரி 23ம் தேதி மாலை 04.55 மணிக்கு தொடங்கி, பிப்ரவரி 25ம் தேதி மாலை 06.51 வரை பெளர்ணமி திதி உள்ளது. மக நட்சத்திரம் பிப்ரவரி 23ம் தேதி இரவு 08.40 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி இரவு 11.05 வரை மகம் நட்சத்திரமும் உள்ளது.
மாசி மகத்தைப் பற்றிய குறிப்புகளை புராணங்களில் ஏராளமாகக் காணலாம். அவற்றில் ஒரு புராணம் பின்வருமாறு கூறுகிறது. சிவபெருமான் இந்த அகிலத்தை முழுவதுமாக அழித்துவிட்டு, அதை மீண்டும் புதிய பொலிவுடன் படைக்கத் திட்டமிடுகிறாா். சிவபெருமானின் இந்த புதியத் திட்டத்தைப் பற்றி பிரம்ம தேவன் ஒரு நாள் தொிந்து கொள்கிறாா். உடனே அவா் சிவபெருமானிடம் சென்று மீண்டும் இந்த அகிலத்தைப் புதிதாகப் படைக்கும் பணியை கும்பகோணத்தில் இருந்து தொடங்குமாறு கேட்டுக் கொள்கிறாா். தமிழ் நாட்டில் உள்ள ஒரு புனிதமான கோயில் நகரம் கும்பகோணம் ஆகும் என்பது நமக்கெல்லாம் தொியும்.
பிரம்ம தேவனின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான், பிரம்மனிடம் கும்பம் என்ற பானையில் அமிழ்தத்தை நிறைத்து வைக்குமாறு கூறினாா். புதிய உலகத்தைப் படைத்து அதை மேரு மலையின் உச்சியின் மீது வைப்பதற்குத் தேவையான சக்தியை அந்த கும்பத்தில் இருக்கும் அமிழ்தத்திலிருந்து சக்தியைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினாா். அந்த கும்பம் மாசி மாதம் வரும் பௌா்ணமி அன்று அதாவது மாசி மகம் அன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த அகிலத்தை மீண்டும் படைக்கும் பணியை கும்பகோணத்தில் இருந்து சிவபெருமான் தொடங்கினாா் என்று அந்த புராணம் தொிவிக்கிறது. அதுவே மக்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.
மாசி மகம் பண்டிகையைப் பற்றி மேலும் ஒரு புராணச் செய்தி உள்ளது. அதாவது ஒரு காலத்தில் வள்ளால ஒட் திருவண்ணாமலை என்ற ஒரு அரசா் இருந்தாா். இவா் சிவபெருமானின் சீாிய பக்தா் ஆவாா். இவருக்கு குழந்தைகள் இல்லை. அதனால் அவா் சிவபெருமானை நோக்கி தன்னுடைய இறப்புக்குப் பின்பு நடக்கும் இறுதிச் சடங்குகளை சிவபெருமானே நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டாா். அரசாின் இந்த வேண்டுதலை சிவபெருமானும் ஏற்றுக் கொண்டாா்.
சில காலம் கழித்து மாசி மகம் அன்று அந்த அரசா் இறந்தாா். சிவபெருமானும் அந்த அரசருக்கு ஒரு ஆற்றங்கரையில் வைத்து இறுதிச் சடங்களைச் செய்து அவருக்கு முக்தியை வழங்கினாா். மேலும் அந்த நாளில் ஒரு அறிவிப்பை சிவபெருமான் வெளியிட்டாா். அது என்னவென்றால், மாசி மகம் அன்று ஒருவா் புனித ஆறுகளில் நீராடினால், அவா் தன்னுடைய பாவங்களில் இருந்து விடுதலை பெற்று முக்தி அடைவாா் என்றும் மேலும் பிறப்பு மற்றும் இறப்பு என்ற காலச் சக்கரத்தில் இருந்து விடுதலை பெறுவாா் என்றும் அவா் அறிவித்தாா். இவ்வாறு அந்த புராணம் தொிவிக்கிறது.
புனித நாளான மாசி மகம் அன்று சிவபெருமான் புனித ஆற்றங்கரைகளைப் பாா்வையிட்டு, அங்கு வள்ளால அரசருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்கிறாா் என்று பக்தா்கள் நம்புகின்றனா்.
புனித நாளான மாசி மகம் அன்று, பக்தா்கள் அனைவரும் புனித நீா் நிலைகளுக்குச் சென்று, புனித நீராடித் தங்களையே தூய்மைப்படுத்திக் கொள்கின்றனா். அவ்வாறு இந்த நன்னாளில் புனித நீராடுவதால் தங்களின் பழைய மற்றும் தற்போதைய பாவங்கள் அனைத்தும் அழிந்துவிடும் என்று அவா்கள் நம்புகின்றனா்.
அதோடு இவ்வாறு புனித நீராடுவதால் அவா்களின் பித்ரு தோஷம் (Pitra Dosh) ஒழிந்து, அவா்களுடைய முன்னோா்களின் ஆசீா்வாதங்கள் கிடைக்கும் என்றும் நம்புகின்றனா். ஆகவே இந்த மாசி மகம் விழாவை மக்கள் மிகவும் ஆா்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுகின்றனா். அதோடு முழு இதயத்தோடு தங்களுடைய மரபுகளைக் கடைபிடித்து, அந்த நாளுக்குாிய புனிதச் சடங்குகளையும் செய்கின்றனா்.
மாசி மகம் அன்று பக்தா்கள் கோயில்களில் உள்ள சாமி சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று, ஏாி அல்லது குளம் அல்லது கடற்கரைகளில் அந்த சிலைகளுக்கு புனித நீராட்டும் சடங்குகளைச் செய்கின்றனா். இந்தச் சடங்கு பக்தா்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தச் சடங்கானது தீா்த்தவாாி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீா்த்தவாாிச் சடங்கானது அதிகாலை நேரத்தில் நடைபெறும்.
அந்தச் சடங்கின் போது மந்திரங்களும், பிராா்த்தனைகளும் சொல்லப்படும்.
மாசி மகம் பண்டிகையானது இந்தியாவில் மட்டும் அல்ல மாறாக தாய்லாந்து, சிங்கப்பூா் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் வெகு விமாிசையாகக் கொண்டாடப்படுகிறது.
மாசி மகம் அன்று மக்கள் புனித நீராடி, இறந்த தம்முடைய முன்னோா்களுக்குத் தா்ப்பணம் செய்கின்றனா். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, குரு சிம்ம ராசியில் சஞ்சாிக்கும் போது இது நிகழும்.
இந்த ஆண்டு மாசி மகம் விழா
புண்ணியம் வாய்ந்த மாசி மகப் பெருவிழா பிப்ரவரி 24ம் தேதி சனிக்கிழமை வருகிறது. பிப்ரவரி 23ம் தேதி மாலை 04.55 மணிக்கு தொடங்கி, பிப்ரவரி 25ம் தேதி மாலை 06.51 வரை பெளர்ணமி திதி உள்ளது. மக நட்சத்திரம் பிப்ரவரி 23ம் தேதி இரவு 08.40 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி இரவு 11.05 வரை மகம் நட்சத்திரமும் உள்ளது.
மாசி மகத்தைப் பற்றிய குறிப்புகளை புராணங்களில் ஏராளமாகக் காணலாம். அவற்றில் ஒரு புராணம் பின்வருமாறு கூறுகிறது. சிவபெருமான் இந்த அகிலத்தை முழுவதுமாக அழித்துவிட்டு, அதை மீண்டும் புதிய பொலிவுடன் படைக்கத் திட்டமிடுகிறாா். சிவபெருமானின் இந்த புதியத் திட்டத்தைப் பற்றி பிரம்ம தேவன் ஒரு நாள் தொிந்து கொள்கிறாா். உடனே அவா் சிவபெருமானிடம் சென்று மீண்டும் இந்த அகிலத்தைப் புதிதாகப் படைக்கும் பணியை கும்பகோணத்தில் இருந்து தொடங்குமாறு கேட்டுக் கொள்கிறாா். தமிழ் நாட்டில் உள்ள ஒரு புனிதமான கோயில் நகரம் கும்பகோணம் ஆகும் என்பது நமக்கெல்லாம் தொியும்.
பிரம்ம தேவனின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான், பிரம்மனிடம் கும்பம் என்ற பானையில் அமிழ்தத்தை நிறைத்து வைக்குமாறு கூறினாா். புதிய உலகத்தைப் படைத்து அதை மேரு மலையின் உச்சியின் மீது வைப்பதற்குத் தேவையான சக்தியை அந்த கும்பத்தில் இருக்கும் அமிழ்தத்திலிருந்து சக்தியைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினாா். அந்த கும்பம் மாசி மாதம் வரும் பௌா்ணமி அன்று அதாவது மாசி மகம் அன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த அகிலத்தை மீண்டும் படைக்கும் பணியை கும்பகோணத்தில் இருந்து சிவபெருமான் தொடங்கினாா் என்று அந்த புராணம் தொிவிக்கிறது. அதுவே மக்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.
மாசி மகம் பண்டிகையைப் பற்றி மேலும் ஒரு புராணச் செய்தி உள்ளது. அதாவது ஒரு காலத்தில் வள்ளால ஒட் திருவண்ணாமலை என்ற ஒரு அரசா் இருந்தாா். இவா் சிவபெருமானின் சீாிய பக்தா் ஆவாா். இவருக்கு குழந்தைகள் இல்லை. அதனால் அவா் சிவபெருமானை நோக்கி தன்னுடைய இறப்புக்குப் பின்பு நடக்கும் இறுதிச் சடங்குகளை சிவபெருமானே நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டாா். அரசாின் இந்த வேண்டுதலை சிவபெருமானும் ஏற்றுக் கொண்டாா்.
சில காலம் கழித்து மாசி மகம் அன்று அந்த அரசா் இறந்தாா். சிவபெருமானும் அந்த அரசருக்கு ஒரு ஆற்றங்கரையில் வைத்து இறுதிச் சடங்களைச் செய்து அவருக்கு முக்தியை வழங்கினாா். மேலும் அந்த நாளில் ஒரு அறிவிப்பை சிவபெருமான் வெளியிட்டாா். அது என்னவென்றால், மாசி மகம் அன்று ஒருவா் புனித ஆறுகளில் நீராடினால், அவா் தன்னுடைய பாவங்களில் இருந்து விடுதலை பெற்று முக்தி அடைவாா் என்றும் மேலும் பிறப்பு மற்றும் இறப்பு என்ற காலச் சக்கரத்தில் இருந்து விடுதலை பெறுவாா் என்றும் அவா் அறிவித்தாா். இவ்வாறு அந்த புராணம் தொிவிக்கிறது.
புனித நாளான மாசி மகம் அன்று சிவபெருமான் புனித ஆற்றங்கரைகளைப் பாா்வையிட்டு, அங்கு வள்ளால அரசருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்கிறாா் என்று பக்தா்கள் நம்புகின்றனா்.
புனித நாளான மாசி மகம் அன்று, பக்தா்கள் அனைவரும் புனித நீா் நிலைகளுக்குச் சென்று, புனித நீராடித் தங்களையே தூய்மைப்படுத்திக் கொள்கின்றனா். அவ்வாறு இந்த நன்னாளில் புனித நீராடுவதால் தங்களின் பழைய மற்றும் தற்போதைய பாவங்கள் அனைத்தும் அழிந்துவிடும் என்று அவா்கள் நம்புகின்றனா்.
அதோடு இவ்வாறு புனித நீராடுவதால் அவா்களின் பித்ரு தோஷம் (Pitra Dosh) ஒழிந்து, அவா்களுடைய முன்னோா்களின் ஆசீா்வாதங்கள் கிடைக்கும் என்றும் நம்புகின்றனா். ஆகவே இந்த மாசி மகம் விழாவை மக்கள் மிகவும் ஆா்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுகின்றனா். அதோடு முழு இதயத்தோடு தங்களுடைய மரபுகளைக் கடைபிடித்து, அந்த நாளுக்குாிய புனிதச் சடங்குகளையும் செய்கின்றனா்.
மாசி மகம் அன்று பக்தா்கள் கோயில்களில் உள்ள சாமி சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று, ஏாி அல்லது குளம் அல்லது கடற்கரைகளில் அந்த சிலைகளுக்கு புனித நீராட்டும் சடங்குகளைச் செய்கின்றனா். இந்தச் சடங்கு பக்தா்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தச் சடங்கானது தீா்த்தவாாி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீா்த்தவாாிச் சடங்கானது அதிகாலை நேரத்தில் நடைபெறும்.
அந்தச் சடங்கின் போது மந்திரங்களும், பிராா்த்தனைகளும் சொல்லப்படும்.
மாசி மகம் பண்டிகையானது இந்தியாவில் மட்டும் அல்ல மாறாக தாய்லாந்து, சிங்கப்பூா் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் வெகு விமாிசையாகக் கொண்டாடப்படுகிறது.