• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

05 01 2015 ஆருத்ரா தரிசனம்

Status
Not open for further replies.
05 01 2015 ஆருத்ரா தரிசனம்

05 01 2015 ஆருத்ரா தரிசனம்

nataraja4.jpg



மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்

மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.


ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் ஒன்று என்பதை முதலில் பார்த்தோம். இவ்விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது முதலிய தகவல்களை இந்த இடுகையில் காண்போம்.

திருவாதிரை விரதத்தை அனுஷ்டிக்கும் முறை:

ஆருத்ரா என்றழைக்கப்படும் திருவாதிரை தினத்தன்று தான் நடராஜப்பெருமான் முன்னால் வடகயிலையில் மாமுனி பதஞ்சலிக்கும் வியாக்ரபாதருக்கும் தனது ஆனந்த தாண்டவ திருக்கோலத்தை தில்லையில் காட்டியதாக ஐதீகம். தனுர் மாதத்தில் அந்த ருத்ரன் அதிதேவைதையான திருவாதிரை நட்சத்திரமும் (முழுமதியும்) இனைந்து வரும் நாளில் இந்த திருவாதிரை விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. உமா மஹேஸ்வர விரதத்தில் கூறியது போல் அனேகமாக திருவாதிரையும் பௌர்ணமியும் மார்கழியில் இனைந்தே வரும் சில வருடங்கள் மாறி வருவதும் உண்டு, ஆயினும் இவ்விரதம் திருவாதிரை அன்றுதான் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஸ்கந்த புராணத்தில் கூறியுள்ளபடி தனுர்மாத திருவாதிரை அன்று காலை எழுந்து ஆனந்தக் கூத்தாடும் அம்பல வாணரையும் அம்மை சிவானந்த வல்லியையும் ஆத்மார்த்தமாக வணங்கி உடல் சுத்தி செய்து, திருநீறந்து பஞ்சாக்ஷர மந்திரம் ஓதிக் கொண்டு சிவாலயம் சென்று எம்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வித்து, அமுது படைத்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு, நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து அந்த எம்பெருமானையே னைத்துக் கொண்டிருந்து, பொன்னம்பலா, சித் சபேசா, ஆனந்த தாண்டவ நடராஜா, ஆடல்வல்லா, சபாநாதா, கூத்தப்பிரானே, சிற்றம்பலா, ஆனந்த கூத்தா, ஆடிய பாதா , அம்பலவாணா, சிதம்பர தேசிகா, நடன சிகாம என்று பல் வேறு நாமங்களால் போற்றி வணங்கி மறு நாள் காலை எழுந்து முக்கண் முதல்வரை வணங்கி அவரின் அடியவர்களுக்கு அமுது செய்வித்து, பின் தானும் பிரசாதம் புசித்து விரதத்தை முடிக்க வேண்டும்.

திருவாதிரை விரதித்தின் பெருமை:
ஸ்கந்த புராணத்தில் முனிசகேசர், வியாக்ரபாதர் மற்றும் கார்கோடகன் என்ற நாகம் ஆகியோர் இந்த திருவாதிரை விரதத்தை கடைப்பிடித்து ஐயனின் ஆனந்தத் தாண்டவத்தை தரிசனம் செய்யும் பேறு பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது. பரமனிடம் பாற்கடலையே பெற்ற உபமன்யு முனிவரை வியாக்ர பாதர் பெற்றது இவ்விரத மகிமையால்தான். விபுலர் என்னும் பிராம்மணர் இவ்விரத மகிமையால் பூத உடலுடன் திவ்ய வாகனத்தில் திருக்கயிலாயம் சென்று திரும்பி வந்தார், முக்தியும் பெற்றார். திருவாதிரையன்று எம்பெருமான் ஆனந்த நடமாடி களித்திருப்பதால் இவ்விரதத்தை கடைப்பிடித்தால் அவரை எளிதில் திருப்திபடுத்தலாம்.

திருவாதிரை விரதம் இல்லங்களில் கொண்டாடப்படும் முறை:
பல்வேறு இல்லங்களில் இவ்விரதம் வழி வழியாக அனுஷ்டிக்கப் படுகின்றது. தாயாரோ அல்லது மாமியாரோ இவ்விரதத்தை பெண்களுக்கு எடுத்துக் கொடுப்பது வழக்கம் அதாவது இவ்விரதம் நின்று விடாமல் தலைமுறை தலைமுறையாக நடந்து கொண்டு வருகின்றது. எல்லா வீடுகளிலும் ஆனந்த நடராஜப் பெருமானுக்கு திருவாதிரைக் களியும், தாலகமும் படைத்து வழிபடுகின்றனர். பல இல்லங்களில் பெண்கள் தங்கள் தாலி சரட்டை இவ்விரதத்தின் போது மாற்றும் வழக்கமும் உள்ளது.

திருவாதிரைக் களி :

திருவாதிரையன்று நடராஜப் பெருமானுக்கு களியும் தாலகம் என்னும் காய்கறி கூட்டும் தான் பிரசாதமாக படைக்கப்பதுகின்றது. ஒரு வாய்க் களி தின்னாதவர் நரகக்குழி என்பது பழமொழி இதன் மூலம் எம்பெருமானின் பிரசாதத்தின் மகிமை விளங்கும். களி என்றால் ஆனந்தம் என்று ஒரு அர்த்தம் ஒன்று ஆனந்த தாண்டவம் ஆடும் ஐயனை நாம் உண்மையான உள்ளன்புடன் வழி பட்டால் அவர் நமக்கு உண்மையான ஆனந்தமான மோக்ஷத்தை வழங்குவார் என்பதை உணர்த்துவதே களி படைப்பதன் உள்ளார்த்தம்.

ஆனந்தத் தாண்டவம் ஆடும் ஆண்டவனுக்கு களி எவ்வாறு பிரசாதமானது என்ற சுவையான வரலாற்றைப் பற்றி பார்ப்போமா? அது பராந்தக சோழனின் காலம், மன்னன் தில்லை சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்து கொண்டிருந்த சமயம், பராந்தக சோழன் தானே பொன் வேயும் பயை மேற்பார்வை செய்து கொண்டிருந்தான். தினமும் சாயுங்கால வேளையில், சித்சபையிலே நடராஜப் பெருமானுடைய பாத சிலம்பொலியை கேட்ட பின்னரே, தனது இரவு உணவை உண்ணும் வழக்கத்தை கொண்டிருந்தான் மன்னன். அதே சமயம் சேந்தன் என்பவரும் அம்பலவாணரின் மீது அளவிலா பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார். நந்தனாரைப் போல ,தாழ்த்தப்பட்டவராகவும் ,ஏழையாகவும் இருந்தாலும், எம் ஐயன் மேல் சேந்தனார் கொண்டிருந்த பக்திக்கு ஒரு எல்லையே இல்லாமல் இருந்தது. ஆண்டவன் முன் அனைவரும் சமமல்லவா? எனவே தாழ்த்தப்பட்டவராயிருந்தாலும் தனது பரம பக்தனின் பக்தியை உலகறிய செய்ய விரும்பிய அந்த அம்பல கூத்தன் ஒரு நாள் மன்னனுக்கு தன் பாத சிலம்பை ஒலிக்காமல் விட்டு விட்டார். மன்னன் இதனால் மிகவும் வருத்தமடைந்தான், " எம் ஐயா, நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக இந்த தண்டணை என்க்கு? நான் எந்த தவறு செய்திருந்தாலும், தாயினும் தயவுடையவனே ,நீ அதை பொறுத்தருளி அடியேனை காத்தருள வேண்டும்" என்று மனமுருக வேண்டி அந்த கவலையிலேயே மன்னன் உறங்கி விட்டான்.


மன்னனுடைய கனவிலே எம்பெருமான் தோன்றி, மகனே நீ கவலைப்பட வேண்டாம், நான் நேற்று இங்கு இல்லை எனது அன்பன் சேந்தனுடைய இல்லத்திற்கு சென்றிருந்தேன், அவனெனக்கு அளித்த களி விருந்தோம்பலில் மிகவும் மகிழ்ச்சியுற்ற நான் அங்கு இருந்ததால் நாம் உனக்கு என் பாத சிலம்பொலியை ஒலிக்க முடியவில்லை, எனவே நீ கவலைப்பட வேண்டாம் என்று கூறி மறைந்து விட்டார்.

அடுத்த நாள் கருவறையை அர்ச்சகர்கள் திறந்த போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை திடுக்கிட வைத்தது. எம் பெருமானின் திருமேனியெங்கும் களி சிதறி கிடந்தது. அதை கண்ட அவர்கள் மிகப்பெரிய அபசாரம் நடந்து விட்டதே, பூட்டிய கருவறைக்குள் யார் வந்து இந்த பாதக செயலை செய்திருக்ககூடும் என்று மனம் கலங்கி அரசனிடம் சென்று நடந்ததை கூறினார்கள். மன்னனும் தனது கனவில் இறைவன் வந்து கூறியதை அவர்களிடம் விளக்கினார். பின் சேந்தன் என்பவர் யார் என்பதை கண்டு பிடிக்க தனது வீரர்களை அனுப்பினார் ஆனால் அவர்களால் சேந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை.( எவ்வாறு எம்பெருமான் தனது அன்பனை உலகத்தோர் முன் வெளிக் காட்டினார் என்பதை நாளை காண்போம்.)

அன்று முதல் களி எம்பெருமானுக்கு உகந்த பிரசாதமானது. இன்றும் திருவாதிரை நாளன்று நாம் களி படைத்து சித்சபேசனை சிதம்பர நாதரை வழிபடுகின்றோம்.

இன்றைய தினம் ஆருத்ரா தரிசனத்தின் 8ம் திருனாள் தில்லையிலே இன்று ஐயன் எளி வந்த கருணையினால் தானே சித்சபையை விடுத்து வெளியே வந்து மாட வீதிகளில் அன்பர்களுக்கு திருக்காட்சி தர ஏதுவாக சர்வலங்கார பூஷிதராக தயாராகின்றார். எனவே இன்று சித் சபையில் ஐயன் மற்றும் அம்மையின் திருமுக தரிசனம் மற்றுமே கிடைக்கின்றது. வெள்ளை சார்த்தி காட்சி தருகின்றனர் அம்மையும் அப்பனும் இன்று.

மாலை தாருகாவானத்தில் கர்வம் கொண்டு அலைந்த முனிவர்களை கர்வம் அடக்க ஐயன் சுந்தர மூர்த்தியாக சென்று முனி பத்தினிகளை மயக்கி பிக்ஷாடணராக செல்ல, மோகினியாக உடன் சென்ற மஹா விஷ்ணு முனிவர்களை மயக்கினார். சிறிது நேரம் கழித்து உண்மையை உணர்ந்த முனிவர்கள் அபிசார வேள்வி செய்து புலியை அனுப்பினர் சிவபெருமான் அதன் தோலை உரித்து இடையில் ஆடையாகக் அணிந்து கொண்டார். பாம்புகளை ஆபரணமாக அணிந்து கொண்டார். ஆண் மானை கொம்பை உடைத்து இடக்கையில் ஏந்தினார். இறுதியாக யாகத்தை அழித்து அந்த யாக நெருப்பையே கையில் சுடராக ஏந்தி மஹா விஷ்ணுவும், முப்பத்து முக்கோடி தேவர்களும் மகிழ ஆனந்த தாண்டவம் ஆடிய பிக்ஷாடணர் உற்சவம். சுந்தரராக புலியதளாட, திகம்பரராக, ஒயிலாக வளைந்து நின்ற கோலத்தில் தோளில் நாகம் ஆட குண்டோதரன் குடைப் பிடிக்க, திரிசூலத்தை தோளிலே எழிலாக தாங்கி தங்கத்தேரில் மாட வீதி உலா வருகின்றார்.






?????????? ?????? - ????? ??????????????
??????? ???????
??????? ??????? | ??????? - Satsang
Festival
Natarajar ??????????? ??????????: ??????? ??????? - 7
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top