Origin of Universe.
Although Science may solve the problem of - how the universe began, it cannot answer the question
why does the universe bother to exist. Maybe only God can answer that.
(Stephen Hawking -The Origin of the Universe.)
[h=1]ஆதி பராசக்தி[/h]
மும் மூர்த்திகளால் வணங்கப்பட உகந்தவள்;
நம் அனைவராலும் பூஜிக்கப்பட உகந்தவள் ;
வித்தை என்பவள் அவள்; ஆதிகாரணி அவள்;
முக்தி தருபவள் அவள்; எல்லாம் அறிந்தவள்;
இதயக் கமலத்தில் வீற்றிருப்பாள் என்றும்,
அறியப் படமாட்டாள் துஷ்ட ஜனங்களால்;
துறவிகளும் தொழுகின்ற பராசக்தி – தூய
அறிவைத் தரவேண்டும் நமக்கு எப்போதும்.
முக்குணங்களாக அமைந்த தன் சக்தியால்
முயற்சியின்றிப் படைக்கிறாள் சிருஷ்டியை.
காக்கின்றாள் பின் அழிக்கின்றாள் படைத்ததை!
காலத்தை வென்ற தேவியை நாம் தியானிப்போம்.
பிரமன் தோற்றுவித்தான் உலகினை என்றால்
பிரமனே தோன்றினான் விஷ்ணுவின் நாபியில்!
விஷ்ணு ஆகின்றார் பிரமனுக்கு ஓர் ஆதாரம்!
விஷ்ணுவுக்கு ஆதாரம் ஆதிசேஷன் அல்லவா?
ஆதாரப் பட்டு நிற்கும் இவர்களை எல்லாம்
முதற்கடவுள் என்று நாம் கருதுவது சரியா?”