த்துக் கொண்டிருந்தார்கள். இந்த நான்கு காரியங்களை வைத்துக்கொண்டு சௌக்கியமாக இருந்தார்கள் நம் முன்னோர்கள்.*
*இந்த நாட்களில் இந்த நான்குமே நாம் விட்டுவிட்டோம். பித்ரு காரியங்களை நாம் குறைத்து விட்டதால் இந்த நாட்களில் இவ்வளவு சிரமங்களை நாம் அனுபவிக்க நேரிடுகிறது. ஆகையினாலே இவைகளை விடக்கூடாது இதற்கான பிராயச்சித்தங்கள் என்ன சொல்லியிருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.*
2/12/2020**முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் நாம் ஏதாவது ஒன்றை செய்ய முடியாது போனால் அதற்கான பரிகாரமாக மந்திர ஜெபங்கள் செய்வதைப் பற்றி மேலும் தொடர்
*அமாவாசை அன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் விட்டுப் போனால் அதற்காக ஜெபிக்க வேண்டிய மந்திரங்களை பார்த்தோம்.*
*அடுத்ததாக யுகாதி புண்ணிய காலத்தை பார்ப்போம். வருடத்தில் நான்கு முறை வரக்கூடிய இந்த புண்ணிய காலத்தில் நாம் செய்யாமல் விட்டு விட்டால், ரிக் வேதத்தில் ஒரு மந்திரம் இருக்கிறது நயசத்தியாவா என்று, அதை நூறு தடவை நாம் ஜெபிக்க வேண்டும் அப்படி செய்தால் இந்த யுகாதி விட்டு போனதாக ஆகாது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*
*அடுத்ததாக மன்வாதி புண்ய காலம். இதை நாம் செய்யத் தவறி விட்டோமே ஆனால், தும்புவஹா என்று ஒரு மந்திரம் ரிக் வேதத்தில் இருக்கிறது. சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு அந்த இடத்திலேயே நின்று கொண்டு நூறு தடவை இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அப்படி செய்தால் அந்த மன்வாதி புண்ய காலம் செய்ததாக ஆகிறது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது. இதே மந்திரம் தான் திஸ்ரோஷ்டகாவை விட்டுவிட்டாலும் செய்ய வேண்டும். மார்கழி தை மாசி பங்குனி இந்த நான்கு மாதங்களில் வரும் சப்தமி அஷ்டமி நவமியில் செய்ய வேண்டியது.*
*இது மிகவும் முக்கியம் திஸ்ரோஷ்டஹாவை பற்றி சொல்லும் பொழுது, தாயார் தகப்பனார்களுக்கு கர்மா செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வருடத்தில் வேறு எந்த சிராத்தமும் நாம் செய்யக்கூடாது. இந்த ஷண்ணவதியும் நாம் தர்ப்பணம் ஆகத்தான் செய்ய வேண்டும் ஷகிரன் மாஹாளயம் கூட அந்த வருடம் கிடையாது.
ஆனால் இந்த திஸ்ரோஷ்டஹா புண்ணிய காலம் மட்டும் அவசியம் செய்ய வேண்டும் விட்டே போகாது. அவசியம் செய்ய வேண்டும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தும்புவஹா மந்திரம் தான் திஸ்ரோஷ்டகாவை விட்டுவிட்டாலும் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு அந்த ஜலத்திலே நின்றுகொண்டு 100 தடவை ஜபிக்க வேண்டும்.*
*அதேபோல மாஹாளயம் விட்டு போய்விட்டால், ஷகிரன் மாஹாளய சிராத்தம் விட்டு போய்விட்டால் அதற்கான துரோஅஸ்வஸ்யா என்று ஒரு ரிங் மந்திரம் இருக்கிறது ரிக் வேதத்தில். அந்த மந்திரத்தை தினமும் பத்து தடவை இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து ஜெபித்து கொண்டு வரவேண்டும். அப்படி செய்தோமே ஆனால் அந்த வருடம் நாம் செய்ய வேண்டிய ஷகிரன் மாஹாளயம்*
*சிராத்தம் செய்யாததினால் வரக்கூடிய பாவம் போகிறது, பித்ரு சாபம் வராமல் இருக்கும்.*
*மஹாளய பக்ஷத்தில் இரண்டு விதமாக நாம் செய்கிறோம். ஒன்று பக்ஷ மஹாளயம் 16 நாட்களுக்கு தர்ப்பணமாக செய்வது, மற்றொன்று ஷகிரன் மஹாளயம். இந்த ஷகிரன் மஹாளயம் விட்டுப் போனால் இந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*
*இந்த மாதிரியான ரிங் மந்திரங்கள் ரிக் வேதத்தில் இருப்பதினால் நாம் ரிக் வேதம் தெரிந்தவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நமக்கு செய்ய முடியவில்லை என்றால் சமுத்திர ஸ்நானம் தான் செய்ய வேண்டும். அதே புண்ணியகாலம் திரும்பவும் வருவதற்குள் நாம் மகா சங்கல்பம் என்று ஒன்று செய்து கொண்டு சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டும்.*
*அப்படி நாம் இந்த மகா சங்கல்பத்தை செய்யாவிடில் அடுத்த அதே புண்ணியகாலம் செய்வதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. அப்படி செய்யாவிடில் அது ஒரு குறைபாடாகவே இருக்கும். அதாவது நமக்கு ஒரு கால் இல்லை என்றால் எப்படி இருக்கும் அதே போல். அதாவது ஊனமாக இருக்கும்.*
*அதனால் நாம் மகா சங்கல்பம் செய்து கொண்டு அதற்கான பரிகாரங்களை செய்து விட்டு நாம் மேற்கொண்டு கர்மாக்களைச் செய்ய வேண்டும்.*
*மூன்று புண்ணிய காலங்களுக்கு இந்த ரிங் மந்திரங்கள் பரிகாரமாக சொல்லப்படவில்லை. அதாவது சங்கரமணம் (மாதப்பிறப்பு) வைதிருதி வ்தீபாதம். பராசர ஸ்மிருதி லே இதற்குப் பரிகாரமாக சஹஸ்ர காயத்ரி சொல்லப்பட்டிருக்கிறது. 1008 காயத்ரி மந்திரத்தை கண்டிப்பாக நாம் செய்ய வேண்டும் இந்த மூன்று புண்ணிய காலங்களும் விட்டு போனால். அதனால் இந்த ஷண்ணவதி தர்ப்பணங்கள் மிக மிக முக்கியம் கட்டாயம் செய்ய வேண்டும்.*
*இவ்வளவு நாட்களாக செய்யவில்லையே என்றால் அதனால் தப்பில்லை, 1, 2 தர்ப்பணம் ஆக பழக்கத்திற்கு கொண்டுவந்துவிடலாம் 15 நிமிட நேரம் தான் அந்த தர்ப்பணம். இவைகளை எல்லாம் விடாமல் நாம் செய்து வந்தோமே ஆனால் பித்ரு சாபங்கள் வராது. தில ஹோமம் எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் வராது. க்ஷேத்திரங்களுக்கு எல்லாம் போய் நாம் செய்யவேண்டிய கர்மாக்கள் நிர்பந்தங்கள் எல்லாம் வராது. இப்படி சுலபமாக தான் நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.*
*மகரிஷிகளும் சுலபமாகத் தான் இந்த பரிகாரங்களை நமக்கு சொல்லி இருக்கிறார்கள். இந்த ஷண்ணவதி அனைத்தையும் சிராத்தம் ஆகத்தான் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தால், எவ்வளவு சிரமம் நமக்கு. அப்படி இல்லாமல் தர்ப்பணம் ஆக செய்யலாம் என்று வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள் மிகப் பெரிய உபகாரம்.*
*இந்த ஷண்ணவதியை அவசியம் தர்ப்பணமாக செய்ய வேண்டும். சிராத்தமாக இருக்கின்றன பிரயோகம் தெரிந்து கொள்ள வேண்டும். அது எல்லாம் நாம் தெரிந்து கொண்டு எழுதி வைத்துக்கொண்டு குறித்துக்கொண்டு தான் ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்து 1, 2, செய்துவிட்டு பிறகு விட்டுவிடுவது என்பது கூடாது. இப்படி மெதுவாக நாம் தர்ப்பணம் ஆக செய்ய 1, 2 ஆரம்பித்து பிறகு இந்த 96 ஆராயும் நாம் செய்வதற்கு பிதுருக்கள் நமக்கு ஆசிர்வதிப்பார்கள். மிகவும் முக்கியமானதாக மனதில் நினைத்து செய்ய வேண்டும். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
முசிறி அண்ணா நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம்முடைய முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான ஷண்ணவதி தர்ப்பணம் முறையை விரிவாகப் பார்த்தோம். மேலும் சில புண்ணிய கால தர்ப்பணங்கள் விட்டுப் போயிருந்தால் அதற்கு என்ன பரிகாரம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இருக்கிறோம்.*
*இந்தப் பரிகாரங்கள் செய்ய வேண்டியதற்கான பலன் என்ன என்று பார்க்கும்போது, நாம் செய்யவேண்டிய கர்மாக்களில் நித்தியம் என்று சில சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது கட்டாயம் செய்தே தீர வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் விடக்கூடாது.*
*சந்தியாவந்தனம்/ஹௌபாசனம்/பிரம்மச்சாரிகளுக்கு சமிதாதானம்/தாயார் தகப்பனார்களுக்கு செய்யவேண்டிய சிராத்தம் இவைகள் நித்திய கர்மா என்று சொல்லப்பட்டிருக்கிறது எக் காரணத்தைக் கொண்டும் விடக்கூடாது.*
*இவைகள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிர்பந்தம் காரணமாக விட்டு போனால், அதற்கு என்ன பரிகாரம் என்று பார்க்கின்ற பொழுது, மூன்று விதமாக மகரிஷிகள் பிரித்து நமக்கு காண்பிக்கின்றனர்.*
*அதாவது சில நித்திய கர்மாக்களை விட்டு விட்டோம் என்றால் அது விட்டதுதான். அதை திரும்பவும் நம்மால் திருப்ப முடியாது. சில நித்திய கர்மாக்களை விட்டு போனால் அவை அனைத்தையும் சேர்த்து செய்வதற்கு சில வழிகளை காண்பித்துள்ளனர். சில நித்திய கர்மாக்களை விட்டு போனால் எவ்வளவு காலம் விட்டுப்போனது அவ்வளவு காலங்களையும் திரும்ப செய்ய வேண்டும்.*
*இப்படி மூன்று விதமாக இருக்கிறது இதில் முதலில் சந்தியாவந்தனம் எடுத்துக் கொண்டோமேயானால், சந்தியாவந்தனம் ஒரு வருடம் 3 வருடம் ஐந்து வருடம் 10 வருடம் விட்டு போனால் அவை அனைத்திற்கும் சேர்த்து ஒரு சந்தியாவந்தனம் ஆகவோ, அல்லது அதற்கு மாற்று வழியாக ஒரு கர்மாவையோ, நமக்கு மகரிஷிகள் காண்பிக்கவில்லை.
அப்போது என்ன செய்ய வேண்டும், எவ்வளவு சந்தியாவந்தனம் விட்டுப் போயிருக்கு என்று நமக்கு தெரிந்தால் ஒரு வேளைக்கு 10 சந்தியாவந்தனம் ஆக செய்துகொண்டு அதை முழுமையடையச் செய்ய வேண்டும். பத்துவருட காலம் சந்தியாவந்தனம் விட்டு போய்விட்டது என்றால் பத்து பத்து காயத்ரி ஆக செய்து அதை முடிக்க வேண்டும்.*
*அதேபோலதான் சிராத்தங்களும். நம் தாயார் தகப்பனாருக்கு செய்யவேண்டிய சிராத்தம் விட்டு போனால் எத்தனை காலம் ஆனாலும் அதைச் செய்தே தீர வேண்டும். அதற்கான மாற்று வழி கிடையாது. ஒரு பத்து வருடம் ஸ்ராத்தம் செய்யப்படவில்லை அல்லது முறையான வகையில் அது செய்யப்படவில்லை என்றால், முதலில் சமுத்திர ஸ்நானம் செய்து, அத்தனை சிராத்தங்களையும் செய்து கொண்டே வர வேண்டும். தினம் ஒன்றாக செய்ய வேண்டும் அதை எல்லாம் சேர்த்து செய்வது என்பது கிடையாது.*
*இன்னும் சில நித்திய கர்மாக்களுக்கு, விட்டுப் போனால் அதற்கு மாற்று வழி ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மேலும் அந்த பரிகாரங்களுக்கு எல்லாம் என்ன பலன் என்று பார்க்கும்பொழுது, சில பரிகாரங்கள் விட்டுப்போனதை பூர்த்தி செய்கின்றன. விட்டுப் போனது போனது தான் என்றில்லாமல், விட்டு போனதினால் வரக்கூடிய பாவத்தையும் போக்கி, நாம் செய்ததாக ஆக்குகிறது சில பரிகாரங்கள்.*
*இன்னும் சில பரிகாரங்கள் விட்டுப் போனால் விட்டுப் போனது தான். ஆனால் அடுத்ததை செய்வதற்கான அதிகாரத்தை சில பரிகாரங்கள் கொடுக்கிறது. இன்னும் சில கர்மாக்கள் விட்டு போனால் விட்டு போனதுதான் ஆனால் அன்றைக்கு செய்வதான அதிகாரத்தை நமக்கு கொடுக்கிறது.*
*இப்படி மூன்று விதமாக பரிகாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பொழுது ஹௌபாசனம், கல்யாணம் ஆன தினத்திலிருந்து ஆரம்பமாகிறது. தொடர்ந்தார் போல் ஒரு பத்து வருடம் விட்டுப் போய்விட்டது என்றால், அது விட்டது விட்டதுதான். அதற்கான பாவத்தை நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும். ஆனால் நாம் ஒரு தாம்பாளத்தில் அரிசியை வைத்து ஹோம திரவிய தானம் என்று நாம் செய்கிறோம். ஸ்வர்ண தானிய ஆஜ்ய கிர்சரம் என்று நாம் செய்கிறோம்.*
*நான்கு வேளைக்கு மேல் ஒருவன் ஹௌபாசனம் செய்யாமல் இருந்தால், நான்கு விதமான தானங்களை அவன் செய்ய வேண்டும். தானியம் ஸ்வர்ணம் நெய் மற்றும் கிரிச்சரம் இந்த நான்கையும் அவன் செய்தால்தான், அவன் அடுத்த வேளை ஹௌபாசனம் செய்ய முடியும். இப்படி பரிகாரம் சொல்லப்பட்டிருக்கிறது.*
*இதற்கு என்ன பலன் என்றால், விட்டுப்போன பாவம் விட்டுப் போனது தான் ஆனால் அன்றைக்கு செய்ய வேண்டிய கர்மாவிற்கு அதிகாரத்தை கொடுக்கிறது. இதைத்தான் நாம் நம்முடைய சிராத்த தினத்தன்று அக்னி சந்தானம் ஹௌபாசனம் செய்கிறோம். அந்த தானத்தை செய்தால் அன்றைக்கு செய்ய வேண்டிய சிராத்தத்தை செய்ய அதிகாரம் நமக்கு கிடைக்கிறது.*
*ரொம்ப காலம் விட்டு போய் விட்டது என்றால் சிராத்தம் முடிந்த உடனேயே அந்த அக்னியை நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான். தொடர்ந்து செய்து கொண்டு வரக்கூடாது. இப்படி அன்றைய தினத்தில் செய்ய வேண்டியதற்கான அதிகாரத்தை கொடுக்கிறது சில பரிகாரங்கள்.*
*இன்னும் சில பரிகாரங்கள் மேற்கொண்டு செய்வதற்கான அதிகாரத்தை நமக்கு கொடுக்கிறது. இப்படி மூன்று விதமான பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது அதிலே இந்த சண்ணவதி தர்ப்பணம் செய்யாது விட்டு போனால் அதற்கான பரிகாரங்கள், மற்றும் அதற்கு என்ன பலன் என்றால், சில மந்திர ஜபங்கள் விட்டதை செய்வதாக ஆக்குகிறது. சிலவை விட்டது விட்டதுதான்.*
*சிலவைகள் அடுத்த புண்ணிய கால தர்ப்பணம் செய்வதற்கான அதிகாரத்தை நமக்கு கொடுக்கிறது. முதலில் தர்ச ஸ்ராத்தம் விட்டு போனால், அம்மாவாசையன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் விட்டு போனால் அதற்கான பரிகாரத்தை நாம் பார்த்தோம். நியூக்ஷூசாசம் என்று ஒரு மந்திரத்தை நூறு முறை ஜெபிக்க வேண்டும் என்று பார்த்தோம்.*
*அதற்கு என்ன பலன் என்றால், அந்த மந்திரத்தை ஜெபித்து பிறகு விட்டது செய்ததாகவே ஆகிறது என்று சொல்லப்பட்டது. என்ன காரணத்தினால் இந்த பரிகாரம் விட்டுப்போனது என்றால் அதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது.*
*ஒரு தீட்டு காலத்தில் 10 நாள் அல்லது மூன்று நாள் வருகிற பொழுது அந்த சமயத்திலே அமாவாசை வந்துவிட்டால், அப்படி விட்டுப் போனால் அதற்கு தோஷம் கிடையாது. அந்த தீட்டை நாம் காப்பதினால் இந்த அமாவாசை சிராத்தம் நாம் செய்ததாக ஆகிறது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது. அதனால் விட்டுப்போன கணக்கிலேயே வராது.*
*அதேபோல, நாம் தாயார் தகப்பனார் களுக்கு செய்கின்ற சிராத்தம் அந்த நாளில் அமாவாசை சிராத்தம் வந்தால், அதுவும் விட்டு போனதாக ஆகாது. செய்ததாகவே கருதப்படும். ஒரு பிரயாணத்தில் நாம் இருக்கிறோம் அல்லது பஞ்சாங்கம் பார்க்காமல் விட்டு விட்டோம் என்றால் அந்த நேரத்தில் தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.*
*இப்படி ஒவ்வொரு புண்ணிய காலத்திற்கும் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன அது என்ன என்பதை மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*