• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சோம பானமும் சுரா பானமும்

Status
Not open for further replies.
சோம பானமும் சுரா பானமும்

657d7-flyagaric.jpg


சோம பானமும் சுரா பானமும்


(I have already posted this article in English: London swaminathan)

வேத காலத்தில் ரிஷி முனிவர்களும் பிற்காலத்தில் யாகம் செய்த மன்னர்களும் அருந்தியது சோம பானம். குடிகாரர்கள் அருந்துவது சுரா பானம், அதாவது, கள் மது பான வகைகள். வேதத்தை ஆராய்ச்சி செய்த வெளிநாட்டு “அறிஞர்கள்” இவ் விஷயத்தில் மகா குழப்படி செய்து விட்டார்கள். ஆரிய சிவன் வேறு , திராவிட சிவன் வேறு, தமிழ் முருகன் வேறு, வடமொழி ஸ்கந்தன் வேறு, தமிழ் கிராம தேவதைகள் வேறு, வேத இதிகாச, புராண தெய்வங்கள் வேறு, ஆரியன் வேறு, திராவிடன் வேறு என்று இந்து மதத்தில் மாபெரும் விஷ வித்துக்களை ஊன்றியவர்களுக்கு “அறிஞர்” என்று நாம் பட்டம் சூட்டியதற்கு மூன்றே காரணங்கள் தான்: 1. அவனுக்கு வெள்ளைத்தோல், நமக்கு கருப்புத் தோல் 2. அவன் எழுதியது ஆங்கிலத்தில், தமிழனுக்கு வடமொழி தெரியாது, வடக்கத்தியானுக்குத் தமிழ் தெரியாது. 3. அவன் நம்மை ஆண்டவன், நாமோ அடிமையாக ஆயிரம் ஆண்டு வாழ்ந்தவன்.


‘ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி’ என்று பாரதி பாடியதற்கும், “ஏ, வெளிநாட்டுக்காரர்களே, நீங்கள் செய்த தீங்குகளுக்கு இந்துமஹா சமுத்திரத்தில் உள்ள சகதி அனைத்தையும் எறிந்தாலும் போதாது” என்று சுவாமி விவேகநந்தர் கூறியதற்கும் இதுதான் காரணம். இந்துமதம் என்று அழிகிறதோ அன்று இந்தியாவும் அழிந்துவிடும் என்று சுவாமி விவேகாநந்தர் கூறுவதற்கு முன்னரே வெள்ளைத் தோல் “அறிஞர்”களுக்கு இவ்வுண்மை நன்கு விளங்கியது.இந்து மதத்தை அழித்து இந்தியாவைப் பிரிது ஆள திட்டம் வகுத்தனர். அது பலிக்கவில்லை.


அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி 65 ஆண்டுகளுக்குப் பின்னரும் நாம் மாறாதது நமது குறையே. சங்கத் தமிழ் இலக்கியத்திலோ, பழைய வடமொழி நூல்களிலோ வெளிநாட்டு அறிஞர்கள் கூற்றுகளுக்கு எள்ளளவும் ஆதாரம் இல்லை.

d60eb-somapalnts.jpg


தமிழ் இலக்கியத்தில் சோம பானம்

ரிக்வேதத்தின் ஒன்பதாவது மண்டலம் முழுதும் சோம பானம் பற்றிய பாடல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில்லும் சோமலதை (கொடி) பற்றிய பாடல்கள் கொஞ்சம் உண்டு. பகவத் கீதையிலும் கண்ண பிரான் (காண்க 9-20) சோமலதையின் பெருமையைப் பேசுகிறார். இதை அருந்துவோர் இந்திர லோகப் பயன்களைப் பெறுவர். ஆனால் முக்தி பெற உதவாது என்று கூறுகிறார்.


இந்தத் தாவரம் இமய மலையின் வடமேற்குப் பகுதியான முஜாவத் மலையில் விளைந்தது. இப்போது அழிந்துவிட்டது அல்லது இன்ன தாவரம் என்று தெரியாமல் போய்விட்டது.. இது என்ன தாவரம் என்று தெரியாதது வெளி நாட்டு அறிஞர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. ஆகவே இதை கஞ்சா, அபினி வகையில் சேர்த்து போதையூட்டும் மருந்து என்று கூறிவிட்டனர். அதுமட்டுமல்ல மூன்று நான்கு பேர் வெவேறு தாவரங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இவைதான் சோமலதை என்று “சத்தியம் செய்து”விட்டார்கள். நமது ஊரில் இவர்களுக்கு ஜால்ரா போடுவதையே வாடிக்கையாகக் கொண்டவர்கள், டாக்டர் பட்டம் (பிஎச்.டி) பெறுவதற்காக இன்னும் கொஞ்சம் குழப்பம் உண்டாக்கிப் புது விசயங்களைக் கற்பித்தனர். இங்குள்ள இந்துமத விரோத “திராவிட”ங்களுக்கோ இதைப் படிக்கப் படிக்க ஏக சந்தோஷம். கஞ்சா அபினி, வெளி நாட்டுச் சரக்குகள் அத்தனையும் சேர்த்துச் சாப்பிட்டால் எவ்வளவு போதை ஏறுமோ அவ்வளவுக்கு கிறுகிறுப்பு, கிளுகிளுப்பு!


பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரக் கல்வெட்டில் ஒருவரி வருகிறது: ‘சோமபானம் சாப்பிட்டு மனோ சுத்தராகிய காடக சோமயாஜி’ என்று. அதாவது சோமபானம் சாப்பிட்ட ரிஷிகள் குடிபோதையில் ஆடவில்லை. இந்த பானம் அவர்களின் மனதைச் சுத்தப்படுத்தியது. சோமக் கொடி ஒரு அபூர்வமான காய சித்தி மூலிகை! வடமொழியில் அதற்கு மற்றொரு பெயர் ‘பவமான’. இந்தச் சொல்லின் மறு பொருள் : சுத்தம், தூய்மை.


ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியுடன் சேரமன்னன் பாண்டிய மன்னன் ஆகிய இருவரும் சேர்ந்த காட்சியைக் கண்ட அவ்வைப் பாட்டிக்கு ஏக சந்தோஷம். இன்று போல் என்றும் ஒற்றுமையுடன் வாழ்க என்று பாராட்டுகிறார். வாழ்நாள் முழுதும் ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு அழிந்த இனம் தமிழ் இனம். இதனால் மூவேந்தர்களும் ஒன்றுபட்ட காட்சியைக் கண்ட ( புறநானூறு பாடல் 367) அவ்வைப் பாட்டி பூரித்துப்போனார்.


சங்க இலக்கியம் எழுதிய காலத்திலேயே சோமலதை அருகிவிட்டது. கடலைக் கடந்து எடுத்த அமிழ்தத்தை 6 இடங்களிலும் வசிஷ்ட மஹரிஷியின் மனைவி பத்தினித் தெய்வம் அருந்ததியை 6 இடங்களிலும் வடமொழிச் சொல்லிலேயே குறிப்பிடும் சங்கப் புலவர்கள், சோமக் கொடியைப் பற்றி நேரடியாக ஒரு இடத்திலும் பேசவில்லை.


ராஜசூயம் யாகம் செய்வோர் சோம ரசத்தை அருந்துவதால்தான் அதற்கு ராஜ சூயம் என்று பெயர் ஏற்பட்டதாக வடமொழி நூல்கள் கூறுகின்றன. அதாவது மூலிகைகளின் ராஜாவான சோமத்தைப் பிழிந்து ராஜா குடிக்கும் யாகம் ராஜசூயம். சதபத பிராமணம் என்னும் பழைய நூல் பூமியின் முதல் மன்னன் சோமன் என்றும் கூறும், ஆக, சோம என்ற பதத்துக்கே ராஜ என்று பொருள். இதைச் சாப்பிட்டனர் ராஜசூய யாகம் செய்த தமிழ் மன்னர்கள்.

5bf16-somapalnts2.jpg

வடமொழி இலக்கியத்தில் சோம பானம்

ஸ்ரீசூக்தம் என்ற வேத மந்திரமும் (பாடல் 23) சோமரசத்தைப் புகழ்கிறது.
வடமொழி நூல்களான சதபத பிராமணமும் தைத்ரீய பிராமணமும் சோமபான- சுராபான வேறுபாடுகளை அழகாகப் பட்டியல் போட்டுக் காண்பிக்கிறது:
சோம ரசம்: இது சத்தியமானது, வளம் தருவது, ஒளியூட்டுவது.

சுராபானம்: கண்டிக்கத்தக்க பானம்; தீயது, இருளூட்டுவது, வறுமைகொடுப்பது; இதைக் குடித்தால் கோபம் வரும். பிராமணர்கள் தொடக் கூடாதது ( சதபத. 5-1-2-1-10; 12-8-1-5; 12-7-3-20).

சோமலதை என்பது பழுப்பு நிறம் கொண்டது. அதைக் காய்ச்சி வடித்து ரசத்தைப் பாலுடன் கலந்து குடித்தனர். சிந்து சமவெளி முத்திரைகளில் இனம் தெரியாத ஒரு சல்லடை போன்ற வடிகட்டி இருக்கிறது. இதை சோமபான வடிகட்டியாக இருக்கலாம் என்று மெள்ள மெள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்ளத் துவங்கிவிட்டனர்.


சோமலதையை கழுகுகள் தூக்கி வந்ததாகவும் அதை முஜாவத் மலையில் இருந்தவர்கள் விரட்டியதாகவும் பல பாடல்களில் ரிஷி முனிவர்கள் குறிப்பிடுகின்றனர். சோமக் கொடியை கழுகுகள் என் தூக்கிவர வேண்டும்? இது விளங்காமல் வெளி நாட்டு அறிஞர்கள் முழிக்கின்றனர். இந்த விஷயத்தைத் தொடாமல் மறைத்து நிறைய எழுதுகின்றனர்!!

சோமலதை போதைப் பொருள் என்றால், எந்த முட்டாளாவது அதில் முக்கால் வாசியை சோமயாகத் தீயில் கொட்டிவிட்டு மீதியை மட்டும் குடிப்பானா? முழுச் சரக்கையும் உள்ளே இறக்கிக் கூத்தடிக்க மட்டார்களா?


சோமலதை போதைப் பொருள் என்றால் அதை விலைக்கு விற்றவர்கள் கொஞ்சமாவது ருசி பார்த்து ஆட்டம் போடிருப்பார்களே. அப்படி வேதத்திலோ பிற்காலத்திலோ ஒரு குறிப்பும் இல்லையே. ரிஷி முனிவர்கள் மட்டும் ஏன் சாப்பிட்டனர்? மலை ஜாதி மக்களிடம் இதை விலைக்கு வாங்கியதையும் அதைப் பாதுகாத்துப், பதனப் படுத்தி வைத்ததையும் நிறைய பாடலகளில் காணலாம்.
த்வஷ்டா என்ற வேத கால தெய்வத்தை சோமலதையுடன் தொடர்புபடுத்தும் வேதப் பாடல்கள் உண்டு. ஒரு அறிஞர் (Hildebrandt) இந்த த்வஷ்டா வேதகால தெய்வம் இல்லை. வெளியிலிருந்து இறக்குமதியான தெய்வம் என்று ஒரு போடு போட்டார்! கொள்கைகளை வளைத்தும் திரித்தும் சுழித்தும் முறுக்கியும் வெளியிடுவது வெள்ளைத் தோல்களின் வாடிக்கை!!!


சோமபானத்தில் எபிட்ரின் Ephedrine என்ற ரசாயனப் பொருள் இருந்ததாகவும் அதை இப்போதும் போதைப்பொருளாக சிலர் பயன்படுத்துவதாகவும் இருவருக்கு (‘Prof.N.A.Quazilbash and Dr C.G.Kashikar )’ஞானோதயம்’’ ஏற்பட்டு ஒரு புத்தகம் எழுதிவிட்டார். இந்த ரசாயனப் பொருள் பல தாவரங்களில் உள்ளது. ஏன் அதை இன்று வரை நம்மவர்கள் பயன்படுத்தவில்லை? ஏனெனில் அது சோம லதை இல்லை!!


இன்னொருவருக்கு (R. Gordon Wasson) ஏற்பட்ட ‘’ஞானோதயம்’’: சைபீரியாவில் பயன்படுத்தும் காளான் Amanita muscaria (Fly Agaric) வகை இது!! ஏனெனில் அங்கும் சாமியார்கள் இதைப் பயன்படுத்தி போதை பெறுகின்றனர். இப்படி ஒரு ஆராய்ச்சிப் புத்தகம்!
லாசன் (Mr.Lassen :-Sarcostemma viminale or brevistigma) ராத் (Mr Roth:-Sarcostemma acidum), ஜார்ஜ் வாட் (Mr George Watt :- Afgan grape) ரைஸ் (Mr.Rice :- sugarcane) மாக்ஸ்முல்லர் (Mr.Max Muller with a species of hop) ஆகியோர் மனம் போன போக்கில் அவர்களுக்குத் தெரிந்த தாவரங்களின் பெயர்களை எல்லாம் கூறிவைத்தனர்.


இதற்கு மூல காரணத்தைப் பார்க்கவேண்டும். நாம் மதிக்கும் ஒழுக்கம் தெரியாத ஒரு இனத்தில் பிறந்தவர்கள் இந்த ஆய்வாளர்கள். பிறந்து ஞான ஸ்நானம் செய்த அன்றே ஒயின் குடிப்பவர்கள் அவர்கள். தினசரி சாப்பாட்டுக்குப் பின்னர் நாம் தண்ணிர் குடிக்கிறோம், அவர்களோவெனில் பிராந்தி, விஸ்கி குடிக்கிறார்கள். வயதான பின்னரோ புகையிலை முதல் போதைப்பொருள் வரை பயன் படுத்தாத குடும்பமே இல்லை. ஆனால் ரிஷிமுனிவர்களோ தங்களைத் தூய்மைப் படுத்த பசு மூத்திரம் குடித்தார்கள். ஆக ‘’நீரளவே ஆகுமாம் நீராம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு’’ என்பதற்கு இணங்க அவர்களின் சிற்றறிவுக்கு எட்டியதை எல்லாம் ஆராய்ச்சி என்று கொட்டித் தீர்த்துவிட்டார்கள். நம்மவர்களுக்கு மூளை எங்கே போனது? இதை இன்னும் நம்பும் நம்மவர்களை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.


Books for further reading: Identification of Soma by Dr.C.G Kashikar,Pune, 1990; The Rig Veda- A Historical Analysis—Shrikant G.Talageri, New Delhi, 2000; Life in Brahmana Period.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top