• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Reply to thread

“மனத்தை வெல்வது மா தவருக்கும் அரிதே!

மனத்தை வெல்லப் பக்குவம் பெறவேண்டும்.


 அனுபவித்துப் பின் அடக்க வேண்டும் மனத்தை.

அனுபவிக்காது துறப்பது என்றுமே ஆபத்தானது.


 சாந்தம், அறிவு, ஆத்ம விசாரம் உடையவன்

சம்சார வாழ்க்கையினால் பந்தப்படமாட்டான்.


 இருப்பான் சமபுத்தி கொண்டவனாக – இல்லை

இன்பம்  லாபத்தாலோ, துன்பம் நஷ்டத்தாலோ.


 விதித்த வேத கர்மங்களைச் செய்யும் ஒருவன்

விரும்பக் கூடாது அந்தக் கர்மங்களின்  பலனை.


 அர்ப்பணிக்க வேண்டும் அவற்றை ஈஸ்வரனுக்கு;

ஆனந்த மயமான ஆத்ம  அனுபவம் பெறுவதற்கு.


 ஆள்கின்றேன் மன்னனாக மிதிலையை -னால்

வாழ்கிறேன் நான் சமபுத்தியுடன் யதேச்சையாக.


 சுகமும் இல்லை, துக்கமும் இல்லை எனக்கு;

சுலபம் ஜீவன் முக்தனாவது  பற்றை ஒழித்தால்!


 அனுபவிக்கின்றேன் அரசவாழ்வின் போகங்களை

அடைவதில்லை அவற்றில் பற்றோ, விருப்பமோ!


 கடமைகளைச் செய்ய  வேண்டும் திறமையாக;

உடமை கொள்ளக்கூடாது அவற்றின் பயன்களை!


 காணும் பொருட்கள் அனைத்தும் பந்தப்படுத்தும்;

காண இயலாத பொருட்கள் நம்மை பந்தப்படுத்தா!


 பேதங்களை உணரச் செய்வது மனிதனின்  மனம்;

வேதனை, சாதனையை உணர்த்துவது மனித மனம்.


 பரமாத்மாவை அடைய முடியும் அனுமானத்தால்

பரமாத்மாவை அடைய விடாது தடுப்பதும்  மனம்!


 பந்த மோக்ஷங்களுக்குக் காரணம் மனித மனம்;

இந்திரியங்களோ, தேஹமோ, ஜீவனோ அல்ல.


 பற்றும், வெறுப்பும்  தோன்றுவது மனத்தால்

பகைவன், நண்பன் என்ற பேதங்கள் மனத்தால்.


 பேதங்கள் தோன்றுகின்றன  மன விகாரத்தால்,

பேதங்கள் மறையும் மன விகாரம் மறைந்தால்!


 1# 18d.Devi Bhaagavatam (Skanda 1 and 2)



Back
Top