• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Naga Chaturthi

அனைத்து பிரச்சனைகளும் தீர நாக வழிபாடு நல்லது

நாக சதுர்த்தி, நம்முடைய ஜாதகத்தில் இருக்கும் நாகங்கள் தொடர்புடைய தோஷங்களையும், பாம்புகளால் ஏற்படும் பிரச்சனைகள், வாழ்க்கையில் ஏற்படும் பயம் போன்றவற்றை நீக்கும் சிறப்பான வழிபாடு ஆகும். நாகங்களை வழிபடுவதால் நமக்க மட்டுமின்றி நம்முடைய சந்ததியினருக்கும் நாகங்களால் எந்த தோஷமும் ஏற்படாமல் பாதுகாக்கும். நாகரின் எந்த வடிவத்தை வேண்டுமானாலும் இந்த நாளில் வழிபடலாம்.

நாக சதுர்த்தி அன்று கண்டிப்பாக நாகங்களுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். நாக சதுர்த்தி அன்று பெண்கள் கோவிலும், வீட்டில் எந்த முறையில் வழிபட்டால் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும், நன்மைகள் பெருகும் என்பதை தெரிந்து கொள்ளலாம். நாகங்களுக்குரிய மந்திரங்களை இந்த நாளில் சொல்லி வழிபடுவதும் சிறப்பான பலன்களை தரும்.

நாக சதுர்த்தி சிறப்புகள் :

நாக சதுர்த்தி என்பது நாகர்கள் அவதரித்த நாளாகவும், காளிங்கன் என்ற பாம்பினை பகவான் கிருஷ்ணர் அடக்கிய நாளாகவும் கருதி கொண்டாடப்படுகிறது. நாக சதுர்த்தி அன்று நாகங்களை வழிபடுவதால் இந்த பிறவியில் நாமோ, நம்முடைய முன்னோர்களோ அல்லது முந்தைய பிறவிகளிலேயே நாம் நாக இனத்தை சேர்ந்தவர்களுக்கு ஏதாவது தீங்கு விளைவித்து இருந்தால் அதனால் ஏற்பட்ட சாபங்கள், தோஷங்கள் ஆகியவை நீங்கும். பயம், நோய், ஆபத்துக்கள் நீங்கும். திருமண தடை, குழந்தை பேறு பெறுவதில் தடை, புத்திர தோஷம், ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் ஆகியவை நீங்கும். உலகத்தில் உள்ள அனைத்து நாகங்களையும் திருப்திப்படுத்தும் தினமே நாக சதர்த்தி தினமாகும்.


இந்த ஆண்டு நாக சதுர்த்தி ஆகஸ்ட் 08ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. ஆகஸ்ட் 07ம் தேதி இரவு 09.52 மணி துவங்கி, ஆகஸ்ட் 08ம் தேதி இரவு 11.47 வரை சதுர்த்தி திதி உள்ளது. அன்று வியாழக்கிழமை என்பதால் காலை 6 முதல் 07.30 வரையிலான நேரம் எமகண்ட நேரமாகவும், பகல் 01.30 முதல் 3 மணி வரையிலான நேரம் ராகு கால நேரமாகவும் உள்ளது. இதனால் நாக சதுர்த்தி வழிபாட்டினை காலை 07.35 மணி முதல் 08.35 மணி வரையிலான நேரத்திலோ அல்லது 10.35 முதல் 11.30 வரையிலான நேரத்திலோ அல்லத ராகு கால நேரத்திலோ செய்யலாம். ராகு கால நேரத்தில் நாகர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

பெண்கள் செய்ய வேண்டிய நாக சதுர்த்தி வழிபாடு :

நாக சதுர்த்தி அன்று பெண்கள் காலையில் எழுந்து, தலைக்கு குளித்து விட்டு, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று, அங்கிருக்கும் நாகர் உருவத்திற்கு முதலில் உங்கள் கைகளால் தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு பால் ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். அதிகமாக முடியாவிட்டாலும் இரண்டு ஸ்பூன் அளவிற்காவது பால் ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். இது நாகங்களை சாந்திப்படுத்தும். பிறகு நாகத்தை நன்கு துடைத்து விட்டு மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்து, பஞ்சினை முறுக்கி மாலை போல் செய்து, அதில் சிறிதளவு இடைவெளி விட்டு மஞ்சள், குங்குமம் வைத்து, இந்த மாலையை நாகத்திற்கு அணிவிக்க வேண்டும். அதோடு வாசனை மலர்களை சாற்ற வேண்டும். மல்லிகைப்பூவை மாலை போல் அணிவிப்பத சிறப்பானது. வீட்டில் இருந்து பால்பாயசம் செய்து எடுத்துச் சென்று நைவேத்தியமாக படைத்து விட்டு, வீட்டிற்கு எடுத்து வந்து சாப்பிடலாம்.

வீட்டில் நாகரை வழிபடும் முறை :

வீட்டிற்கு அருகில் உள்ள கோவில்களில் நாகர் உருவம் கிடையாது என்பவர்கள் வீட்டிலேயே இந்த வழிபாட்டினை செய்யலாம். வீட்டில் நாகர் உருவம் இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். அப்படி இல்லை என்றால் சிவன், பெருமாள், அம்பாள், விநாயகர் ஆகிய தெய்வங்களின் உருவங்களில் இருக்கும் நாகாபரணத்திற்கு மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்து, தீபாரதனை காட்டி வழிபடலாம். பால்பாயசம் நைவேத்தியமாக செய்து படைத்து வழிபடலாம். "எங்களுடைய குலத்தில் யாராவது நாக குலத்திற்கு எப்போதாவது தீங்கு ஏற்படுத்தி இருந்தால் அதை மன்னித்து, எங்களின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்" என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

சொல்ல வேண்டிய மந்திரங்கள் :

நாக சதுர்த்தி வழிபாடு செய்யும் போது நாகங்களுக்கு உரிய மந்திரங்களை சொல்லி வழிபடலாம்.

1. நாகர் மகா மந்திரம் :

ஓம் அனந்தம் வாஸூகிம்
சேட்சம் பத்மநாபம்
ஸகம்பலம் ஸங்கபாலம்
த்ருதராஷ்டிரம்: தட்சகம்
காளியம்ததா: ஏதானி நவ
நாமானி சமகாத்மனாம்
சாயங்காலே படேநித்யம்
ப்ராதாகாரல விசேஷதக
நஸ்யவிஷ பயம் நாஸ்தி
ஸர்வத்ர விஜயூபவேத்

2. ஸ்ரீ நாகராஜ காயத்ரி

ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹே
நாகமணி சேகராய தீமஹி
தந்நோ நாகேந்த்ர ப்ரசோதயாத்

3. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஐம் மானசா தேவியே நமஹ

4. ஓம் நாகராஜாய நமஹ

5. ஓம் ஆதிசேஷாய நமஹ

6. ஓம் வாசுகியே நமஹ


1723174015331.webp
 

Latest ads

Back
Top