• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன மந்திரம்

praveen

Life is a dream
Staff member
க்ருத யுகத்தில் உலகம் நன்முறையில் இயங்க மஹாவிஷ்ணுவின் அம்சமாக ஸ்ரீ கார்த்தவீர்யன் அரசராக அவதரித்தார்

இவர் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் என்றும் அழைக்கப்படுகிறார்.இவர் முதலில் ஸ்ரீ அத்ரி முனிவரிடம் சகல வித்தைகளையும் கற்றார்,
பின்னர் ஸ்ரீ அத்ரி முனிவரின் புதல்வரும் அவதூத சத்குருவுமான ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டு

1.விரும்பிய போதெல்லாம் ஆயிரம் கைகள் வரும் வரம்.

2.இவரது ராஜ்யத்தில் யாராவது அதர்மம் செய்ய நினைத்தால் அவர்கள் பயமடைந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடும் வரம்.

3.எல்லா உலகங்களையும் வென்று அரசாளும் வரம்.

4.இவரை யுத்தத்தில் எதிர்ப்பவர்களை விட இவரிடத்தில் அதிகமான சேனை வீரர்கள் உருவாகும் வரம்.

இந்த நான்கு வரங்களைப் பெற்று அவரது சீடர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.

ராவணனை விடப் பலம் பொருந்தியவர். ஒரு சமயம் ராவணணைக் கட்டி இழுத்துச் சிறைப் பிடித்தார் பின்னர் ராவணனின் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்கி ராவணனை விடுதலை செய்தார்.

இவரை வழிபடுபவர்களுக்கும், இவர் சரிதத்தைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் யாவருக்கும் பெரும் நன்மை உண்டாகும்.

இவரது மந்திரம் காணாமல் போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,இழந்த செல்வ நிலையைத் திரும்பப் பெற , அடகு வைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட,கடன் தீர போன்ற நன்மைகளை நிறைவாய் அருள வல்லது.

தொலைந்து போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம|
ராஜ சஹஸ்த்ரபாஹுகம் ||
யஸ்ய ஸ்மரண மாத்ரேன||
(........... )கதம் நஷ்டம் சலப்யதே ||

கதம் என்ற சொல்லின் முன்னால் காணாமல் போன நபர் அல்லது பொருளின் பெயர் சேர்த்து பாராயணம் செய்ய வேண்டும்.

இழந்த செல்வ நிலையைத் திரும்பபெற,அடகுவைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட கீழ்க்கண்ட இரண்டு மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.:-

ஸ்ரீ கார்த்தவீர்யர் காயத்ரீ மந்திரம்

ஓம் கார்த்தவீர்யாய வித்மஹே
மஹாசூஷ்மாய தீமஹி
தந்நோஸ்ர்ஜுநஹ் ப்ரசோதயாத்

மந்திரம் 1.

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரநாத் தேவ ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே ||

மந்திரம் 2.

க்ருத வீர்ய சுதோ ராஜா சஹஸ்ர புஜமண்டலஹ |
அவதாரோ ஹரே சாக்ஷாத் பாவயேத் சகலம் மம|
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரன மாத்ரேன நஷ்டத்ரவ்யம் ச லப்யதே ||


ஓம் கம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜா பாஹு சஹஸ்த்ரவான்|
ஹ்ரீம் தஸ்ய ஸ்மரநாத் தேவ ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே ||
க்ரோம் சஹஸ்ரார ஹூம் பட் க்ரோம் ஹ்ரீம் ஓம் ||

இதில் தேவையான மந்திரத்தை உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நாளில் அரசு அல்லது ஊண் காலத்தில் ஜெபம் செய்ய ஆரம்பித்து 1008 உரு குறைந்தது 7 நாட்கள் பாராயணம் செய்யவும்.

செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் இவரை வழிபடச் சிறப்பு.

மந்திர சாஸ்திரத்தில் இவரது மந்திரஜபம் கொண்டு சத்ருஜெயம், நேர்மையான காரியங்களில் வெற்றி பெறுதல் எனப் பலவிதமான பிரயோக முறைகள் உள்ளன.தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்று அஞ்சி வெளியிடவில்லை.

இவரது யந்திரத்தை வெள்ளி அல்லது தாமிரத்தகட்டில் வரைந்து முன்னால் வைத்து மந்திரம் ஜெபிக்க விரைவான பலன் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் இவரை ஒரே ஒரு ஆலயத்தில் மட்டுமே பார்க்கலாம்.
கும்பகோணம் மாவட்டம் குடவாசலில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் சேங்காலிபுரம் என்னும் ஊர் உள்ளது. அங்குள்ள ஆலயத்தில் இவரது விக்ரகம் உள்ளது.அங்கு சென்று இவருக்கு பூஜை செய்து மந்திரம் ஜெபித்து வேண்டிக்கொள்வது சிறப்பான பலனைத் தரும்.
 

Latest posts

Latest ads

Back
Top