• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Reply to thread

பிரதோஷத்தில் எத்தனை வகைகள்




மாதத்தில் இருமுறை பிரதோஷ வழிபாடு செய்யப்படுகிறது சிவன் ஆலயங்களில். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.



ஆனால் பிரதோஷத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?



தெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள்.




நித்திய பிரதோஷம்.


தினமும்  மாலை வேளையில் சூரிய அஸ்த்தமனத்திற்கு முந்தைய 90 நிமிடங்கள் நித்திய  பிரதோஷம் எனப்படும். இந்த நேரத்தில் தினம் தோறும் சிவனை வணங்குதல் நல்லது.



திவ்ய பிரதோஷம்.


பிரதோஷ  தினத்தன்று துவாதசியும், திரயோதசியும்   சேர்ந்து வந்தால் அது திவ்ய  பிரதோஷம் எனப்படும்.  அன்று மரகத லிங்கத்திற்கு அபிழேகம் செய்தால்  முன்ஜென்ம கர்மம் விலகும்.


தீராத வியாதிகள் தீரும். வழக்கு  தொல்லைகள் அகலும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். இதற்கு வாய்ப்பு  கிடைக்காதவர்கள் பஞ்சலோகத்தால் ஆன சிவலிங்கத்திற்கு அபிழேகம் செய்தும் பூரண  பலனை பெறலாம்.


தீப பிரதோஷம் ( மகா பிரதோஷம் )



சனிக்கிழமையும்  திரயோதசி  திதியும் இணைந்து வருகிற தினம் மகா பிரதோஷம். அன்று முறையாக  விரதம் இருந்து சிவாலயம் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.



உங்கள் வயது என்னவோ அதற்க்கு ஏற்றார் போல் அதே எண்ணிக்கையில்  விளக்கேற்றி வணங்கலாம்.



உதாரணமாக உங்களுக்கு வயது 25 என்றால் 25 விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு.



சப்தரிஷி பிரதோஷம்.

பிரதோஷ  காலத்தில் முறையாக பூஜைகளை முடித்த பின், வெட்ட வெளியில், வானம் முழுமையாக  தெரிகிற இடத்தில் நின்று கவனித்தால் சப்தத ரிஷி மண்டலம் என்று  சொல்லக்கூடிய நட்ச்சத்திர கூட்டம் தெரியும்.



அந்த ரிஷிகளை  வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். ஒரு வேலை வானம் தெளிவாக  தெரியாவிட்டால் கிழக்கு முகம் நின்று சப்த ரிஷிகளை மனதில் தியானித்து  வணங்கலாம்.


ஏகாட்ச்சர பிரதோஷம் 


வருடத்தில்  ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷத்தை  ஏகாட்ச்சர பிரதோஷம் என்பார்கள்.  அன்றைய தினம் சிவாலயம் சென்று ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி வழிபட்டால்  கோடி தோஷம் விலகும்.


அர்த்தநாரி பிரதோஷம்.


வருடத்தில்  இரண்டு முறை மட்டும் மகா பிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம்  என்று பெயர். அந்த நாளில் பிரிந்து வாழும் தம்பதிகள் சிவாலயம் சென்று  வழிபட்டால் ஓன்று சேர்ந்து வாழலாம். மேலும் கருத்து வேற்றுமையோடு வாழும்  தம்பதிகள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் எல்லா நம்மையும் பெறலாம்.  பிரித்தவர்கள் கூடுவார்கள்.



திரிகரண பிரதோஷம்.


வருடத்திற்கு  மூன்று முறை பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள். இதை  முறையாக கடைபிடித்தால் இல்லாமை என்ற சொல் இல்லாமல் போய்விடும்.  அஷ்ட  லக்ஷ்மிகளின் அருளாசியும் கிட்டும்.


பிரம்ம பிரதோஷம் 


 பிரம்மாவிற்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்க,ஒரு வருடத்தில் வரும்  நான்கு சனிக்கிழமைகளில் வந்த சனி பிரதோஷத்தை முறையாக கடைப்பிடித்து சாப  விமோசனம் பெற்றார். நாமும் இந்த பிரதோஷத்தை கடிபிடித்தால் முன்னோர் சாபம்,  முன்வினை பாவம் எல்லாம் விலகிவிடும்.

 


ஆட்சரப பிரதோஷம் 


 வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்க்கு இந்த பெயர். தாருகா வனத்து ரிஷிகள் தான் என்ற அகந்தை கொண்டு ஈசனை எதிர்த்தனர்.






Back
Top