மிகச் சாதுர்யமான பதில்!
ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு, அதிலே
ஒரு இசை நிகழ்ச்சியைத் தருவது வழக்கம்!
முப்பெரும் தேவியரைப் பற்றிய நிகழ்ச்சி;
முன் வந்து விழுகின்றது ஒரு சிறு கேள்வி!
எந்த தேவி இசைக் கலைஞருக்குத் தேவை?
இந்தக் கேள்விக்குத் தந்தார்கள் சிறந்த பதில்.
கலைமகள் கடாட்சம் மிகத் தேவை; ஆனால்
அலைமகள் தயை இல்லத்தில் இல்லாவிடில்,
மனம் மகிழ்வு குறைய வாய்ப்பும் உண்டாம்!
மனம் மகிழாவிடில், இசைப்பது எப்படியாம்?
மலைமகள் அருளுகிற சக்தியும், தைரியமும்,
அலைந்து பல இடங்கள் செல்லத் தேவைதான்!
நன்கு யோசித்தால், கலைஞர்களுக்குத் தேவை,
அன்புடன் அருளும், முப்பெரும் தேவியர்களுமே!
ray2: