• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Ganesha to be worshipped by all 12 zodiac signs

12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய விநாயகர்கள்

வருஷம் முழுக்க பன்னிரெண்டு ராசிக்காரர்களும் கணபதியை அர்ச்சித்துச் சொல்ல வேண்டிய ஸ்லோகங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசி:

"கரஸ்த கதலீசூத பனசேஷூ கபித்தகம்
பாலசூரியப்ரபம் வந்தே தேவம் பாலகணபதிம்"

என்ற மந்திரத்தை மேஷ ராசிக்காரர்கள் 11 முறை
சொல்லி, வன்னி இலைகளால் பாலகணபதியை அர்ச்சித்து வழிபட மகிழ்ச்சி, மன நிறைவு ஏற்படும்.

ரிஷப ராசி

"நாளிகேராம்ர கதலீகுட பாயச தாரிணம்
சரத் சந்த்ரா பவபுஷம் பஜே பக்தி கணாபதிபம்"

என்ற துதியைக் கூறி, வில்வத்தால் பக்தி கணபதியை வழிபட ரிஷப ராசிக்காரர்களு க்கு ஆன்ம பலம்ஓங்கும்.மிதுன ராசி

மிதுன ராசி:

"ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க்ய புஷ்டிம் பரஸ்பராக்லிஷ்ட நிவேசம்
சத்யா ருணம் பாசஸ்ருணி வஹந்தம்
பயாபகம் சக்தி கணேசமீடே"

எனச் சொல்லி மிதுன ராசிக்காரர்கள் செவ்வரளி மலர்களால் சக்தி கணபதியை வழிபட, குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

கடக ராசி

"பக்வசூத பலபுஷ்ப மஞ்சரீ
இக்ஷூதண்ட திலமோத கைஸ்ஸஹ,
உத்வஹஞ்பரசு ஹஸ்ததே நம
ஸ்ரீ சம்ருத்யுத தேவ பிஞ்கல"

என்ற துதியைக் கூறி, மருக்கொழுந்தால் சித்தி கணபதியை அர்ச்சித்து வணங்க, கடக ராசிக்காரர்களுக்கு காரியம் கைகூடும்.

சிம்ம ராசி:

"நீலாப்ஜம் தாடீமி வீணாசாலி குஞ்ச
அட்ச சூத்ரகம் ததது
உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக"

என்ற மந்திரத்தைச் சொல்லி அருகம்புல்லால் உச்சிஷ்ட கணபதியை வணங்க, சிம்ம ராசிக்காரர்களுக்கு புத்தி கூர்மை, கால நிர்ணய சக்தி ஏற்படும்.

கன்னி ராசி:

"தந்தகல்பலதாபாசம் ரத்நகும்ப அங்குசொஜ்வலம்
பந்தூக கமநீயாபம், த்யாயேத் க்ஷிப்ர கணாதீபம்"

என்ற மந்திரம் சொல்லி மந்தார மலர்களால் க்ஷிப்ர கணபதியை அர்ச்சித்து வழிபட, கன்னி ராசிக்காரர் களுக்கு தடைகள் விலகி, காரிய பலிதம் உண்டாகும்.

துலாம் ராசி:

"பாசாங்குச ஸ்வதம்தாம்ர பலவான் ஆகுவாகன
விக்நம் நிஹந்து ந ஸர்வம் ரக்த வர்ணோ விநாயக"

என்ற மந்திரத்தைச் சொல்லி வெள்ளெருக்கு இலை களால் விஜய கணபதியை வழிபட துலாம் ராசிக் காரர்களுக்கு காரிய வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

விருச்சிக ராசி:

"சிந்தூரபலம் நிபானனம் த்ரிநயனம் ஹஸ்தேச
பாசாங்குஸௌ பிப்ராணாம் மதுமத் கபாலம் அதிசம் சாது சிந்து மௌலீம் பஜே"

என்ற மந்திரத்தைக் கூறி, மாவிலங்க இலைகளால் நிருத்த கணபதியை வழிபட, விருச்சிக ராசிக்காரர்களுக்கு கலைகள் மேலோங்கும்.

தனுசு ராசி:

"சங்கேஷு சாபருகமேஷூ மேஷகுடாரபாச சக்ரம்
விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌரம்"

எனும் மந்திரம் சொல்லி மஞ்சள் நிற மலர்களால் புவன கணபதியை அர்ச்சித்து வழிபட தனுசு ராசிக்காரர்களுக்கு எதிரிகள் தொல்லை ஒழிந்து நலம் ஏற்படும்.

மகர ராசி:

"ஹரித்ராபம் சதுர்பாஹும் ஹரித்னாவதனம் ப்ரபும்
பாசாங்குச தரம் தேவம் மோதகம் தந்த மேவ சபக்தாமய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாசனம்"

என்ற சுலோகத்தைக் கூறி, நீல நிற மலர்களால் ஹரித்ரா கணபதியை அர்ச்சித்து வணங்க மகர ராசிக் காரர்களுக்கு பிறரை வசீகரிக்கும் சக்தி ஏற்படும்.

கும்ப ராசி:

"லம்போதரம் ஸ்யாமநிபம் க ணேசம் கடாக்ஷம்
அட்சஸ்ரஜ ஊர்த்வாபானம் ஸ லட்டுகம்
தந்தமரக்யாப்யாம் வாமேதரப்யஞ்ச ததானமீடே"

என்பதைச் சொல்லி நாயுருவி இலைகளால் ஏகதந்த கணபதியை அர்ச்சித்து வழிபட கும்ப ராசிக் காரர்களுக்கு மனம் ஒருமைப்படும்.

மீன ராசி:

"பாசாங்குச ஸ்வதந் தாம்ர பலவா நாஹ வாஹந
விக்னம நிசந்துரு சொன ஸ்ருஷ்டி தஷோ விநாயக"

எனும் மந்திரம் கூறி தும்பை மலர்களால் சிருஷ்டி கணபதியை அர்ச்சித்து வணங்கி வர, மீன ராசிக்காரர்களுக்கு எண்ணிய எண்ணங்கள் கைகூடும்.

ராசி, நட்சத்திரம் தெரியாதவர்கள் செவ்வாய், வெள்ளிகளில் யோக கணபதியை தியானம் செய்து,

"யோகாரூடோ யோக பட்டாபிராமோ
பாலார்க்காப: ச இந்த்ர நீலாம் சுகாட்ய:
பாசே க்ஷவக்ஷான் யோக தண்டம் ததாநோ ய்
பாயாந் நித்யம் யோக விக்நேச்வரோ நமஹ"

வணங்கி வர எண்ணிய எண்ணங்கள் கைகூடும்.
 

Latest ads

Back
Top