• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

The Nine Lakshmis that give peace according to Adisankar

திரு ஆதிசங்கரர் கூறிய நிம்மதியைத் தரும் ஒன்பது லட்சுமிகள்

ஒவ்வொருவரின் பிறந்த தேதி-மாதம்-வருடம் இவற்றை கூட்டி வரும் எண் விதி எண்ணாகும்.அந்த எண்ணிற்குரிய இலக்குமியை வேண்டி பிரார்த்தனை செய்தால்,செல்வத்தால் ஏற்படும் கஷ்டங்கள் குறையும்.மனஅமைதி பெறலாம் .

ஆதிலட்சுமி எண்: 1- க்கு உரியவர் ,சூரியனை பிரதிபலிப்பவர். மன சாந்தியைத் தருபவர்.

சந்தானலட்சுமி எண்: 2- க்கு உரியவர். சந்திரனின் பிரதிநிதி.செல்வத்தில் எல்லாம் சிறந்த செல்வமாம் புத்திர செல்வத்தைத் தருபவர்.

கஜலட்சுமி எண்: 3 -க்கு உரியவர். குருபகவான் அதிபதி.குருவே அருள்வார் அனைத்தும் என்பார்கள்.குருவின் அருளாசி இருந்தாலே ,அனைத்தும் பெறலாமே.பதவி என்னும் வற்றாத செல்வத்தை வழங்குபவர்.

தனலட்சுமி எண்: 4- க்கு உரியவர். சாயாக் கிரகமான ராகுவே இவர்களின் அதிபதி. எதிர்பாராத நிலையிலே ராகு பலமானால் தனத்தை அள்ளி, அள்ளித் தருவார்.

வித்தியாலட்சுமி: எண்: 5 -க்கு உரியவர். பெருமாளின் பிரதிநிதியான புதனுக்குரியவர். கல்விச் செல்வத்தை வாரி, வாரி வழங்குபவர்.

விஜயலட்சுமி எண்: 6- க்கு உரியவர்.உலகியல் இன்பங்கள் அனைத்தையும் தருபவர் சுக்கிரன். சுக்கிரனைக் குறிப்பவர்,அனைத்திலும் வெற்றி வாய்ப்பைத் தருபவர்.

தானியலட்சுமி எண்: 7 -க்கு உரியவர்.கேது இவரின் பிரதிநிதி.உணவு தானியங்களைக் குறிப்பவர்.உணவின்றி உலகில் எந்த உயிரினங்களும் வாழ வழியிருக்காது.அத்தகைய பிரதிநிதியாவார்.

தைரியலட்சுமி எண்: 8- க்கு உரியவர்.சனி பகவனே இவரின் பிரதிநிதியாவார்.வீர-தீர-பராக்கிரமங்களைத் தருபவர்.தைரியத்தின் அதிபதி.

ஏகலட்சுமி எண் 9- க்கு உரியவர்.மேலே சொல்லப்பட்டுள்ள எட்டு இலக்குமிகளையும், தன்னகத்தே கொண்டவர் .செவ்வாய் பகவான்-முருகப் பெருமானே ஏகலட்சுமியின் திரு அவதாரமவார்.முருகப் பெருமானை வணங்கினாலே ,அனைத்து இலக்குமிகளையும் வணங்கியதற்கு ஒப்பாகும்.

கீழே உள்ள ஸ்தோத்திரத்தை தினமும் காலை-மாலை சரணாகதி முறையில் மனமுருகி வேண்டி ,பிரார்த்தனை செய்வதால்-மன நிம்மதி பெறலாம். மனச்சாந்தி பெறுவதே கோடிப் பொன்னிற்கு சமமாகும்.

காரிய சித்தி மந்திரம்:

ஹரி ஒம்-மகாலட்சுமி-சர்வ மங்கள

ப்ரதாயினி-மம-பிரயத்தன-காரிய சித்தி ஒம் ஸ்ரீம

ஜய விஜயாய நமஹ:ஒம் துர்கா லட்சுமி

நமஹா-ஒம்.
 

Latest ads

Back
Top