புதிய முயற்சி!
சுவைகளில் பலவிதம் உண்டு! அதில்
சுவை பாரம்பரியமாக இருப்பது அழகு!
புதிய முயற்சி என மாற்ற முயன்றால்,
இனிய சுவையும் மாறிப் போய்விடும்!
வட இந்தியப் பாடல்களை, நம்முடைய
தென்னிந்திய கன ராகங்களிலே பாடிட,
அந்த பக்திச் சுவையும் குன்றியதுடன்,
இந்த கன ராகங்களின் அழகும் குன்றி,
ஏதோ ஒரு இனம் புரியாத இசையாக,
ஏனோ தானோவென்று ஆகிவிட்டது!
வேடிக்கையான ஒரு சின்ன உதாரணம்
வேகமாக எண்ண அலைகளில் வந்தது!
மைதாவில் குலாப் ஜாமுன் செய்யாது,
மையாக அரைத்த உளுந்தில் செய்தால்,
வரும் ரெண்டும் கெட்டான் சுவைபோல
வந்து விழுந்தது என் செவிகளில்! இதை
கைகளைத் தட்டி, ரசித்து, சிலாகித்தது
மெய்யான பாராட்டா? யோசிக்கிறேன்!
:clap2: . . . :noidea: