S
swathi25
Guest
தர்மம் மிகு சென்னை........
தர்மம் மிகு சென்னை
தமிழகத்தின் தலைநகர் ...
பல சிறப்புக்களை தன்னகத்தேகொண்டது..
பகுதி பகுதியாக விவரமாக பார்ப்போமே ....??
முதலில் நங்கநல்லூரில் ஆரம்பிப்போமா...?
-------------------------------------------------------------------------------------------------------------------------
நங்கநல்லூர் தெரியுமா?
நங்க நல்லூரைப் பற்றி என்ன சொல்லலாம்?
ஒரு பழைய கிராமம் புதிய பரிமாணத்தில் என்றா? ஒரு அதிசய ஊர்? குட்டி காஞ்சிபுரம்,
சின்ன கும்பகோணம்? மூத்தோர் வாழுமூர்?
ஏன் இப்படிச் சொன்னால் ஒருவேளை பொருத்தமாயிருக்குமோ?
ஒரு புறம் பார்த்தால் திருவல்லிக்கேணி, மறுபுறம் பார்த்தால் மாம்பலம், ஒருகோணத்தில் அடையார், வேறு பார்வையில் நுங்கம்பாக்கம்.
மொத்தத்தில் இங்கு எல்லா கோவில்களும் உள்ளன. அதனால் வெல்லத்தை மொய்க்கும் ஈயாக முதியோர், ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள் வந்து குடியேறி விட்டனர்.
நிலத்தின் விலை உயர்ந்து உயர்ந்து மேலே செல்ல குடிநீர் வசதி போக்குவரத்து போன்றவை கொஞ்சம் திண்டாட வைத்துள்ளன.
வளர்ச்சிக்காக கொடுக்கும் காணிக்கை இது. நிறைய வங்கிகள், பெரிய வியாபார நிறுவனங் களின் கிளைகள் எங்கும் கண்ணில் படுகின்றன.
நங்கநல்லூரில் இடறி விழுந்தால் ஏதோ ஒரு கோவில்.
புண்ணியம் பெற.
இல்லாவிட்டால் ஏதோ ஒரு வங்கி. பணத்தைப் போட எடுக்க.
நிறைய எதிர்பார்க்கும் ஆட்டோக்கள், சாலை விதி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் வாகன ஓட்டிகள். பள்ளிகள், பல சரக்கு கடைகள், பாதையை மடக்கி கூவும் கரும்பலகையில் விலை காட்டும் காய்கறி கடைகள். விதிமீறல்களைப் பார்த்துக்கொண்டு வேர்கடலை தின்று கொட்டாவி விடும் காவல் சிப்பந்திகள்.
மலை போல் மஞ்சளும் வேறு நிறங்களும் கொண்டு ஒரு அங்குல இடைவெளி இல்லாமல் சாலையை முழுதுமாக விழுங்கும் தொழில் நுட்ப கல்லூரிகளின் பேருந்துகள்.
முடிச்சு முடிச்சாக அங்கங்கே மஞ்சள் பையுடன் டப்பா கட்டு வேட்டிகளுடன் நடு வீதிகளில் நிற்கும் முதியோர்கள்,
கூட்டமாக கோவிலுக்கு உள்ளும் வெளியும் அலையும் பக்தி மிகுந்த பெண்கள்.
இன்னும் எத்தனையோ இருக்கிறது சொல்ல.
இடம் தான் இல்லை எழுத. நங்கநல்லூர் கோவில்களில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கூறுகிறேன்.
இந்த ஊரின் ஒரு பழம் பெரும் ஆலயம் வரசித்தி விநாயகர் கோவில். தெருவில் இருந்தே தரிசனம் செய்ய வசதி.
எதிரே தெருவில் நுழைந்தால் கூப்பிடு தூரத்தில் உத்தர குருவாயுரப்பன் கோவில். சட்டையை கழட்ட வேண்டும்.
தயிர் சாதம் தொன்னையில் கிடைக்கும். அழகிய உன்னி கிருஷ்ணன் ஒரு ஆள் மயக்கி.
உள்ளே ஒரு பழைய வயது மிகுந்த அரச மரம். அதை பிரதட்சிணம் வரும்போது மனம் குளிருகிறது.
அதன் அடியில் சங்கர்ஷணர் தரிசனம் தருகிறார். இதை ஒட்டினாற்போல் சக்தி வாய்ந்த பகவதியின் சந்நிதி. சாந்தஸ்வரூபிணி.
சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே நடந்தால் ஆஞ்சநேயரை தரிசிக்குமுன் இடது பக்க தெருவில் ராகவேந்திரர் அழைக்கிறார்.
இந்த தக்ஷிண மந்திராலயத்தில் பூஜைகள் நடக்கும் அழகு ஒரு கண்கொள்ளாக் காட்சி.
கோவில் எதிரிலேயே ஒரு தியான மண்டபம். ஆளுயரத்தில் ராகவேந்திரர் மேடை மீது கம்பீரமாக உட்கார்ந்து நமது தியானத்தை ஏற்றுக்கொள்கிறார். நமக்குள்ளே தவறுகள் திருந்துகின்றன.
கோவிலை ஒட்டிய கிரி ட்ரேடிங் வியாபார ஸ்தலத் தை வாசலில் நடந்துகொண்டே பார்த்துக்கொண்டு இடமாக திரும்பினால் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர்.
Source:.. WhatsApp..
தொடரும்
தர்மம் மிகு சென்னை
தமிழகத்தின் தலைநகர் ...
பல சிறப்புக்களை தன்னகத்தேகொண்டது..
பகுதி பகுதியாக விவரமாக பார்ப்போமே ....??
முதலில் நங்கநல்லூரில் ஆரம்பிப்போமா...?
-------------------------------------------------------------------------------------------------------------------------
நங்கநல்லூர் தெரியுமா?
நங்க நல்லூரைப் பற்றி என்ன சொல்லலாம்?
ஒரு பழைய கிராமம் புதிய பரிமாணத்தில் என்றா? ஒரு அதிசய ஊர்? குட்டி காஞ்சிபுரம்,
சின்ன கும்பகோணம்? மூத்தோர் வாழுமூர்?
ஏன் இப்படிச் சொன்னால் ஒருவேளை பொருத்தமாயிருக்குமோ?
ஒரு புறம் பார்த்தால் திருவல்லிக்கேணி, மறுபுறம் பார்த்தால் மாம்பலம், ஒருகோணத்தில் அடையார், வேறு பார்வையில் நுங்கம்பாக்கம்.
மொத்தத்தில் இங்கு எல்லா கோவில்களும் உள்ளன. அதனால் வெல்லத்தை மொய்க்கும் ஈயாக முதியோர், ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள் வந்து குடியேறி விட்டனர்.
நிலத்தின் விலை உயர்ந்து உயர்ந்து மேலே செல்ல குடிநீர் வசதி போக்குவரத்து போன்றவை கொஞ்சம் திண்டாட வைத்துள்ளன.
வளர்ச்சிக்காக கொடுக்கும் காணிக்கை இது. நிறைய வங்கிகள், பெரிய வியாபார நிறுவனங் களின் கிளைகள் எங்கும் கண்ணில் படுகின்றன.
நங்கநல்லூரில் இடறி விழுந்தால் ஏதோ ஒரு கோவில்.
புண்ணியம் பெற.
இல்லாவிட்டால் ஏதோ ஒரு வங்கி. பணத்தைப் போட எடுக்க.
நிறைய எதிர்பார்க்கும் ஆட்டோக்கள், சாலை விதி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் வாகன ஓட்டிகள். பள்ளிகள், பல சரக்கு கடைகள், பாதையை மடக்கி கூவும் கரும்பலகையில் விலை காட்டும் காய்கறி கடைகள். விதிமீறல்களைப் பார்த்துக்கொண்டு வேர்கடலை தின்று கொட்டாவி விடும் காவல் சிப்பந்திகள்.
மலை போல் மஞ்சளும் வேறு நிறங்களும் கொண்டு ஒரு அங்குல இடைவெளி இல்லாமல் சாலையை முழுதுமாக விழுங்கும் தொழில் நுட்ப கல்லூரிகளின் பேருந்துகள்.
முடிச்சு முடிச்சாக அங்கங்கே மஞ்சள் பையுடன் டப்பா கட்டு வேட்டிகளுடன் நடு வீதிகளில் நிற்கும் முதியோர்கள்,
கூட்டமாக கோவிலுக்கு உள்ளும் வெளியும் அலையும் பக்தி மிகுந்த பெண்கள்.
இன்னும் எத்தனையோ இருக்கிறது சொல்ல.
இடம் தான் இல்லை எழுத. நங்கநல்லூர் கோவில்களில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கூறுகிறேன்.
இந்த ஊரின் ஒரு பழம் பெரும் ஆலயம் வரசித்தி விநாயகர் கோவில். தெருவில் இருந்தே தரிசனம் செய்ய வசதி.
எதிரே தெருவில் நுழைந்தால் கூப்பிடு தூரத்தில் உத்தர குருவாயுரப்பன் கோவில். சட்டையை கழட்ட வேண்டும்.
தயிர் சாதம் தொன்னையில் கிடைக்கும். அழகிய உன்னி கிருஷ்ணன் ஒரு ஆள் மயக்கி.
உள்ளே ஒரு பழைய வயது மிகுந்த அரச மரம். அதை பிரதட்சிணம் வரும்போது மனம் குளிருகிறது.
அதன் அடியில் சங்கர்ஷணர் தரிசனம் தருகிறார். இதை ஒட்டினாற்போல் சக்தி வாய்ந்த பகவதியின் சந்நிதி. சாந்தஸ்வரூபிணி.
சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே நடந்தால் ஆஞ்சநேயரை தரிசிக்குமுன் இடது பக்க தெருவில் ராகவேந்திரர் அழைக்கிறார்.
இந்த தக்ஷிண மந்திராலயத்தில் பூஜைகள் நடக்கும் அழகு ஒரு கண்கொள்ளாக் காட்சி.
கோவில் எதிரிலேயே ஒரு தியான மண்டபம். ஆளுயரத்தில் ராகவேந்திரர் மேடை மீது கம்பீரமாக உட்கார்ந்து நமது தியானத்தை ஏற்றுக்கொள்கிறார். நமக்குள்ளே தவறுகள் திருந்துகின்றன.
கோவிலை ஒட்டிய கிரி ட்ரேடிங் வியாபார ஸ்தலத் தை வாசலில் நடந்துகொண்டே பார்த்துக்கொண்டு இடமாக திரும்பினால் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர்.
Source:.. WhatsApp..
தொடரும்