• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Reply to thread

ஏனென்றால் புத்திரன் என்று ஒருவன் பிறந்த விட்டவுடன் நம்முடைய ஜென்மம் பயனுள்ளதாக ஆகிவிட்டது என்று, இனி நாம் ஜெபமும் தபசு பூஜைகள் ஹோமங்கள் செய்து அடுத்த ஜென்மம் நன்றாக கிடைக்க வேண்டுமே,

இந்தப் பிறவியில் எல்லா சுகங்களையும் அடைய வேண்டுமே என்று, அதற்கான முயற்சிகளை நாம் செய்ய வேண்டியது இல்லை, புத்திரன் என்ற பிறந்து ஆகிவிட்டது,

இனி நமக்கு சத்கதி தான் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, கௌசல்யா மிகவும் சந்தோஷமாக இருந்தாள் என்று வால்மீகி தனியாகவே இராமாயணத்தில் காண்பிக்கின்றார்.*





*காரணம் ஸ்திரீகளுக்கு புத்திரன் என்ற பிறந்தவுடன் பிறவிப்பயன் ஆனது கிடைத்து விடுகின்றது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த பித்ருக்களும் இந்த கன்னிகைக்கு அதையே சொல்கின்றனர்.*





#உனக்கு_நல்ல_இடத்தில்_திருமணம் #ஆகி_ஒரு_நல்ல_புத்திரன்_உனக்கு #கிடைப்பான்_அவன்_பிறந்த #மாத்திரத்திலேயே_உனக்கு_நல்லr_கதி #கிடைத்து_ஒரு_ஸ்தானத்தை_அடைவாய் #என்று_பிதுருக்கள்_அனுகிரகம் #செய்கின்றனர்.





*அந்த உத்தமமான புத்திரனும் அனைவராலும் பாராட்டப் பெறுவார், அவன் லோகத்திற்கு பெரிய உபகாரங்களை செய்யக் கூடியவனாக இருப்பான், அனைவரும் தினமும் நினைத்துப் பார்க்கக்கூடிய புத்திரனாக அவன் இருப்பான்.*





*அப்படி ஒரு புத்திரனை நீ அடைந்த மாத்திரத்திலேயே இந்த பாவமானது சுத்தமாக நீங்கிப் போய்விடும்.

திரும்பவும் இது போல் கெட்ட எண்ணங்கள் உன்னுடைய மனதிலே உருவாகாது, இப்படியாக பிதுருக்கள் அந்த கன்னி கைக்கு அனுகிரகம் செய்கின்றனர்.*





*உன்னையும் உன்னை மாதிரி பாலிய வயதில் நினைத்துப் பார்க்கக் கூடாததை நினைத்து பார்த்ததினால் வந்த பாவமும்,

பாவத்தினால் ஏற்பட்ட தோஷங்களினுடைய ஸ்திரீகளும் கல்யாணம் செய்துகொண்டு எந்த சுகத்தையும் அடைய முடியாமல் காலம் ஆகிவிட்ட ஸ்திரீகளுக்கும்,

கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கல்யாணம் செய்யாமலேயே காலமான ஸ்திரீகளும்,

கர்ப்பத்தில் இருக்கின்ற போதே காலமான ஸ்திரீகளுக்கும் இவர்கள் அத்தனை பேருக்கும் உத்தேசித்து அஷ்டகா என்கின்ற ஒரு சிராத்தத்தை அனைவரும் செய்வார்கள்,



அதன்மூலம் இதுபோல் உள்ள ஸ்திரீகள் அனைவருக்கும் பாகங்கள் கிடைக்கும் அத்தனை ஸ்திரீகளின் உடைய சாபங்களும் பாவங்களும் நிவர்த்தியாகும்,

அந்த அஷ்டகா சிராத்தத்தை செய்கின்றவர்களுக்கு தீர்க்கமான ஆயுள், ஆரோக்கியத்தை பூரணமாக அடைவார்கள்

என்று பிதுர்க்கள் அனுக்கிரகம் செய்து, இந்த அஷ்டகா சிராத்தம் எப்போது நடக்கும் என்றால் உத்தராயணம் பிறந்து இதை அனைவரும்

செய்வார்கள் அதன்மூலம் ஸ்திரீகள் அனைவருக்கும் பூரணமான திருப்தி கிடைக்கும் என்று சொல்லி அனுகிரகம் செய்தார்கள்.



*மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்*

முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம் முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான தர்மங்களின் வரிசைகளை மேலும் விளக்குகிறார்.*



*அதில் அஷ்டகா புண்ணிய காலத்தின் பெருமைகளை ஒரு சரித்திரத்திலிருந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.*





*அப்படி பித்ருக்களின் உடைய அனுக்கிரகத்தினால் நதியாக ஓடக்கூடிய அச்சோதா என்கின்ற கன்னிகை,

அந்தப் பாவத்தை அனுபவித்து முடித்த பிறகு, அந்த கன்னிகை தான் சத்திய வதியாக ஆவிர்பவிக்கிறாள் பூலோகத்தில் ஒரு மீனவக் குடும்பத்தில்.

அந்த சத்தியவதிக்கு ஒரு புத்திரன் பிறக்கிறான் அவர்கள்தான் #வியாசர் என்று நாம் சொல்கிறோம்.



*வியாசாச்சார்யாள் விஷ்ணுவினுடைய அவதாரமாகவே பிறந்திருக்கிறார். காரணம் அந்த பிதுருக்களின் சினேகத்தின் மூலம்

அவர்களின் பரிபூரண அனுகிரகத்துடன் பிறந்ததன் மூலம் மகாவிஷ்ணுவே வியாசர் ஆக வந்து பிறந்தார் இந்த பூலோகத்தில்.*





ஆகையினாலே தான் #வ்யாஸாய #விஷ்ணு_ரூபாய_வ்யாஸ_ரூபாய #விஷ்ணவே_என்று_சொல்கிறோம்.

விஷ்ணுவும் வியாசரும் வேறு அல்ல இருவரும் ஒன்றே தான் அவர் தான் பகவான் நாராயணன் ஆக ஆவிர்பவித்தார் என்று பார்க்கிறோம்.





*பித்ருக்கள் அனுக்கிரகம் செய்து, இந்த அஷ்டகா ஸ்ராத்தம் செய்ய வேண்டிய முறைகளையும் அவர்களே காண்பிக்கின்றனர்.

இப்படி சொல்லிக் கொண்டு வரும்பொழுது, ஸ்ராத்தங்கள் மூன்று விதமாக இருக்கின்றன. நித்தியமாக/நைமித்தியமாக/காம்மியமாக செய்யக்கூடியது.*





*நித்தியமாக செய்யக்கூடியது நாம் பார்த்து கொண்டு வரக்கூடியது ஆன ஷண்ணவதி தர்ப்பணங்கள், இவைகள் நித்தியம் என்று பெயர்.*



*நைமித்திகம் என்றால் ஒரு கிரகண புண்ணிய காலத்தில், செய்யக்கூடிய தான தர்ப்பணம். சிராத்தத்தை முடித்த பிறகு ஸ்ராத்தாங்கமாக

செய்யக்கூடிய தர்ப்பணம். ஒரு தீட்டு வந்துவிட்டால் அது போகக்கூடியதற்கான தர்ப்பணம். இவைகளெல்லாம் இதில் வரும்.*





*காமியம் என்று ஒன்று இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட பலனை உத்தேசித்து செய்யக்கூடியதான சிராத்தாங்க தர்ப்பணம்.

காம்ய ஸ்ரார்த்தம் என்று சொல்லி யிருக்கி றார்கள்*



*ஒரு குறிப்பிட்ட பலனை உத்தேசித்து செய்ய வேண்டுமானால் அதற்கான சிராத்தத்தை செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காண்பித்துள்ளது.*



*அந்த ஸ்ராத்தத்தை முடித்த பிறகு செய்யக்கூடிய தான தர்ப்பணம் மற்றும் ஒரு சில புண்ணிய காலங்களில் செய்யக்கூடிய தர்ப்பணம். இவைகளுக்கு காமியம் என்று பெயர்.*



*இப்படி மூன்றாகப் பிரித்து அதில் இந்த அட்டகா புண்ணிய காலத்தில் செய்யக்கூடிய தர்ப்பணம் நித்தியம் என்று சொல்லி,

இந்த நான்கு மாதத்தில் செய்யக்கூடியதான இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலம் நான்கு விதமாக ஸ்திரீகளுக்கு பலனை/திருப்தியை கொடுக்கிறது.





*முதலில் செய்யக்கூடியது ஐன்திரி மார்கழி மாதம் வரக்கூடியதான புண்ணியகாலத்தின் பெயர். அதாவது தர்ம சாஸ்திரம் இதை நமக்கு இரண்டு விதமாக காண்பிக்கின்றது.*



*மூன்று நாட்கள் செய்யக்கூடியது ஆன சப்தமி அஷ்டமி நவமி. இதிலே சப்தமி அன்று முதலில் செய்யக்கூடியதற்கு, ஐன்திரி, அஷ்டமி அன்று செய்யக்கூடியதற்கு பிராஜாபத்தியம் என்று பெயர். மூன்றாவதாக செய்யக்கூடிய அதற்கு வைஸ்யதேவிகி என்று பெயர்.*





*இப்படி இதைப் பிரித்து இருக்கிறார்கள் இந்த நான்கு மாதத்திலேயே, செய்யக்கூடிய தான தர்ப்பணங்களை நான்காகப் பிரித்து இருக்கிறார்கள்.*



அதில் முதலில் செய்யக்கூடியதான தர்ப்பணத்தின் மூலம் நம்முடைய வம்சத்திலே யாகங்கள் செய்து இருந்து வந்த குடும்பத்திலுள்ள ஸ்திரீகள் இறந்தது அவர்களுக்கு ரொம்ப திருப்தியை கொடுக்கின்றது.







இரண்டாவதாக செய்யக்கூடியது பிராஜாபத்தியம் விவாகம் செய்துகொண்டு நிறைய சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, வசதிகள் இருந்தும் ஆனால் அனுபவிக்க முடியாமல்,

புத்திரன் மூலமாக சம்ஸ்காரம் செய்யப்படாமல், எதிர்பார்த்த பலனை பெற முடியாமல் உள்ள ஸ்திரீகளுக்கு திருப்தியை கொடுக்கின்றது.



*மூன்றாவது கர்ப்பத்திலேயே இந்த வம்சத்தில் வந்த பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பிறக்க முடியாமல், கருக்கலைப்பு ஏற்பட்டதன் மூலம் பிறந்த ஸ்திரீகள்,

பிறந்து கன்னிகா பருவத்தில், இறந்த ஸ்த்ரீகள், கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கல்யாண வயது வரை வந்து கல்யாணம் செய்து கொள்ளாமல் இறந்த ஸ்திரீகள், இவர்களுக்கு போய் சேருகின்றது.*





*நான்காவதாக செய்யக்கூடியதான இந்த அஷ்டகா சிராத்தத்தில், குறைபட்ட ஸ்திரீகள், சுமங்கலிகளாக இருந்து,

குறைபட்டு போன ஸ்திரீகள், நம்மால் பாகம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு இறந்த ஸ்திரீகள், அதாவது தாய் மாமா இருக்கின்றார்

ஆனால் அவருக்கு குழந்தைகள் இல்லை, அப்போது அவர்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்,

அதே போல் நம்மை சுற்றியுள்ள பந்துகள், நாம் செய்ய வைக்க வேண்டும் அல்லது செய்யணும், என்று ஆசைப்பட்டு இருந்து செய்ய முடியாமல் போனால்,

அல்லது அவர்கள் எதிர்பார்த்தும் நடக்க முடியாமல் போன ஸ்திரீகள், இவர்களுக்கு திருப்தியை கொடுக்கின்றது,

இந்த அளவுக்கு இந்த புராணம் முக்கியத்துவத்தை காண்பித்து, நித்தியமாக சொல்லி, கட்டாயம் அஷ்டகா புண்ணிய காலத்தில் நாம் செய்ய வேண்டும்.*





இதில் கட்டாயம் இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலத்தில், #நம்மிடம் #எவ்வளவு_செல்வங்கள்_இருக்கிறதோ

அவ்வளவையும் செலவு பண்ணி இதை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும் இந்த அஷ்டகா சிராத்தத்தில்.





*அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதை செய்யவில்லை என்றால் இதே போல் நமக்கும் தூக்கங்கள் ஏற்படும் அதற்கு நாம் வாய்ப்பு கொடுக்க கூடாது.*



*இதை நாம் செய்வதினால் நமக்கும் நம்மை சுற்றி உள்ள சந்ததியினருக்கும் நமக்கு அடுத்த தலைமுறைகளும் சௌக்கியமே கிடைக்கும் . அதனாலே இதை நாம் கட்டாயம் செய்ய வேண்டும்.*





*எப்படி ஒரு பசுமாடு, மடி நிறைய பாலை வைத்துக்கொண்டு நீ கறந்து எடுத்துக்கோ என்று நம்மிடத்தில், காத்துக்கொண்டு இருக்குமோ,

அதுபோல பித்ருக்கள், இந்த அஷ்டகா புண்ணிய கால தர்ப்பணங்களை எதிர்பார்த்து, நீங்கள் எல்லோரும் செய்து உங்களுடைய துக்கங்களை நீங்கள் போக்கிக் கொள்ள வேண்டும்,

நான் போக்குவதற்கு தயாராக இருக்கிறேன், அப்படி பித்ருக்கள் வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம்தான் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.*





*பசுமாட்டை கறக்காமல் விட்டால் நஷ்டம் நமக்குத்தான். அதுபோல நம்முடைய பிதுருக்கள் இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆகையால் நாம் அதை எதிர்பார்த்து அவர்களுக்கு செய்ய வேண்டியதான இந்த புண்ணிய காலத்தை செய்து, அவர்களுடைய அனுக்கிரகத்தை நாம்

பூரணமாக அடைய வேண்டும் என்று,இந்த சரித்திரம் நமக்கு காண்பிக்கின்றது அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.*



*இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலத்தில் அஷ்டகா சிராத்தம் செய்யாமல் இருந்தால் நமக்கு இந்த நாற்பது ஸம்ஸ்காரங்களில் ஒன்று விட்டு போகும்.*





*அப்படி விட்டு போனால் நாற்பது சம்ஸ்காரங்கள் இதுவும் ஒன்று, நமக்கு தோஷங்கள் ஏற்படும். நாம் மிகவும் எதிர்பார்த்து இருந்த ஸ்திரீகளியினுடைய உடைய சாபங்களுக்கு ஆளாக வேண்டி வரும்.*



*மேலும் நமக்கு ஸ்கந்த புராணம் சொல்லும் பொழுது யார் ஒருவன் இந்த அஷ்டகா ஸ்ராத்தம் செய்யவில்லையோ அவன் கயை சென்று எட்டு விதமான ஸ்ராத்தங்களை அவன் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.*





*இப்பொழுது கயா போனால் கூட அங்கு செய்து வைப்பார்கள். அஷ்டகயா சிரார்த்தம் என்று செய்து வைக்கிறார்கள்.

இந்த எட்டு சிராத்தங்களை செய்தால்தான் அஷ்டகா செய்யாததினால் வந்த தோஷங்கள் போக்கும் இன்று காசிகண்டம் நமக்கு காண்பிக்கிறது.*





*இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலம். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.


  அன்வஷ்டகையை மாசி சிராத்தம் மாதிரி செய்ய வேண்டும்.






சிராத்தங்கள்:--மாசி சிராத்தம்:--மாசி சிராத்தம் நித்ய கர்மாகளில் இதுவும் ஒன்று. க்ருஷ்ண பக்ஷத்தில் ஏதேனும் ஒரு திதியில் தொடங்கி , ஒவ்வொரு மாதமும் அதே திதியில் செய்ய வேண்டும். இது, பிதா , பிதாமஹர்., ப்ரபிதாமஹர் என்ற மூவரை உத்தேசித்து செய்ய படுகிறது.



ஆனால் பித்ருக்கள் பூஜிக்கபடும் இடத்தில் மாதா மஹாதிகளும் பூஜிக்க பட வேன்டும் என விதித்திருப்பதால் , புராணம், ஸ்மிருதியின் படி தாயின் தந்தை, பாட்டனார், அவர் தகப்பனார் ஆகியோரையும் சேர்த்து இரு



வம்சத்திற்கும் , ஹோமம், ப்ராஹ்மண போஜனம், பிண்ட ப்ரதானம் ஆகியவற்றுடன் செய்ய படுகிறது. இன்று செய்யபடும் சிராத்தங்கள் அனைத்திற்கும் இதுவே முன் மாதிரியாகும். இந்த காலத்தில் இது முடியாது.



இதை ஒற்றி வருவதே தர்ச சிராத்தமாகும். இதன் விக்ருதிகளே (96) ஷண்ணவதி சிராத்தங்கள். .ஒரு வருடத்தில் செய்ய வேன்டுவன .இவற்றில் ஒவ்வொன்றிர்க்கும் சிற்சில மாறுதல் உண்டு.



தாய் தந்தையருக்கு செய்யப்படும் ப்ரத்யாப்தீக சிராத்தம்,, கிரஹண, மற்றும் புண்ய கால தர்பணங்கள். முதலியன மாசி சிராத்தத்தை அடிபடையாக கொண்டு செய்ய படுபவை. ஆனால் இவை ஸப்த பாக யக்ஞங்களில் சேராதவை.



இவை ஜீவத்பித்ருகனுக்கு (( தந்தை உயிருடன் இருக்கும்போது)) கிடையாது. ஆனால் மாசி சிராத்தம் தந்தை உயிருடன் இருக்கும் போதும் ஹோமம் வரை செய்ய வேண்டும்.என்பது ரிஷியின் அப்பிப்ராயம். தந்தைக்கு யார் தேவதைகளோ அவர்களே இவனுக்குமாவார். .



ஒளபாசன அக்னியில் பிண்டபித்ரு யக்ஞம் செய்ய வேண்டும்.. அஷ்டகா சிராத்தத்தை ஒரு போதும் விடக்கூடாது. தை அமாவாசையை அடுத்து வரும் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி ஏகாஷ்டகை எனப்படும்.

அந்த தேவதையை குறித்து ஹோமமும் பித்ரு, பிதாமஹர், ப்ரபிதாமஹர். மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, விஸ்வேதேவர் இருவர் ஆக எட்டு ப்ராஹ்மனர்களை வரித்து செய்வதால் அஷ்டகா என்று பெயர்.



அஷ்டகா தேவதை பித்ருக்களுக்கு நாம் அளிக்கும் ஹவிஸை அமோகமாக அளவற்றதாக ஆக்கி காமதேனு பால் சுரப்பது போல் சுரப்பதாக கூற பட்டுள்ளது. ஸம்வத்ஸர தேவதையின் பத்நியாகவும் ஏகாஷ்டகை கூறப்பட்டுள்ளது.



மனிதர்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி அறிவை தரும் உஷஹ் கால தேவதையும் ஏகாஷ்டகையே. இவளே யாகங்களை செய்விப்பவள் என்றெல்லாம் மிக உயர்வாக கூறப்பட்டுள்ளது.



உரல் அம்மி முதலியவையும் இந்த அஷ்டகா சிராத்தம் செய்வதில் உத்ஸாகத்துடன் ஈடுபடுவதாக வேதம் கூறுகிறது. இந்த காலத்தில் உரல் அம்மி கிடையாது.இதை செய்பவனுக்கு , ஸந்ததி, சாரீர பல விருத்தி, மற்றும் வைதீக கர்மாக்களில் சிரத்தை செய்யக்கூடிய பாக்யம் ஏற்படுகிறது. என்று கூறுகிறது.



இதை கலி யுகத்தில் ஸ்ம்ருதியில் கூறப்பட்டபடி செய்ய முடியாது.



எனவே ரிஷிகள் தத்யஞ்சலி (தயிர்) ஹோமம் எனும் அனுகல்பத்தை விதிதுள்ளனர்.

இம்முறைகளில் அவதான முறைப்படி கையில் தயிரை எடுத்துக்கொண்டு ஒளபாஸனாக்னியில் ஏகாஷ்டகையை குறித்து ஹோமம் செய்வதாகும்.



( பிறகு சிராத்த முறைப்படி ப்ராஹ்மண போஜனம்) மறுநாள் அன்வஷ்டகை.

அன்வஷ்டகையை தர்ச சிராத்தம் போன்றே வர்கத்வய பித்ருக்களை உத்தேசித்து செய்யபடுவது ஆகும். விஸ்வேதேவர், பித்ரு , மாத்ரு, மாதாமஹர், விஷ்ணு என ஐந்து ப்ராஹ்மணர்களை வரித்து சிராத்தம் செய்வது..



05-03-2021; 06-03-2021;07-03-2021 இந்த நாட்களில் அஷ்டகா சிராத்தமோ, தர்பணமோ ஓய்வு பெற்றவர்கள் செய்யலாமே.




நமது தர்ம சாஸ்த்திரம் புத்தகத்திலும் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. புரட்டாசி மாதத்திலும், மாசி மாதத்திலும் பித்ருக்களுக்கு அன்னம் அளிக்கவேண்டும். என்று அறிவிக்கிறது. தை மாதத்திற்கு 6ம் மாதம் ஆடி மாதம்; சித்ரைக்கு 6ம் மாதம் ஐப்பசி ( துலா மாதம்.) புரட்டாசிக்கு 6ம் மாதம் மாசி மாதம் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.


Back
Top