• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A simple Ganapati Slokam

praveen

Life is a dream
Staff member
அற்புத பலன்கள் தரும் எளிய கணபதி ஸ்லோகம்

முழு முதல் கடவுளான விநாயகரின் அவதார நாளாக விநாயகர் சதுர்த்தி, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி சனி கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

தெய்வங்களுக்கு எல்லாம் முதன்மை தெய்வமாக விளங்குபவர் விநாயகப் பெருமான். இவரை முதலில் வணங்காமல் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். எளியோருக்கு எளியோராக இருந்து அருளக் கூடியவர் கணபதி.

விநாயகர் சதுர்த்தி அன்று இவரை சிறப்பாக வணங்குவது வழக்கம். பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் நாம் கீழே குறிப்பிட்டுள்ள விநாயகருக்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் வாழ்வில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் விலகி, நன்மையும், நல் வழியையும் அடைந்திட முடியும்.

விநாயகர் ஸ்லோகம்:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
 
Last edited:
அற்புத பலன்கள் தரும் எளிய கணபதி ஸ்லோகம்

முழு முதல் கடவுளான விநாயகரின் அவதார நாளாக விநாயகர் சதுர்த்தி, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி சனி கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

தெய்வங்களுக்கு எல்லாம் முதன்மை தெய்வமாக விளங்குபவர் விநாயகப் பெருமான். இவரை முதலில் வணங்காமல் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். எளியோருக்கு எளியோராக இருந்து அருளக் கூடியவர் கணபதி.

விநாயகர் சதுர்த்தி அன்று இவரை சிறப்பாக வணங்குவது வழக்கம். பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் நாம் கீழே குறிப்பிட்டுள்ள விநாயகருக்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் வாழ்வில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் விலகி, நன்மையும், நல் வழியையும் அடைந்திட முடியும்.

விநாயகர் ஸ்லோகம்:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
பலஸார பக்ஷதம் - Please correct as பக்ஷிதம்.
 

Latest ads

Back
Top