வள்ளுவரைப் போற்றுவோம் ..... 408
வேறு அர்த்தங்கள்!
தலைவனின் சின்னச் சின்னச் செயல்களுக்கும், அவன்
தலைவி, வேறு புதிய அர்த்தங்களைக் கற்பிக்கின்றாள்!
அவன் தும்மியவுடன், வழக்கம்போல நீண்ட ஆயுள் வாழ
அவனை வாழ்த்தி, உடனே தலைவி அழுகின்றாள்! ஏன்?
யாராவது ஒருவர் நினைத்தால்தானே அவர் தும்முவார்?
'யார் நினைத்ததால் தும்மினீர்?' என்று அழுகின்றாளாம்!
'வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று'. இதுவே குறட்பா.
தும்மினால் அழுகிறாள் என்பதைக் கண்டுகொண்ட பின்,
தும்மல் வரும்போது, அவன் அடக்கிவிடுகிறான்! ஆனால்,
அப்படிச் செய்த பொழுதும், அவள் அழுகின்றாள். சந்தேகம்,
'இப்படிச் செய்து, வேறு யாரோ நினைப்பதை மறைத்தீரோ?'
'தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று'. இது குறள்.
தன் தலைவன், யார் நினைவிலும் இருக்கவே கூடாதென்று,
தன் மனத்தில் உறுதியாய் எண்ண விழைகின்றாள் தலைவி!
:decision: . . . :thumb: