• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

What is Gayatri Mantram?

காயத்ரி மந்திரம் என்றால் என்ன?

வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம். காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி,
மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்

பொருள்:
‘உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்’

நம் புத்தியை இயங்கச் செய்யும்
பரமாத் மாவை நாம் வணங்குவோம்
என்பது சுருக்கமான பொருள்.

இம்மந்திரம் சொல்லப்படும்
பொழுது எழும் அதிர்வுகள்
உடலில் 24 சுரப்பிகளை
ஊக்குவிக்கின்றது.
இதன் காரணமாக
24 வகை சக்திகள்
உடலில் உண்டாகின்றன.

பதம் - அர்த்தம்
ஓம் - தெய்வீக சக்தி, ஒலி சின்னம்
ப்பூ - உடல் விமானம்
புவஹா - நிழலிடா விமானம்
ஸ்வ - வான விமானம்
தத் - அந்த தலை தெய்வத்தின்
ஸவித்து - பிரபஞ்சம் தயையும் சக்தி
வரேன்யம் - வணங்க வேண்டும்
பர்கோ - பிரபல
தேவஸ்ய - பிரகாசமிக்க
தீமஹி - நம் த்யானம்
தியோ - அறிவினை
யா - யார்
நஹ - எங்கள்
ப்ரசோதயாத் - தெளிவுப்படுத்துங்கள்

தத் - வெற்றி
ச - வீரம்
வி - பராமரிப்பு
து - நன்மை
வ - ஒற்றுமை
ரி - அன்பு
நி - பணம்
யம் - அறிவு
ஃபர் - பாதுகாப்பு
க்கோ - ஞானம்
த்தி - அழுத்தம்
வா - பக்தி
ஸ்யா - நினைவாற்றல்
ஃத்தி - மூச்சு
மா - சுய ஒழுக்கம்
யோ- விழிப்புணர்வு
யோ- உருவாக்குதல்
நஹ- இனிமை
பரா- நல்லது
சோ- தைரியம்
த்தா- ஞானம்
யட் - சேவை

இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது.

வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும்.

காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். இருதயம் சுத்தமாகும்.
தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். குறிப்பாக, பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.

காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்
கம்பீரத் தோற்றம்
தரமான பேச்சு
வறுமை, குறை நீங்குதல்
பாதுகாப்பு வட்டம்
கண்ணில் அறிவு தெரிதல்
அபாயம், தேவையற்ற சூழ்நிலை நீங்கும்
நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும் மேலும்
அமைதியாய் இருப்பர்
நற்செயல்களில் ஈடுபடுவர்
காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
மேலும்
வாழ்க்கையில் தடைகளை நீக்கும்
மூளையை பிரகாசிக்கச் செய்யும்
உள்ளுணர்வினை தெளி வாக்கும்
உயர் உண்மைகள் தெரிய வரும்


- என்றும் கூறப்படுகின்றது.

இம்மந்திரம் முழுக்க முழுக்க ஒளியினை வணங்குவதும், மனதின் இருளினை நீக்க வேண்டுவதாக அமைந்துள்ளதால், இம் மந்திரம் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும், சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

22நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ, ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் ‘க்ரே’ பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம், மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.

மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்.
கிழக்கு முகமாக அமருங்கள்.
ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.

மந்திரத்தினை பொறுமையாய்
108 முறை சொல்லுங்கள்.
 

Latest ads

Back
Top