• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Reply to thread

*தாய்ப்பால்*

 

 தாய்ப்பால் கொடுத்துவரும் தாய்மார்களுக்குக் குழந்தை பிறந்து நான்கு   மாதங்கள் வரை மாதவிடாய் தள்ளிப்போகும். இது அடுத்த குழந்தைக்கான    வாய்ப்பைத் தள்ளிப்போட பெரிதும் உதவுகிறது. ஆனால், இதற்கு மாறாக சிலருக்கு   மாதவிடாய்ச் சுழற்சி ஏற்படவும் செய்யலாம். அது அவர்களது  உடல் அமைப்பு,   ஹார்மோன் மாற்றத்தைப் பொருத்தது அமைகிறது. பிரசவக் காலத்தில், ஜெஸ்டேஸ்னல்   டயபட்டிஸ் (Gestational Diabetes)  பாதிப்பு இருந்தால் தாய்க்கு டைப்-2   சர்க்கரை வியாதி வரும்.

  

 ஆனால், தாய்ப்பால் கொடுத்து வந்தால் இந்தச்  சர்க்கரைப் பாதிப்பும்  வருவதில்லை. மேலும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம்  தாயின் மன அழுத்தம்   குறைந்து ஒருவிதமான திருப்தியை உணர முடியும் சிலர்,  ''குழந்தை பிறந்த  சமயத்துல எனக்குப் பால் நிறைய சுரந்துச்சு. ஆனா இப்போ  பால்  சுரக்கவே  மாட்டேங்குது'' என்று சொல்வார்கள்.

  

 குழந்தை பிறந்த  முதல் ஐந்து நாட்கள் அனைத்துத் தாய்மார்களுக்கும்  தாய்ப்பால் அதிகம்  சுரப்பது இயல்புதான். அதன் பிறகு பால் ஊட்டும்   முறையைப் பொருத்துதான்  தாய்ப்பால் சுரப்பும் அமையும். மார்பகக் காம்பில்  வலி, வெடிப்பு, ரத்தம்  வருதல் மற்றும் காம்பு வெளிறிப்போய்  காணப்படுவது  போன்ற பிரச்னைகள்  ஏற்படலாம். குழந்தை மார்பகத்தில் வாய் வைக்கும் முறை  தவறாக இருந்தால்  ஏற்படக்கூடிய பிரச்னைகள்தான்  இது.

  

 இதற்கு தாய்ப்பாலை எடுத்து  பாதிப்பு உள்ள இடத்தில் தடவினாலே போதுமானது.  குழந்தை மார்பகக் காம்பில்  மட்டுமே வாய்வைத்துப் பால்  குடித்தால்,  மார்பகத்தில் உள்ள குழாயில் ஏதாவது  ஒன்று அடைத்துக்கொள்ளும். இப்படிக்  குழாய் அடைத்துக்கொண்டால் அந்தக்  காம்புப் பகுதியில் ஒரு  புள்ளி  தோன்றும். கூடவே வலியும் இருக்கும்.  தாய்ப்பாலும் சரியாக வெளிவராது.

  

 இதைத் தவிர்க்க வெதுவெதுப்பான  தண்ணீரைக் கொண்டு அந்த இடத்தைச் சுத்தம்  செய்துவிட்டு, மார்பகத்தை மசாஜ்  செய்துவிட்டாலே போதும்.  அதேபோல்,  தாய்ப்பால் கொடுத்த உடன் மார்பகத்தைச்  சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம்  செய்ய வேண்டும். தாய்ப்பால் என்பது  குழந்தைக்கான  வெறும் உணவு மட்டும்  அல்ல... தாய்க்கும் சேய்க்கும் இடையே  நெருக்கமான பிணைப்பையும் ஏற்படுத்தக்  கூடிய உணர்வும் இதுதான்!

  

 

 

  Source: Dinakaran


Back
Top