• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Reply to thread

அஷ்டகா, அன்வஷ்டகா, திஸ்ரேஷ்டகா

முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடியது ஆன தர்ப்பணங்களின் வரிசைகளை பார்த்துக்கொண்டு என்ற வகையிலே மேலும் தொடர்கிறார்.





அதிலே நாம் அடுத்ததாக பார்க்கக் கூடியதான மிக முக்கியமான புண்ணியகாலம் #அஷ்டகா_ஸ்ராத்தம். #திஸ்ரோஷ்டகா_என்று_பஞ்சாங்கத்தில் #போட்டிருப்பார்கள்.



*முதலில் இந்த அஷ்டகா புண்ணிய காலத்தை எப்பொழுது செய்ய வேண்டும், என்று பார்த்த பிறகு இதை நாம் எதற்காக செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.*





*இதற்கான ஒரு சரித்திரத்தையே தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது. மார்ககஷிச மாசம் புஷ்ய மாசம் மாக மாசம் பால் குண மாசம் இந்த அஷ்டகா சிராத்தம் கூட சாந்திரமான படிதான் தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.*



*மார்கழி மாதம் மாசி பங்குனி தை இந்த நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச த்தில் வரக்கூடிய, சப்தமி அட்டமி நவமி, இந்த மூன்று நாட்களில் நாம் இந்த புண்ணிய காலத்தை அனுஷ்டிக்க வேண்டும்.*



*இதனுடைய முக்கியத்துவத்தை பார்த்துதான் மகரிஷிகள் நமக்கு சப்த பாக யஞ்கியங்களில் இந்த அஷ்டகாவை தனியாக வைத்திருக்கிறார்கள்.*





*இந்த ஷண்ணவதி 96 தர்ப்பணங்களை நாம் பண்ணுகிறோம் குறைந்தபட்சம் ஒரு வருடத்தில். இதில் எந்த ஒரு புண்ணிய காலமும் பாக அல்லது ஹவிர் யஞ்கியங்களில் வரவில்லை.*



நாற்பது சம்ஸ்காரங்களிலும் வரவில்லை. #ஆனால்_இந்த_அஷ்டகா #ஸ்ராத்தம்_40_சம்ஸ்காரங்களில் #சொல்லப்பட்டிருக்கிறது.





*சப்த பாக யஞ்கியங்களில் ஒன்று தான் இந்த அஷ்டகா ஸ்ராத்தம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதினால் தான் நாற்பது ஸம்ஸ்காரங்களில் இதை வைத்து கொடுத்திருக்கிறார்கள்*





இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இதை விடவே கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி சீ மந்தத்தையும் குழந்தைக்கு ஜாத கர்மாவையும் விடக் கூடாதோ, நாம கர்மாவையும் செய்யாமல் இருக்கக் கூடாதோ,

அதேபோல்தான் இந்த அஷ்டகா புண்ணிய காலத்தையும் செய்யாமல் இருக்கக் கூடாது என்று மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர்.



இதற்கு திஸ்ரோஷ்டகா என்று மூன்று புண்ணிய காலங்கள் வரும். மார்கழி மாதத்தில் வரக்கூடிய கிருஷ்ண பக்ஷத்தில் சப்தமி அஷ்டமி நவமி.



அதேபோல் தை/மாசி/பங்குனி மாதத்திலும் வரக்கூடிய கிருஷ்ண பக்ஷத்தில் சப்தமி அஷ்டமி நவமி இப்படி 3 நாட்களாக நான்கு மாதங்களும் வரும்.





இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சௌனகர் என்கின்ற மகரிஷி சொல்கின்ற பொழுது, ஹேமந்த ருது சிசிர ருது மார்கழி தை மாசி பங்குனி இந்த நான்கு மாதங்களும், இந்த ருதுக்களில் வரும். இதை செய்யவேண்டுமென்று மகரிஷி நமக்கு காண்பித்திருக்கிறார்



ஸ்ராத்தம் பார்வனமாக செய்ய வேண்டும். பொதுவாக நாம் தர்ப்பணம் செய்யும் போது பிதுர் பிதாமஹ பிரபிதாமஹ மாத்ரு பிதாமஹி

பிரபிதாமஹிகள் மாதாமஹ மாது பிதாமஹ மாது பிரபிதாமஹ, மாதாமஹி மாது பிதாமஹி மாது பிரபிதாமஹி இதுதான் வர்க்கத்துவயம் என்று சொல்கிறோம்.





இந்த வர்க்கத்துவயம் எப்படி ஆராதிக்கிறோம் என்றால், ஒவ்வொரு ஸ்ராத்தங்களிலும் ஒவ்வொரு விதமாக அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.





தர்ப்பணம் ஆக நாம் செய்யும் பொழுது அதில் எந்த மாற்றமும் தெரியாது ஒரே மாதிரியாக செய்து விடுவோம். ஆனால் இதை சிராத்தம் ஆக செய்யும்பொழுது, அதில் நிறைய விசேஷங்கள் வருகிறது.





இந்த அஷ்டகா சிராத்தத்தில் எப்படி என்றால், தாயார் வர்க்கத்திற்கு தனியாக வரணம் செய்ய வேண்டும்.

பொதுவாக இந்த ஷண்ணவதி அனைத்து ஸ்ராத்தங்களிலும் தாயாரும் தகப்பனாரும் சேர்ந்துதான் ஒரு வர்க்கம்.

அதேபோல் மாதாமஹர் மாதா மஹி ஒரு வர்க்கம்.





ஆனால் ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் தாயாருக்கு தனியாக ஒரு வர்க்கம் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது வருடாவருடம் நாம் தாயாரை உத்தேசித்து செய்யக்கூடிய சிராத்தத்தில்,

நாந்தி சிராத்தத்திலும் கயையில் செய்யக்கூடிய ஸ்ராத்தத்திலும், #தாயார்_வர்க்கத்திற்கு #தனியாக_வரணம்_உண்டு.





அதேபோல்தான் இந்த #அஷ்டகா #சிரார்த்தத்திலும்_தாயார்_வர்க்கத்திற்கு தனியாக ஒரு வரணம் சொல்லப்பட்டிருக்கிறது.

ஏனென்றால் அங்குதான் விசேஷங்கள் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.



*அந்த சரித்திரத்தை பார்க்கும்போது அந்த விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே நாம் தகப்பனாரையும் தாயாரையும் ஒரு வர்க்கமாக செய்தாலும்,

எப்படி நாந்தி சிராத்தத்தில் தாயாருக்கு தனியாக ஒரு வர்க்கம் செய்கின்றோமோ, அதே போல் தான் இந்த அஷ்டகா சிராத்தத்திலும் தாயாருக்கு தனியாக செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*





*அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இந்த அஷ்டகா சிராத்தத்தில் 4 மாதத்தில் மூன்று மூன்றாக 12 தர்ப்பணங்கள் வருகின்றன இந்த அஷ்டகா புண்ணியகாலம்.*






*இதை அன்ன சிராத்தம் ஆக காண்பித்திருக்கிறார்கள்*

*மேலும் தர்ப்பணம் ஆக செய்யலாம் என்றும் காண்பித்து இருக்கிறார்கள்.

குறைந்தபட்சம் தர்ப்பணமாகவாது செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.*





*இதை ஏன் அன்ன ரூபமாக செய்யக்கூடாது என்றால் செய்யலாம் ஆனால் நிறைய நியமங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. மூன்று நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டிவரும்.

நியமங்கள் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது முடிந்தால் செய்யலாம். தர்ப்பணமாக செய்வதற்கு தர்ம சாஸ்திரத்தில் விசேஷங்கள் காண்பித்திருக்கிறார்கள்*





*இந்த அஷ்டகா தர்ப்பணத்தை செய்யாவிடில் தோஷங்களும் காண்பிக்கிறார்கள். இதை யார் தெரிந்து கொள்ள வில்லையோ அல்லது தெரிந்து கொண்டும் செய்யவில்லையோ, அவர்கள் தரித்திரம் ஆக போய்விடுகிறார்கள்.

அதாவது பணம் இல்லாமல் இருப்பவர்கள் தரித்திரர்கள் ஆகவும், அதேசமயம் பணம் இருந்தும் அனுபவிக்க முடியாதவர்களும்

தரித்திரர்கள் என்ற ஒரு நிலையானது நமக்கு ஏற்படுகின்றது என்று ஒரு முக்கியத்துவம் சொல்லப்பட்டு இருக்கிறது இந்த அஷ்டகா புண்ணிய காலத்திற்கு.*







*மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*



முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம் பெற்றோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான ஷண்ணவதி தர்ப்பணம் விவரங்களை மேலும் தொடர்கிறார்.



அதில் நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டு வரக்கூடிய தான அஷ்டகா புண்ணியகாலம். மிகவும் முக்கியமானது ஒன்று





நாற்பது சம்ஸ்காரங்களில் இதுவும் ஒன்றாக நமது மகரிஷிகள் காண்பிக்கின்றனர். சப்த பாக யஞ்கியங்களில் ஒன்று.

பாக யக்ஞங்கள் ஏழு:- அஷ்டகா; ஸ்தாலி பாகம்; பார்வணம்; ஆக்ரஹாயணி;ஶ்ராவணீ; சைத்ரீ;ஆஶ்வயூஜீ.

ஹௌபாசனம் செய்கின்றவர்கள், அனைவரும் செய்ய வேண்டியது இந்த அஷ்டகா புண்ணியகாலம்.





இது நித்தியமாக சொல்லப்பட்டு இருக்கிறது அதாவது கட்டாயம் செய்ய வேண்டும். (பிரத்தியவாயம்) அதாவது செய்யாமல் விட்டால் வரக்கூடிய தான பாவத்திற்கு இந்தப் பெயர்.



ஆனால் இந்த அஷ்டகா புண்ணிய காலத்திற்கு செய்யாமல் விட்டால் தோஷங்களும் சொல்லப்பட்டிருக்கிறது.

#நரகம்தான்_கிடைக்கும்_இந்த_அஷ்டகா #புண்ணிய_காலத்தை_செய்யாவிடில் #என்று_தர்ம_சாஸ்திரம்_காண்பிக்கிறது.





இப்படி நிறைய எச்சரிக்கைகள் செய்து அதை கட்டாயம் செய்ய வேண்டும் என்று காண்பிக்கின்றது.

ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம் என்றால் புராணங்கள் இதனுடைய பெருமைகளை நிறைய காண்பிக்கின்றது.





*முக்கியமாக பிரம்ம வைவர்த்த/வாயு புராணங்களும் இதனுடைய பெருமையை காண்பிக்கின்றது.

#ஸ்திரீகளுக்கு_மிகவும்_முக்கியமான #சிராத்தம்_இந்த_அஷ்டகா_ஸ்ராத்தம்.



பொதுவாக தர்ப்பணங்களில் தகப்பனார் வர்க்கம் செய்யும் பொழுதே தாயார் வர்க்கமும் சேர்ந்து வந்துவிடும்.

அதாவது எல்லா இடங்களிலும் பதியோடு சேர்ந்து வந்துவிடும். தகப்பனாருடன் தாயாருக்கும் அதில் பாகம் வந்துவிடும்.





முக்கியமாக சில இடங்களில் தாயாருக்கு தனி வரணம் உண்டு. விருத்தி அதாவது நாந்தி சிராத்தம். இதில் தாயார் வர்க்கத்திற்கு தனியாக பூஜை உண்டு.

வருடாவருடம் தாயாருக்கு செய்யக்கூடிய தான ஸ்ராத்தம். கயாவில் செய்யக்கூடியது ஆன ஸ்ராத்தம். (மாத்துரு ஷோடசி), மற்றும் இந்த அஷ்டகா ஸ்ராத்தம்.





இவைகளில் எல்லாம் தாயார் வர்க்கத்திற்கு தனியாக பூஜை சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் அந்த அளவுக்கு முக்கியத்துவம் என்று இந்தப் புராணங்கள் சொல்லும் பொழுது, அதாவது நாம்

வழக்கமாக தர்ப்பணம் செய்யும் பொழுது, ஸ்திரீகள் யார் யாரெல்லாம் உத்தேசித்து நாம் செய்கின்றோமோ, அவர்கள் அத்தனை பேரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இந்த அஷ்டகா சிராத்தத்தில்.





#மேலும்_ஸ்திரீகளுக்கு_பொதுவாகவே #நிறைய_எதிர்பார்ப்புகள்_இருக்கும்_அது #நிறைவேறவில்லை_என்றால்_அதற்காக #ஒன்றும்_வருத்தப்பட்டு_கொள்ள #மாட்டார்கள்_ஆனால்_அவர்களால்



#எதிர்பார்த்ததை_நாம்_நிறைவேற்ற #முடியவில்லை_என்பது_ஒரு #தாபம்தான்.





*அந்த மாதிரியான தாபங்களை இந்த அஷ்டகா சிராத்தம் மூலம் நிறைவேற்றப்படுகிறது என்பதை ஒரு சின்ன சரித்திரம் மூலம் பிரம்ம வைவர்த்த/வாயு புராணமும் காண்பிக்கிறது.*



#அதாவது_பித்ருக்கள்_மூன்று_விதமான பிரிவுகளாக இருக்கின்றனர். #சோமப் #பிதுர்மான்_பிதரோ_பரிகிஷதஹா, #அக்கினி_ஸ்வாதாஹா என்று மூன்று பிரிவுகள்.

இங்கு பிரிவு என்பது இவர்களுக்கு உள்ளேயே பிரிவு என்று நினைக்கக்கூடாது. ஸ்தானம் என்று பெயர். இதை தனித்தனியாகப் பிரித்துக் காண்பித்து இருக்கின்றனர்.





#அதிலே_இந்த_அக்னி_ஸ்வதாஹா #என்கின்ற_பிதுருக்கள்_யாகம் #செய்தவர்கள்_அக்னிஹோத்திரம் #செய்து_இந்த_பூமியிலே_யாகம_செய்த #ஸ்தானத்தை_அடைந்தவர்கள்.



ஒரு சமயம், இந்த அக்னி ஸ்வதாஹா என்கின்ற பிதுருக்கள் இடத்திலே ஒரு கன்னிகா இருந்தாள். ஒரு குழந்தை பெண். அவளுக்கு பெயர் அச்சோதா என்று பெயர்.

ஒருசமயம் அவள் வெளியிலே சஞ்சாரம் செய்து கொண்டு வரும்பொழுது, அமாவசு என்ற ஒரு பிதுர் வர்க்கத்தை சேர்ந்த ஒரு யுவா அவனைப் பார்த்து இவள் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.





*கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு அவனிடத்திலே கேட்கிறாள், அமாவசு என்கின்ற அவன், அவளைப் பற்றிய எந்த விவரமும் கேட்காமல் அவள் கேட்ட

உடனேயே திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னவுடன் இருவரும் தொப்பென்று இந்த பூலோகத்தில் வந்து விழுந்து விட்டனர்*



ஏனென்றால் அவர்கள் இருவரும் ஞாதிகள் (பந்துக்கள்) பங்காளிகள்.





#ஒரே_கோத்திரத்தில்_ஒருவருக்கொருவர்_திருமணம்_செய்து_கொள்ளக்கூடாது. இவர்களுக்குத் தெரியாமல் அப்படி கேட்டதினால்,

அவர்களுடைய அந்த பிதுர் பாவமானது போய்விட்டது, உடனேயே இங்கே பூமியில் வந்து விழுந்து விட்டார்கள்.





*எப்படி விழுந்தாள் என்றால் அந்த கன்னிகா அச்சோதா என்கின்ற ஒரு நதியாக ஆவிர்பவித்தாள். இந்த அமாவசு என்கின்ற அவர் ஒரு கல்லாக போய்விட்டார் அந்த நதிக்கரையில்.

இப்படி இந்த இரண்டு பேரும் பூமியிலே வந்து விழுந்து துக்கப்பட்டார்கள். அவர்களுக்கு நாம் இருவரும் ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்து போய்விட்டது.*





*மிகவும் துக்கப்பட்டு அழுதாள். இதைப் பற்றி தெரிந்த உடன் அக்கினி ஸ்வாதாஹா என்கின்ற பித்ருக்கள், எல்லோரையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்தார்கள். இரண்டு பேரையும் பார்த்து வருத்தப்பட்டார்கள் பிதுருக்கள்.*





*அவர்களுக்கு இந்த துக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வழியை சொன்னார்கள். என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*

முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணங்கள் வரிசையை பார்த்துக்கொண்டு என்ற வகையில் அஷ்டகா சிராத்தம் பெருமைகளை மேலும் தொடர்கிறார்.*



*இந்த அஷ்டகா ஸ்ராத்தம் பெருமைகளை முக்கியமாக ஸ்திரீகளை உத்தேசித்து செய்யக்கூடிய தர்ப்பணம்.*





*இதற்கான ஒரு சரித்திரத்தை பிரம்ம வர்த்த புராணமும் வாயு புராணமும் காண்பிக்கின்றன. அந்த சரித்திரத்தில் அச்சோதா என்கின்ற கன்னிகை, ஒரே கோத்திரத்தில் உள்ள ஒரு பையனை திருமணம் செய்து கொள்ள

ஆசைப்பட்ட தோஷத்தினால், இந்த பூமியிலே நதியாக ஆவிர் பவித்து ஓடினாள். அந்த நதிக் கரையினிலே அமாவசு என்கின்ற பிதுர் வர்க்கத்தை சேர்ந்த ஒரு யுவா கல்லாக விழுந்தான்.*





*அவர்கள் இருவரும் துக்கப்பட்டனர். அந்த நதி எப்படி ஓடுகின்றது என்றால் பூமியில் இறங்காமல் ஓடுகிறது. பூமியிலே தண்ணீர் இறங்க வேண்டும் அப்போதுதான் அது

சாரவத்தாக இருக்கும். ஆனால் இந்த நதி கருங்கல்லிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது அந்தக் கருங்கல் யார் என்றால் இந்த அமாவசு என்கின்ற யுவா.*





*ஆகையினாலே அந்த நதியானது யாருக்கும் பயன்படாமல் பூமியில் ஓடிக்கொண்டிருந்தது. தன்னை நினைத்துக் கொண்டு மிகவும் வெட்கப்பட்டாள் அந்த கன்னிகை.

இப்படி ஒரு தப்பை நாம் செய்துவிட்டோமே நம்முடைய ஞாதி களிலேயே ஒருவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நினைத்தது எவ்வளவு பெரிய தவறு.*





*ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு ஞாதிகள் என்று பெயர். இப்படி ஒரு தப்பை நான் செய்து விட்டேனே என்று வருத்தப்பட்டு அழுதாள்.

அவள் தன்னுடைய தகப்பனார் வர்க்கத்தில் உள்ள பிதுருக்களை நினைத்து பிரார்த்தனை செய்தாள்/அழுதாள்.*





*நான் ஒரு வயதின் கோளாறு காரணமாக இந்த தப்பை செய்துவிட்டேன், என்னை நீங்கள் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அழுதாள்.



ஒரு துஷ்டன் இடத்திலே போய் ஒரு ஸ்திரீ மாட்டிக்கொண்டால் எவ்வளவு கஷ்டப்பட்டு (சுதந்திரமாக நம் வீட்டிற்கு போய் வாழ வேண்டும் என்று) அழுவாளோ

அதேபோல் பித்ருக்களை நினைத்து தபஸ் பூராவும் வீணாக போய் விட்டதே என்று அழுதாள்.*





*அப்படி இருக்கும் பொழுது, அங்கே வந்து சேர்ந்தனர் பித்ருக்கள் அனைவரும். அவள் மிகவும் வருத்தப்பட்டு இப்படி நீ செய்யலாமா நாங்களெல்லாம் இருக்கும் போது

எங்களிடம் நீ கேட்க வேண்டாமா, என்று அவளிடம் சமாதானமாக தன்மையாக சொல்லி, வாஞ்சையோடு கூட ஒரு யோசனை சொன்னார்கள்.*



நீ மனதினால், ஒரே கோத்திரத்தில் உள்ளவனை கல்யாணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்று நினைத்ததால், அந்த பாவத்தை நீ அனுபவித்து தான் தீர வேண்டும்.

அதுவரையிலும் இந்த பூமியிலிருந்து நீ வர முடியாது.





இந்த பூமியில் இருந்து தான் அந்த பாவத்தை நீ அனுபவித்து ஆகவேண்டும்.


 அதற்குப்பிறகு எங்களால் உனக்கு நல்லது செய்ய முடியும் என்று சொல்லி,

அவர்கள் சொல்லும் பொழுது நீ இந்த பாவத்தை சீக்கிரமாக அனுபவித்து முடித்து, இந்த இருபத்தி எட்டாவது மன் வந்திரமான வைவஸ்த மனு ஆரம்பிப்பதற்கு முன்னால்,

ஒரு நல்ல குலத்திலே நீ ஆவிர்பவிப்பாய். ஒரு உத்தமமான புத்திரனை நீ அடைவாய்.


 நல்ல இடத்திலே உனக்கு திருமணமாகி, நல்ல புத்திரனே நீ அடைவாய் அவனை எல்லோரும்

பாராட்டும் விதமாக, ஸ்திரீகளுக்கு ஜென்மம் எடுத்ததற்கான பயன் எப்பொழுது, ஒரு புத்திரனை அவள் பெற்றெடுத்த உடன் ஜென்மம் பயனுள்ளதாக அமைகிறது.





#புத்திரன்_என்று_ஒருவன்_பிறக்க #வேண்டும்_ஸ்திரீகளுக்கு_அதன்பிறகு #அவர்களுக்கு_உத்தமமான_லோகம் #கிடைக்கும்_காத்துக்கொண்டிருக்கிறது.



இதைத்தான் நாம் இராமாயணத்தில் பார்த்தோமேயானால் இராமன் பிறந்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள் என்று சொல்கின்ற இடத்திலே,

தசரதர் மற்றும் அந்த ஊர் மக்கள் மிகவும் பேரானந்த பட்டார்கள் என்று சொல்வதற்கு முன்னால்,

கௌசல்யை மிகவும் சந்தோஷப்பட்டாள் பிரகாசமாக இருந்தாள் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடுகிறார் முதலில்.*


Back
Top