• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மகாவீர வைபவம்

Status
Not open for further replies.
மகாவீர வைபவம்

Part 1


ram04-248x300.jpg



ஸ்ரீமத் ராமாயணத்தை ஆதிகவியான வால்மீகி முனிவருக்கு பிறகு பல பெருமக்கள் தமது வழியில் – தமது மொழியில் கவிதையாக, உரைநடையாக, ஓவியமாக என்று உருவாக்கி உலகத்துக்கு கொடுத்திருக்கிறார்கள். நமது பாரத தேசத்தில் மட்டும் அல்ல – அதைச் சுற்றியுள்ள பல நாடுகளிலும் எண்ணற்ற ஆண்டுகளுக்கு முன்பே ராமாயணம் பரவி இருக்கிறது. தற்காலத்தில் ஐரோப்பிய – அமெரிக்க நாடுகளில் கூட ராமாயணம் பிரபலமாக இருக்கிறது. மற்ற எத்தனையோ புராணங்கள் இருந்தும் ராமாயணம் இந்த அளவுக்கு பேசப்பட காரணம் என்ன? அது நமது வாழ்க்கையோடு ஒப்பிடக்கூடிய அளவில் ஒன்றிய தன்மைதான்.


பரந்து விரிந்த பாரத நாட்டில் ஓரிடத்திலிருந்து சில நூறு மைல்கள் பிரயாணம் செய்தோமானால் மக்கள் பேசுகிற மொழியே மாறிப்போய்விடும். மேலிடையாக ஒவ்வொரு மொழியும் தனித்தனியாக அடையாளங்களைக் கொண்டிருப்பதால் புரியவே புரியாது. ஆனால் “ராமா” என்ற ஒற்றை மந்திரம் இமயம் முதல் குமரி வரை எல்லோருக்கும் புரியும்! மொழியால் விலகிச்செல்லும் இந்த பிரதேசங்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது ராமாயணம் போன்ற நமது கலாச்சார பண்பாட்டு காவியங்கள் தான் என்பது வெளிப்படை.

சிவனும் அம்புய மலரில் அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு தொடரு செங் கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன் உலகில் வந்ததுகொல்
~ கம்பராமாயணம், அனுமபடலம்

கம்ப நாட்டாழ்வார் ராமனே பரப்ரம்மம் என்கிறார். வால்மீகி ராமாயணத்திலும் அப்படியே. தெய்வமாக பார்த்தால் தெய்வம். மனிதனாகப் பார்த்தால் மனிதன். காவிய நாயகனாகப் பார்த்தால் அப்படியே சொல்லப்பட்டிருக்கிறது.. ராமன் என்கிற அவதாரம், மனிதர்களாகிய நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே பார்க்கிறவர்களுக்கு தகுந்த வகையில் ஒரு உயர்வுத் தன்மையை எடுத்து வைக்கிறது. ராமாயணத்தில் ராமன் மட்டும் அல்ல. அங்கே ஒவ்வொரு கதை மாந்தரும் ஒரு தர்மத்தை எடுத்து நடத்திக் காட்டுகிறார்கள். வாழ்க்கையின் உன்னதத்தை தெய்வமே இறங்கி வந்து வாழ்ந்து நமக்கு காட்டியதுதான் ராமாயணம். நல்லவனாக இருப்பது மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டியது ராமாயணம்.


மேலும் ராமாயணத்தை வெறும் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே எழுந்த போராட்டம் என்றும் ஒதுக்கி விட முடியாது. வாழ்க்கையின் மர்ம சுழற்சியில் தர்மத்துக்கும் தர்மத்துக்குமே போராட்டம் வந்து விடுகிறது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற பெற்ற மகனைக் காட்டுக்கு அனுப்புவதா அல்லது அதை விடுத்து ராஜநீதிப்படி நல்லவனான மகனை அரசமர்த்துவதா? தந்தை சொல்லைக் காப்பாற்றுவதற்காக காட்டுக்கு செல்வதா அல்லது தர்ம சாத்திரங்கள் சொன்னபடி இறந்து போன தந்தைக்கு ஈமக்கடன்களை தலைப்பிள்ளையாக இருந்து செய்வதா? அழுது அழுது ஏங்கி தவித்து அடைந்த மனைவியை சேர்ந்திருப்பதா அல்லது அதே அரசநீதிப்படி மனைவியை துறந்து நேர்மையை நிலை நிறுத்துவதா? என்று வெவ்வேறு விதமான தர்மங்கள் எல்லாமே ஒவ்வொரு வகையில் நல்ல நோக்கத்தைக் கொண்டிருந்தாலும் எதை பின்பற்றுவது என்ற குழப்பங்கள் எழுந்து அதில் நமக்கு வழிகாட்டுதலாக நல்ல எடுத்துக்காட்டுகளை அள்ளித்தருவது ராமாயணம் என்னும் இந்த மஹா காவியம்!


பக்தியே வடிவாக அனுமன். சேவையே வடிவாக இலக்குவன். கருணையே வடிவாக சீதை. வேதத்தின் – வேதம் காட்டிய தர்மத்தின் விழுப்போருளாக ராமன் ! தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை – என்று பித்ரு வாக்ய பரிபாலனம் செய்ய மரவுரி தரித்து காட்டுக்கு கிளம்பிய ரகு குல வீரன் ராமன்.

அதர்மத்தின் வழி நடந்த பெரும் பேரரசான ராவண ராஜ்ஜியத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய கர்ம வீரன் ராமன்! ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொருவர் அவனை அண்டி தன்னை காப்பாற்றுமாறு கேட்க அண்டியவர்களை ரட்சித்த ஏக வீரன் ஸ்ரீராமன்! அதனாலேயே ராமாயணத்தை சரணாகதி சாஸ்திரம் என்று பெரியோர் கூறுவர்.

அனாயேனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யா அபயம் மம:
விபீஷனோவா சுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் ||
– வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம்

என்னை அண்டி விபீஷணன் என்ன அந்த ராவணனே வந்து சரணாகதி செய்தாலும், அவனையும் காப்பேன் என்று ராமன் விபீஷன சரணாகதியின் போது, அதை மறுதலித்து பேசும் சுக்ரீவனிடம் சொல்கிறான். மகா பாதகத்தை செய்த ராவணனையே மன்னிக்கக் கூடிய கருணை கடல் ராமன்.



இந்த வீர புருஷனின் சரித்திரத்தை சம்ஸ்க்ருதத்தில் சுருக்கமாக அதே சமயத்தில் மிக கம்பீரமாக இயற்றப்பட்ட காவியம் தான் இந்த மஹா வீர வைபவம். இது ரகுவீர கத்யம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காவியத்தை இயற்றிய மஹான், ஸ்ரீ வைஷ்ணவ தர்சனத்தில் பிரதான குருமார்களில் ஒருவரான வேதாந்த தேசிகர். இந்த காவியம் ரகுவீரனான ராமனின் குணங்களையும் ராமாயணத்தின் முக்கிய நிகழ்ச்சிகளையும் நூறுக்கும் குறைவான ஸ்லோகங்களுடன் எடுத்து சொல்கிறது. இந்த ஸ்லோகங்கள் சொல்லும், பொருளும், சொல்லின் ஒலியும் இயைந்து ஒரு தெய்வீக அனுபவத்தை மெய்சிலிர்க்க அளிப்பது தெய்வீக அருள் பெற்ற கவியின் சாதுர்யம்.


TO BE CONTINUED



https://bhakthi.wordpress.com/category/ராமாயணம்/
 
Last edited:
ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 2

ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 2

ram11.jpg


ஜயத்யா ச்’ரிதஸந்த்ராஸ த்⁴வாந்த வித்⁴வம்ச’னோத³ய: |
ப்ரபா³வான் சீ’தயா தே³வ்யா பரமவ்யோம பா⁴ஸ்கர ||
– மஹா வீர வைபவம் தனி ஸ்லோகம்



ஆச்’ரித​ – பக்தர்களுடைய, ஸந்த்ராஸ: – பயமாகிற, த்⁴வாந்த – இருளை வித்⁴வம்ச​’னோத​³ய – போக்கடிப்பதற்காகஉதித்தவனும், சீ’த​யா தே³வ்யா – சீதா தேவியினாலே, ப்ரபா³வான் – ஒளி பொருந்தியவனும், பரமவ்யோம – பரமபதமான ஸ்ரீவைகுண்டத்தில் பா⁴ஸ்கர – சூரியனைப்போல, ஜயதி! – வெற்றிமுகமாக விளங்குபவனாகஸ்ரீராமன் காட்சியளிக்கிறான்.




ஸ்ரீ ராம ஜெயம்! வேதாந்த மஹா தேசிகரின் உள்ளம் முழுவதும் ராம நாமம்! எதிரே கோவில் சந்நிதியில் உயர்த்தி பிடித்த கோதண்டம் என்னும் வில், புருவ நேரிப்பில் புவனமே மயங்கும் பேரெழில், பரந்த மார்பு, நீண்ட கைகள், கருணை நிறைந்த பார்வை, பரப்ரம்மமே இவன் என்று எடுத்துக்காட்டும் தெய்வீக ஒளியுடன் ராமன்! பக்கத்தில் பிராட்டி சீதை. அவன் ஒளி பொருந்தி இருப்பதற்கு காரணமே அவள்தான். அவளே ஸ்ரீவைகுண்டத்தில் மஹா லக்ஷ்மி! ராமன் சூரியன் – சீதை அந்த சூரியனின் ஒளி. அவள் அருகிலிருக்கும் போதுதான் ராமன் உயிர்ப்புடன் இருக்கிறான்.




அதோடு இந்த உலகில் நம் பூமிக்கு அருகில் இருக்கும் ஒற்றை சூரியனே இவ்வளவு பிரகாசமாக இருக்கிறதே! இவனோ இந்த அண்ட ப்ரபஞ்சங்களை கடந்த பிரம்மாண்டமான வெளியில் சூரியனுக்கெல்லாம் சூரியனாக பிரகாசிக்கும் மஹா விஷ்ணுவாயிற்றே! இப்படி இவன் இவ்வளவு சீருடன் விளங்க எது காரணம் என்று நினைத்து மஹா லக்ஷ்மியான சீதையே அந்த பிரகாசமாக இருப்பதற்கு காரணம் என்று முடிக்கிறார் தேசிகர். விஷ்ணுவை மட்டும் வழிபடுவது முறை அல்ல – மஹா லக்ஷ்மியையும் சேர்த்தே வழிபட வேண்டும். அதனால் தான் பெரியோர் ஸ்ரீவைஷ்ணவம் என்றே இந்த சமயத்தை சொல்லுவார்கள். இதில் ஸ்ரீ என்பது மஹா லக்ஷ்மியையே குறிக்கிறது.




தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அ·தே;
வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்? –
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.

– கம்பராமாயணம், உலாவியற்படலம்


ராமனுக்கு இன்னொரு பக்கத்தில் இளைய பெருமாள் என்ற பெருமையுடன் லக்ஷ்மணன். ராமனுக்கு ஒரு தீங்கு என்றால் தன்னையே கொடுக்க தயங்காதவன். சரணாகதி தத்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டவே ஏற்பட்ட அவதாரம்.. ராமன் குழந்தையாய் இருக்கும்போது, அவன் தூங்கும் தொட்டிலை அணைத்து தன் தொட்டிலை போடாவிட்டால் தூங்கமாட்டானாம் இலக்குவன். ‘அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’ என்ற நம்மாழ்வார் வாக்கு போல அவர்களுக்குள் சகோதர பாசத்தை மீறிய அதீத அன்பு. முதன்முதல் ராம பக்தன் என்றால் அது லக்ஷ்மணன் தான்.
வனப்பு மிகுந்த இந்த ஸ்ரீராம தரிசன காட்சியை கண்ணுற்ற தேசிகரின் உள்ளம் கசிந்து உருகுகிறது. தேசிகரும் இளைய பெருமாளைப் போலத்தான். உலக விவகாரங்கள் பற்றிய அறிவு ஏற்படும் முன்னரே அவருக்கு பக்தி, பரம்பொருள் மீது ஈடுபாடு ஏற்பட்டது. “த்வமேவமாதாச பிதாத்வமேவ” என்ற கீதா வாக்யத்தை அடியொற்றி பரம்பொருளான நாராயணனையே தாயாகவும் தந்தையாகவும் உளமாற நினைத்து உருகி பல பாசுரங்கள் இயற்றியிருக்கிறார்.

TO BE CONTINUED


https://bhakthi.wordpress.com/2008/06/18/ஸ்ரீ-மகாவீர-வைபவம்-–-பகுத/
 
ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 3

ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 3



ஜய ஜய மஹாவீரா!

- மகாவீர வைபவம்(1)



ram01-215x300.jpg


“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! ” என்று பெரியாழ்வார் போற்றிப் பாடியதுபோல் இங்கே ரகு வீரனை “ஹே மஹா வீரா! உனக்கு என்றுமே வெற்றி!” என்று தேசிகன் வாழ்த்துகிறார். இந்த காவியத்திற்கு மகாவீர வைபவம் என்று பெயர் வர இந்த முதல் வரியே காரணம் என்றும் சொல்வர்.




ராமனின் வீரம் எண்ணிப் பார்ப்பதற்கு அரியது. அவன் வீரத்தின் வெளிப்பாடு “நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி!” என்று விஸ்வாமித்திரர் தசரதனிடம் பாதினாறு வயது நிரம்பாத பாலகனான ராமனை – கரிய செம்மலை – தா! என்று கேட்பதில் தொடங்குகிறது. அதன் பிறகு அவன்முன் ஒவ்வொரு முறை ஒவ்வொரு சவால் வந்த போதும் எப்போதும் ராமனுக்கு வெற்றியே!
இருபத்தியொரு தலைமுறை க்ஷத்ரீய மன்னர்களை அழித்து வந்த பெரும் வீரன் பரசுராமன் ராமனிடம் தோற்றுப் போகிறான். தாடகை, கரன், தூஷணன் போன்ற அரக்கர்கள், வாலி, பிறகு இலங்கையில் ராவணனின் பெரும் பேரரசு ஆகிய அனைத்தும் ராமனின் வில்லுக்கு பதில் சொல்ல முடியாமல் வீழ்ந்து போகிறார்கள்.



இதில் ஒரு தவறான அர்த்தம் வந்துவிடக் கூடும். அதாவது போரில் வெற்றி பெறுவது மட்டுமே வீரம் என்று இதை படிப்பவர்கள் தவறான முடிவுக்கு வரக்கூடும். அப்படி அல்ல – எண்ணிய காரியத்தை எத்தனை சோதனைகள் வந்தாலும் தாங்கி, சோர்வின்றி தொடர்ந்து, பொறுமையாக இருந்து, துணிவுடன் செய்து முடிப்பதே வீரம் என்று எந்த காலத்துக்கும் ஏற்ற ஒரு கருத்தை ராமாயணம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.



தாடகை பெண் என்று தயங்கினாலும் விஸ்வாமித்திரன் சொல்கேட்டு ராமன் அவளை கொல்கிறான். வாலி வதத்தின் போது, தன் குறிக்கோள் வாலியை கொல்வது மட்டுமே என்று கொண்டு அதற்கான உபாயத்தை கடைபிடிக்கிறான். இலங்கையில் மாயப்போரில் ஒவ்வொரு அரக்கர் முன், ஒவ்வொரு ராமனாக தானும் மாயையை பயன்படுத்தி வெற்றி கொள்கிறான். இதிலெல்லாம் தவறு கண்டு விவாதித்துக் கொண்டிருப்பவர்கள் அதை செய்து கொண்டு இருக்கட்டும். இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ராமனின் செயல் முனைப்பு, அதில் காட்டும் வேகம், துணிவு ஆகியவை தான்! இதுவே மற்ற பெரும் வீரர்களிடமிருந்து மஹா வீரனாக ராமனை தனித்து காட்டுகிறது.
மஹாதீ⁴ர தௌ⁴ரெயா! - மகாவீர வைபவம்(2)



மஹாதீ⁴ர - மிகுந்த தைரியத்தை உடையவன், தௌ⁴ரெயா! – துணிச்சல் மிகுந்த வீரர்களுள் முதன்மையானவன்! ராமன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத துணிவுடைய பெரும் வீரன். துணிவு என்பது மனச்சோர்வு ஏற்படும் காலத்திலும் அதற்கு இடம் கொடுக்காது சிறிதளவும் பின்வாங்காது இருத்தலே ஆகும்.

உடலில் எத்தனை வலிவு இருந்தாலும் மனதில் அடிபட்டால் தளர்ந்து போகும். பாரதத்தில் துரோணாசார்யரை அவரது பிள்ளை ‘அசுவத்தாமன் இறந்தான்‘ என்று சொல்லி மனக்கலக்கம் அடையச் செய்து வென்றான் அர்ச்சுனன். பெரும் வீராதி வீரனாக இருந்தாலும் மனச்சோர்வு அடையும் போது உடலும் தளர்ந்து போய் விடுகிறது.




சிதை பெரிதா? சிந்தை பெரிதா என்றதற்கு ஒரு பெரியவர் சொன்னார் – “சிதை உயிரற்ற சடலத்தைத் தான் எரிக்கிறது. சிந்தையோ (கவலையோ) உயிருள்ள உடலையும் எரித்து விடுகிறது. ” ஆக உள்ளம் கலங்கினால் எத்தனை பெரிய வீரனாக இருந்தாலும் தோல்வி அடைய வேண்டியதுதான்.




உள்ளத்து உறுதியில் ராவணனும் சளைத்தவன் அல்ல. தான் நாடு நகரம் அனைத்தும் அழிந்த போதும், தம்பிகள், தான் சொந்த பிள்ளைகள் என்று உறவுகளையெல்லாம் பறிகொடுத்த போதும் பின் வாங்கவில்லை. அவனுக்கிருந்த துநிவினாலும், ஊக்கத்தினாலும்தான் வெல்ல முடியாத லங்கேச்வரனாக, மனிதர், வானவர், அரக்கர் என்று அனைவரையும் ஆண்டான்.

அத்தகைய ராவணன், ராமனை ‘தம்மந்யே ராகவம் வீரம் நாராயணம் அநாமயம்!‘ என்று இந்த ரகு வீரன் – ராமன், உண்மையில் அந்த நாராயணனே என்று அறிவேன் என்று சொல்கிறான். ‘பௌருஷே ச அப்ரதி த்வந்த்வ‘ என்றபடி ராமன் முன் வைத்த காலை பின் வைப்பதே இல்லை.


Please continue to read from here

https://bhakthi.wordpress.com/2008/08/06/ஸ்ரீ-மகாவீர-வைபவம்-–-பகுத-2/
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top