The most influential people in our society fall into one of the 3 P categories.
The Politicians, The Priests/prohits/pundits and The Prostitutes!
They have close contact with people in all the levels of the society - naturally.
5. சிபாரிசு!

ஏழை அந்தணன் ஒருவன் வேலையைத் தேடி,
எல்லா இடங்களுக்கும் நடையாய் நடந்தான்;
“நாளை வா! நாளை வா!” என்று தினமும்
நடக்கச் செய்தார்களே அன்றி, ஒருவர் கூட
வேலை தருவதே இல்லை! மனமுடைந்து,
“வேளை இன்னமும் வரவில்லை!” என்றான்.
“கச்சேரியில் ஒரு உத்தியோகம் கிடைக்குமா?”
“கச்சேரி மேனேஜரிடம் சிபாரிசு கிடைக்குமா?”
நல்ல நண்பன் ஒரு நல்ல வழி கூறினான்;
“நாடக நடிகை ரோஜாமணியிடம் சொல்!
நாளையே உனக்கு வேலை நிச்சயம்!”
நம்பி நடிகையிடம் உதவி கோரினான்.
ஆச்சரியம்! கச்சேரியிலிருந்து சேவகன்
அடுத்த நாள் காலையில் வந்துவிட்டான்!
“மிகவும் திறமைசாலி இவர்” என்றபடியே
மிக நல்ல வேலை அளித்தார் மேனேஜர்.
“ராஜாவானால் என்ன? மந்திரியானால் என்ன?
ரோஜாமணிகள் இருக்கும்வரை என்ன கவலை?”
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/5-ரோஜாமணியின்-சிபாரிசு/