• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மார்கழி மாத வழிபாடு

Status
Not open for further replies.
மார்கழி மாத வழிபாடு

மார்கழி மாத வழிபாடு


15-1418613424-vishnu-bhagawan-600.jpg


தமிழகத்தில் பெரும்பாலான சைவ, வைணவ தலங்களில் மார்கழி மாத வழிபாடு, இன்று காலை முதல், வழக்கம் போல் துவங்கும் என, கோவில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

தமிழ் மாதங்களில், கார்த்திகை முடிந்து மார்கழி துவங்கும் நாளில் இருந்து, மார்கழி மாத வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த நாளில், சைவ தலங்களில் திருவெம்பாவை; வைணவ தலங்களில் திருப்பாவை சேவை நடக்கும். வழக்கமாக, நாள்காட்டியில் குறிப்பிடப்படும் நாளின் அடிப்படையிலேயே, மார்கழி மாத பிறப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு வழிபாடு துவங்கும். இந்த ஆண்டு, நாள்காட்டி அடிப்படையில் டிச., 16ம் தேதியான இன்று காலை, மார்கழி மாதம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. ஆனால், ஜோதிட கணிப்புகளின்படி, இன்று பகல், 1:30 மணிக்கு தான் மார்கழி மாத பிறப்பு இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கோவில்களில் மாத வழிபாடு எப்போது துவங்கும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் கிருஷ்ணன் கூறுகிறார், அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த மாதமான மார்கழி மாதத்தின் விசேஷ நாட்களை தெரிந்து கொள்ளலாம்.

மார்கழி 1ம் தேதி 16-12-2014 செவ்வாய் கிழமை ஆலய தனுர் மாத பூஜை ஆரம்பம். திருமணமாகாத பெண்கள் இன்று முதல் இம்மாதம் முழுவதும் தினசரி பெருமாள் கோயிலுக்கு சென்று தினமும் ஒரு பாசுரம் வீதமாக திருப்பாவை படித்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.

மார்கழி 6ம் தேதி 21-12-2014 ஞாயிறு கிழமை அனுமன் ஜெயந்தி. இன்று சிறிய திருவடியான ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலமாக அனைத்து துன்பங்களையும் நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.

மார்கழி 7ம் தேதி 22-12-2014 திங்கள் கிழமை இன்று மூலம் நட்சத்திரம். இன்று சிறிய திருவடியானஆஞ்சநேயரை அபிஷேகம் செய்து வெண்ணெய் மற்றும் வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் ஜாதகத்தில் மூலம் நட்சத்திர தோஷம் நிவர்த்தியாகும்.

மார்கழி 13ம் தேதி 28-12-2014 ஞாயிறு கிழமை பானு சப்தமி - விஜய சப்தமி. இன்று சூரியனை வழிபடுவதற்கும், முன்னோர்களுக்கு தில ஹோமம் செய்து வழிபடுவதற்கும், யாகங்கள், ஹோமங்கள் செய்வதற்கு உகந்த நாள்.

மார்கழி 17ம் தேதி 01-12-2015 வியாழன் கிழமை வைகுண்ட ஏகாதசி. இன்று பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்டு பரமபத வாசலை கடந்தால் வாழ்க்கையே சொர்க்கமாக மாறும்.

மார்கழி 20ம் தேதி 04-01-2014 ஞாயிறு கிழமை லவண தானம். இன்று உப்பு தானம் செய்தால் தொழில் முறையில் செய்த பாபங்கள் விலகும் மார்கழி 20ம் தேதி 04-01-2014 ஞாயிறு கிழமை ஆருத்ரா அபிஷேகம். இன்று இரவு சிவன் கோயிலுக்கு சென்று நடராஜரை அபிஷேகம் செய்து வழிபட்டால் பாபங்கள் விலகும்.

மார்கழி 21ம் தேதி 05-01-2014 திங்கள் கிழமை ஆருத்ரா தரிசனம். இன்று சிவன் கோயிலுக்கு சென்று நடராஜரை வழிபடுவது தோஷங்கள் நீங்கும். மார்கழி 21ம் தேதி 05-01-2014 திங்கள் கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று பெரிய திருவடியான கருடாழ்வாரை வழிபட்டால் புதிய வாகனம் வாங்கும் யோகமும் நிலம் வீடு வாங்கும் யோகமும் உண்டாகும். மார்கழி மாதத்தில் பொதுவாக சுப முகூர்த்தங்கள் கிடையாது. வாஸ்து பூஜையும் கிடையாது




?????????? ???????????? ????? ??????? ????????? ?????????? - Full News
| ??????? ??? ??????? ????? ???? ????????: ??? ??????? ????? ????????? ???????? ????? Dinamalar
 
பெருமை நிறைந்த மார்கழி மாதப் பிறப்பு.

பெருமை நிறைந்த மார்கழி மாதப் பிறப்பு.

மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி என்பார்கள். அதனால்தான், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார். மேலும் அவரே, கீதையில் "மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்" என்று சொல்கிறார்.

markali_1.jpg




அத்தனை சிறப்புகள் வாய்ந்தது இந்த மார்கழி மாதம். அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம். 'பீடு' என்றால் 'பெருமை' என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி 'பீடை' என்றானது.

அதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இது தான்.

மார்கழி முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்து தானே ஆண்டாள் அந்த பெருமாளையே மணாளனாகக் கொண்டாள். இதிலிருந்தே அந்த மாதத்தின் பெருமையை உணரலாம்.

விடியற்காலையில் இருந்தே, ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கிவிடும். அதுபோலவே பல ஆலயங்க ளில் திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கி விடும்.

மார்கழி மாதத்தில் கோலத்தில் பூ வைப்பதற்கும், சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பதற்கும் முன்னோர்கள் காரணங்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.

பூ வைப்பது ஏன்?

அக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை - பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல் யாண விளம்பரங்களோ கிடையாது. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். ஒட்டு மொத்தமாக எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள்.

மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். விவரத்தைப் புரிந்து கொள்வார்கள். தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள். இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள்.

அதுபோலவே மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.

திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான்.

இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு சொல்லும செய்தி.

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான். இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம்.


markali_3.jpg


சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமான விசேஷங்களுள் ஒன்று.

ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதமாக கருதப்படும் இந்த மார்கழி மாதத்தில் இறைவனை எண்ணத்தால் துதித்துப் போற்றுங்கள்..... அனைத்து செல்வங்களையும் பெறுங்கள்.....

-இ.லோகேஸ்வரி

-ர.நந்தகுமார் (மாணவ பத்திரிகையாளர்)

?????? ??????? ??????? ????? ???????...
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top