• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Do you know what Amavasi vegetables are?

அமாவாசை காய்கறிகள் என்றால் என்ன தெரியுமா?

அமாவாசை நாளன்று கண்டிப்பாக சமைக்க வேண்டிய காய்கறிகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா! அப்படித் தெரியவில்லை என்றால் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

நம் வம்சாவளியில் வாழ்ந்த முன்னோர்களுக்கு அமாவாசை நாள்களில் அவர்களுக்கு பிடித்தவற்றை செய்து படைப்பது வழக்கமாகும். இப்படிச் செய்வதன் மூலம் நம் முன்னோர்களின் மனம் குளிர்ந்து, நம்மை வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம். அமாவாசை நாள்களில் சில குறிப்பிட்ட காய்கறிகளைத் தான் சமைக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. அமாவாசை அன்று விரதமிருந்து முன்னோர்களுக்கு படைத்துவிட்டு, தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அமாவாசை சமையல் மற்றும் தர்ப்பணத்தின் போது அந்தணருக்கு கொடுக்கும் பொருள்களிலும் வாழைக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


வாழையடி வாழையாய் நமது குலம் வளர்வதற்கு வாழைக்காயை அமாவாசை சமையலில் பயன்படுத்த வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. இது தவிர்த்து பலாக்காய், பிரண்டை மற்றும் பாகற்காய் ஆகியவற்றையும் சேர்த்து இந்த 4 காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டுமாம். இதனை உணர்த்துவதற்கு புராணத்தில் ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்று சொல்லப்படுகிறது.


1008 காய்கறிகள்:

வசிஷ்ட முனிவர், மன்னராக இருந்து பிரம்மரிஷி பட்டம் பெற்ற விஸ்வாமித்திரரைச் சந்தித்து எங்கள் வீட்டில் சிரார்த்தம் செய்ய இருப்பதால் உணவருந்த வருமாறு அழைப்பு விடுத்தார். சிரார்த்தம் என்பது நம் வீட்டில் இறந்த முன்னோர்களின் நினைவாக செய்யப்படும் ஒருவித சடங்காகும். மிகவும் கோபக்காரரான விஸ்வாமித்திரர் தனக்கு 1008 காய்கறிகளைக் கொண்ட சமையல் வேண்டும் என்றார். இதனைக் கேட்ட வசிஷ்டர் 1008 காய்கறிகளா என திகைத்து நின்றார்.

வீட்டிற்கு வந்து தனது மனைவி அருந்ததியிடம் இந்தத் தகவலைச் சொன்னார் வசிஷ்டர். 1008 காய்கறிகள் தானே நான் சமைத்துத் தருகிறேன் என்று பொறுமையுடன் பதிலளித்தாள் அருந்ததி. சிரார்த்தம் கொடுக்கும் நாளில் விஸ்வாமித்திரர் வந்ததும், அவருக்கு வாழை இலை வைத்து உணவுகளைப் பரிமாறத் தொடங்கினார். அப்போது எட்டு வாழைக்காய்கள் முதலில் பரிமாறப்பட்டது. அதன் பின் பலாக்காய், பாகற்காய் மற்றும் பிரண்டையைப் பரிமாறி விட்டு, 1008 காய்கறிகளை பரிமாறி விட்டேன்; சாப்பிடத் தொடங்குங்கள் என்றாள் அருந்ததி.

மிகவும் கோபமான விஸ்வாமித்திரர் 4 காய்கறிகளை வைத்து விட்டு, 1008 காய்கறிகள் என்று பொய்யுரைக்கிறாயா என்றார். இதற்கு பொறுமையாக பதிலுரைத்த அருந்ததி, சுவாமி நீங்கள் அறியாதது ஒன்றுமே இல்லை; அனைத்தும் அறிந்த நீங்களே இப்படிச் கோபமடையலாமா! பலாக்காய் 600 காய்கறிகளுக்கும், பிரண்டை 300 காய்கறிகளுக்கும், பாகற்காய் 100 காய்கறிகளுக்கும் சமம் என்று சாஸ்திரமே கூறுகிறது. மேலும் 8 வாழைக்காய்களை வைத்துள்ளேன். ஆக மொத்தம் 1008 காய்கறிகளைப் பரிமாறி விட்டேன் என்று பணிவுடன் சொன்னார் அருந்ததி.


இதனைக் கேட்டு சாந்தமடைந்த விஸ்வாமித்திரர், அருந்ததியின் அறிவுக்கூர்மையையும் மற்றும் சாஸ்திரத்தைப் பின்பற்றி நடக்கும் குணத்தையும் பாராட்டினார். சாப்பிட்டு முடித்த பிறகு, வசிஷ்டர் மற்றும் அருந்ததியை வாழ்த்தி ஆசிர்வதித்தார். இதனால் தான் அமாவாசையின் போது வாழைக்காய், பிரண்டை, பாகற்காய் மற்றும் பலாக்காய் ஆகியவை சமைக்கப்படுகிறது.
 
Very good information. Rice, black till, vazhakkai Kari and curd abd ghee we give it to Crow. I see Crow pick the vazakkai immediately. It us a blessings.
 
இந்த நெறிமுறைக் கதை நமது கலாச்சாரம். ஆனால் இன்று இந்தக் கதையால் எந்தப் பயனும் இல்லை. ஒரே ஆறுதல் பச்சை வாழைக்காய் அறியப்பட்ட காய்கறி மற்றும் இது அமாவாசை தின சமையலில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது.
அமாவாசை சமையலை முழுமையாக்கும் எளிய உணவு பற்றிய கூடுதல் தகவல்கள் தேவை.
அது மட்டுமின்றி சில சமயம் அதை நடத்தும் சாஸ்திரிகள் அன்னம் எடுப்பதில் பங்கு இல்லாமல் இருக்கலாம். அந்த நேரத்தில் குடும்பத்தினர் அவருக்குத் தனித்தனியாக சமைத்து, அவர் தங்கள் வீட்டில் உணவு எடுத்துச் செல்லத் தயாராக இருந்தால் அவருக்கு உணவு பரிமாறுகிறார்கள். குடும்பத்தில் இல்லாததால் தித்திச் சமையலைச் சாப்பிட மாட்டார். இன்று பலர் அதை நடத்துகிறார்கள் மற்றும் அன்னம் பங்கேற்பதன் ஒரு பகுதியாகவும் உள்ளனர்.
பொதுவாக முன்னோர்களுக்கு வருடாந்திர திதி அவர்கள் குறிப்பிட்ட காய்கறிகள் மற்றும் குறிப்பிட்ட மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த பொருட்களை சமைப்பது கட்டாயமாகும், மேலும் இந்த உணவை மட்டுமே குடும்பத்தினரும் சாப்பிடுகிறார்கள். இன்றைய பிரச்சனை என்னவென்றால், பல குழந்தைகள் குறிப்பிட்ட காய்கறிகளை விரும்புவதில்லை.
நீண்ட நாட்களுக்கு முன்பு என் அம்மா உயிருடன் இருக்கும் போது-- பேசிக் கொண்டிருந்த போது முதலில் பாரம்பரியம் என்று குறிப்பிட்டார். இரண்டாவதாக, முதலாம் ஆண்டு நினைவு நாளில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும் ஒவ்வொரு வருடத்தின் திதிக்கும் பின்பற்றப்படுகின்றன.
 

Latest ads

Back
Top