• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

48a. நாரைக்கு பக்தி கொடுத்தது

தாமரைக் குளம் என்னும் அழகிய ஊர்,
தாமரைகள் நிறைந்த தடாகங்களுடன்.

துள்ளி விளையாடும் வண்ண மீன்கள்;
அள்ளி விழுங்கும் அவற்றை நாரைகள்.

நீரின்றி வாழாது உலகும், உயிர்களும்;
நீரின்றிப் போய்விடும் வானம் பொய்த்தால்.

வானம் பொய்த்து விட்டது அங்கே!
வானம் பொழிய மறந்து விட்டது!

நீர்நிலைகள் முற்றும் வற்றலாயின!
நீரிலுள்ள மீன்கள் எங்கே போயின?

உணவும் இல்லை, நீரும் இல்லை!
உலர்ந்த இடத்தில் செய்வது என்ன?

நாட்டை விட்டுப் பறந்தது நாரை,
காட்டை அடைந்து சோர்ந்து விழுந்தது.

ஜீவன் முக்தர்கள் வாழ்ந்தனர் அங்கே,
ஜீவனை போஷிக்கும் வற்றாத தடாகம்!

‘அதோ தீர்த்தம்’ என்ற பெயர் அதற்கு.
அதில் தீர்த்தம் வற்றவே வற்றாதாம்!

படித் துறைகள் இருந்தன அங்கே
வடிவில் சதுரம், சீரிய முறையில்!

சந்தியா மடம் ஒன்று அங்கிருந்தது!
விந்தையான இடம், மரங்கள் சூழந்தது!

நல்ல பாதிரி, வேங்கை, வஞ்சி, மருது,
வெல்லும் மணம் வீசி மலர்ந்திருந்தன!

தண்ணீரிலே முங்கிக் குளிப்பார்கள்
தண்ணருள் பெற்ற ஜீவன் முக்தர்கள்.

முடிக் கற்றைகள் நீரில் புரளும் போது,
ஒளிந்து விளையாடும் மீன் கூட்டம்!

“புண்ணிய சீலர்களைத் தீண்டுவதற்கு
என்ன தவம் அவை செய்திருந்தனவோ?

உணவே இன்றி உயிரே போனாலும்
உண்ணக்கூடாது புண்ணியசாலிகளை!”

சந்தியா மடத்தில் நடக்கும் தினம்
சத்சங்கம் ஜீவன் முக்தர்களின்!

மதுரையைப் பற்றிப் பேசுவதற்கு
மதுரமான விஷயங்கள் எத்தனை?

மதுரைப் புராணத்தை ஓதுவார்,
மதுரையின் சிறப்பை அலசுவார்.

மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்னும்
கீர்த்திகள் பெற்றது மதுரையம்பதியே!

வயிற்றுக்கு உணவு இல்லாது போயினும்
செவிக்கு உணவு கிடைத்தது நிறையவே.

கேட்கக் கேட்க வயிற்றுப் பசி மறைந்து
கேட்கக் கேட்க அறிவுப்பசி நிறைந்தது!

அறியாமை இருள் அகன்று போயிற்று!
அறுந்து போனது இருவினைத் தொடர்பு!

கர்மவினைகளைத் தொலைத்து நாரை,
சர்வமும் அறிந்து சிவபக்தி பெற்றது!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
48 (b). நாரைக்கு முக்தி

சிவபக்தி பற்றி இழுத்தது நாரையை,
தவநெறி நிறைந்த மதுரையம்பதிக்கு!

“இனி எனக்கு இங்கென்ன வேலை?
இனி நான் சேர வேண்டியது மதுரை!”

சோர்வின்றிப் பறக்கலாயிற்று நாரை;
சேர்ந்தது சென்று மதுரையம்பதியை!

பொற்றாமரைக் குளத்தில் புனித நீராடி,
சுற்றி வந்தது ஐயன் விமானத்தை வலம்!

தொடர்ந்தன உபவாசம், வலம் வருதல்,
தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு அங்கு!

பசி வந்திடப் பத்தும் பறந்து போம் அன்றோ?
பசி மேலிட்டு விட்டது செங்கால் நாரைக்கு.

புசிக்க விரும்பியது வண்ண மீன்களை;
புசிக்கவில்லை அத்திருக்குள மீன்களை!

சிவன் தோன்றினான் நாரையின் முன்னே!
தினம் அது தியானித்த உருவத்திலேயே!


“என்னருமை நாரையே கூறுவாய்!
என்ன வரம் வேண்டும் உனக்கு?’ என,

“சிவலோகப் பதவி வேண்டும் ஐயனே!
இகலோகத்தில் எதுவும் வேண்டாம்!”

“அங்ஙனமே ஆகுக! ” என்றான் ஐயன்.
செங்கால் நாரையின் தாபம் தீர்ந்தது.

“இன்னும் ஒரு வரம் வேண்டும் என் ஐயனே!”
“என்னவாயினும் சொல் என் நாரையே!” என,

“தண்ணருள் பெற்ற தீர்த்தத்தில் உள்ள,
புண்ணிய மீன்கள் உண்ணப்படலாகாது!

இல்லாமல் செய்வீர் குளத்தில் மீன்களை!
பொல்லாத பறவைகள் தின்னாதவாறு!”

அருளினான் அதையும் கருணாகரன்,
அருளினான் நாரைக்குச் சாரூப்யம்!

மூன்று கண்களும், நான்கு தோள்களும்
தோன்றின நாரையின் திருமேனியில்!

வெண்ணீற்று மேனி, வரிப் புலித்தோல்,
அண்ணலின் உருவம் பெற்றது நாரையும்!


அற்புத விமானம் வந்து இறங்கியது!
கற்பகலோகம் சென்றது நாரை சிவன்!

கூடற்காண்டம் முற்றுப் பெற்றது.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
எப்படி இருந்தது?


"உன்னோடு ஐவர் ஆனோம்!" என்று
தழுவியபோது குஹனோ அல்லது

"உன்னோடு அறுவர் ஆனோம்!" என்று
தழுவியபோது ஒரு குரங்கோ அல்லது

"உன்னோடு எழுவர் ஆனோம்!" என்று
தழுவியபோது அரக்கன் விபீஷணனோ

ஸ்ரீ ராமனின் முதுகில் குத்தி இருந்தால்
எப்படி இருந்திருக்குமோ அப்படி இருந்தது

"உன்னோடு நால்வர் ஆனோம்!" என்னும் போது
உடனே 'பிச்சுவா பிச்சை மணியாக' மாறியது!!! :(
 
Namestae VR Mam, Long time no see, thread keeps growing in good manner,more fun, information.Hope will keep in touch. :) :)
.

Dear Dr. C.N,

I can see that you have NOT entered this thread for quite some time.

It keeps growing alright - thanks to my friends and the others.

Some people help it to grow by entering in it.

Some others make it grow by quitting it.

Some more make it grow by keeping off.

I owe my grtitude to all of them by the same measure! :)
 
Good people confer benefits even in their after-lifes. :angel:

My dad's Centanary Birthday gift has helped me to

engage a maid to do the jhaadu, poonch etc

with the permission of my ever-vetoing-boss! :)

Additional benefits:

My B.P has dropped to safe levels.

The brunch gets ready even long before 9 A.M

I get ready for my extra curricular activities by 10 A.M!

The house looks spic and span and extra clean!

I can resume my monthly routine of vacuam cleaning.

WOW!!! I am impressed and indebted to my dear dad!!! :)
 
Hi VR Mam, Was quiet held up with both clinic and domestic works,some time my machine gets hang,so it takes more time to reach our forum.Any ways will keep in touch ,take care mam,hope all are fine and good. Bye mam, your special touch of quick reply,i like it.:) :) .
 
Hi VR Mam, Was quiet held up with both clinic and domestic works,some time my machine gets hang,so it takes more time to reach our forum.Any ways will keep in touch ,take care mam,hope all are fine and good. Bye mam, your special touch of quick reply,i like it.:) :) .

I am at your service dear lady! :yo:
Any time you post in this thread!! :welcome:

I was rather feeling lonely in spite of feeling

many staring eyes at the nape of my neck!! :rolleyes:

Thank you for making my day very pleasant! :hug:
 
My younget nephew is a cute fellow interested in mulit media and animation techniques. His life's ambition was to join PIXAR.

He just finished his P.G and had specialised in Knowledge Management - something new to me.

He and his father spoke to me about a wonderful reverse pyramid called DIKW.

If the persons gets enlightment in this process then it will become DIKWE!!!

I won't stand between you and DIKW or DIKWE. :)

So here we go to know more about it!!
 
images


The Reverse pyramid resists my attempts to post it! :(
 
Tale-telling-words!!!

Set up is the opposite of upset.

Up start starts up the trouble!

Wice cracking cracks under wise people.

Know-all often becomes the end-all!

Curiosity kills the cat!

Ferocity kills the Feline!
 
[h=1]யார் சிறந்தவர்?[/h]

கரிய இருட்டில் பறக்கும் மின்மினி,
கர்வத்துடன் கூறியது,” என்னைப் போல
உலகுக்கு, ஒளி கொடுப்பவர் யாருள்ளார்?
உலகம் என்ன ஆகும் நான் இல்லாவிடில்?”

விண்ணில் தோன்றிய தாரகைகள்,
விழுந்து விழுந்து நகைக்கலாயின;
“எங்கள் ஒளியின் முன் நீ நிச்சயம்
மங்கி நிற்பாய்! ஏன் வீண் பெருமை?”

இப்போது நகைத்தது வானத்து நிலா;
“இங்கே நான் வந்தபின்னர் உங்களை
எங்கே எங்கே எனத் தேட வேண்டும்!
என்று தான் உணர்வீர் உண்மையினை?”

உதித்தான் செங்கதிரவன் கீழ் வானத்தில்,
மிதித்தான் நிலவின் மங்கிய ஒளியினை,
பெருமைகள் பேசிய மின்மினி, தாரகை,
போன இடம் எதுவோ தெரியவில்லை!

உள்ளது என்னிடம் இளமையும், செல்வமும்,
அழகும் என்று அலட்டிக்கொள்ள வேண்டாம்!
உள்ளார் உலகில் பலர், உன்னைவிடவும்
அழகு, இளமை, செல்வம் அதிகம் உள்ளவர்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
[h=1]யார் பெரியவர்?[/h]

ஒருநாள் ஒரு பெரிய கேள்வி பிறந்தது,
உறுப்புகளில் எல்லாம் யார் பெரியவர்?
கண்களா, காதுகளா, நாசியா, நாவா?
கால்களா , கரங்களா, வயிரா, வாயா?

உடல் நலம் பேணுவதில் இவர்களில்
உண்மையில் யார் தான் பெரியவர்?
விடை தெரியவில்லை ஒருவருக்கும்,
உடன் தொடங்கியது வேலை நிறுத்தம்!

“எங்கள் உதவியின்றி, எப்படி உண்ணுவீர்கள்?”
என்று தங்கள் பெருமை பேசின கரங்கள்!
“எங்கள் உதவி இன்றி ஓடி, ஆடிப் பொருள்
எப்படித் தேடுவீர்” என்று கேட்டன கால்கள் .

” நான் தான் உணவை விழுங்கி உடலுக்கு
நன்மை புரிகின்றேன்”, பெருமை பேசியது வாய் .
” எங்கள் உதவி இன்றி எப்படி ஜீரணம் செய்வீர்”?
என்று வழக்காடின வயிறும், இரு குடல்களும் .

காதுகளும், கண்களும், மற்ற உறுப்புக்களும்,
கலகம் செய்யத் தொடங்கின ஒரே நேரத்தில்.
முடிவு காண முடியாமல் போனதால், அவைகள்
முழுவதுமாகப் ஆக போராட்டத்தில் இறங்கின.

உணவு உள்ளே செல்ல வில்லை; உடல் சக்தி இழந்தது.
கண்கள் மங்கி விட்டன; காதுகள் பஞ்சடைத்தன;
மூளை மழுங்கி விட்டது; குரல் கூட எழும்பவில்லை.
மூலையில் சுருண்டு விழுந்து விட்டது உடல்.

புரிந்தது அப்போதுதான் அதற்கு ஒரு உண்மை.
பெரியவர் சிறியவர் என்கின்ற பேதம் இல்லை.
சரிவர அனைவரும் தத்தம் பணிகளை,
புரிந்தால் மட்டுமே உடல் வாழ முடியும் .

புத்தி வந்தது; போராட்டாம் முடிந்தது!
சக்தி வந்தது; உடல் பணிகள் நடந்தன!
வேற்றுமை மறந்த உடல் உறுப்புகளும்,
ஒற்றுமையாக தம் பணிகளை செய்தன.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
[h=1]குறைவும், நிறைவும்[/h]

குறைவும், நிறைவும் இரு மனப்பாங்குகளே;
குறைந்த, நிறைந்த பொருட்களால் அல்ல;
போதும் என்ற மனமே நிறைவு உடையது,
போதாது என்ற மனம் குறைவு உடையது.

தனக்குள் திருப்தி கொண்ட மனத்தினர்,
நினைத்ததை எல்லாம் வாங்கிக் குவியார்;
தனக்குள் குறையை உணரும் மனிதர், தாம்
நினைத்தை வாங்கி நிறைவு பெற முயல்வர்.

நிறையப் பொருள் உள்ளவர் மேன்மேலும்
நிறையப் பொருட்களை விழைந்திடுவர்.
மனோ வியாதியாகவே மாறிவிடக்கூடிய
மனப் போக்கு அது என்பது உண்மையே.

தினக் கூலியில் பொருட்களை வாங்கியும்,
மனக் கவலை இன்றி வாழ்பவர் உள்ளார்;
அனைத்தும் பெற்றும் அமைதி இழந்து, ஏதோ
நினைத்துப் பொருமும் மனிதரும் உள்ளார்.

தியாகமே அமரத்துவம் அளிக்கும்; இது
திகட்டாது இனிக்கும் ஒரு வேத வாக்கு.
இருப்பவற்றை தியாகம் செய்வது என்பது
விருப்பத்தைத் துறந்தால் மட்டுமே நிகழும்.

மகாத்மா காந்தி ஒரு ஏழைப் பெண்மணி,
மானம் மறைக்க ஆடை இன்றி வாடுவதைக்
கண்டதும், உதறினார் மேலான ஆடைகளை;
துண்டு ஒன்றையே தமது ஆடையாக்கினார்.

குறைந்த ஆடையினால் அவர் பெருமைகள்
குறைந்தனவா? இல்லையே! மாறாக அவர்
தேசத்தின் தந்தையாகி, அமரராகி, உலகில்
நேசத்துடன் இன்றுவரை போற்றப்படுகின்றார்!

குறைவு கொண்ட மனபாங்கை மாற்றி,
நிறைவு கொண்டதாக நாம் ஆக்குவோம்.
தியாகமே மனித உள்ளதைப் பண்படுத்தி,
தீபம் போல் வாழ்வை ஒளிரச் செய்யும்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
The sixth blog in Devi Bhaagavatam will be completed on or before 25th Inst

by the Grace of Aanaimukhan, AaRumukhan and Devi ParAshakti.

I will be really happy to complete this massive work of

~940 poems and as many translations in less than 11 months.

Posting in the poem thread will resume as soon as this work gets completed!

Here are the links for your ready refrence!

New blogs on Devi Bhaagavatam under construction:

Devi Bhaagavatam (Skanda 1 and 2)

Devi Bhaagavatam (Skanda 3 and 4)

Devi Bhaagavatam (Skanda 5 and 6)

Devi Bhaagavatam (Skanda 7 and 8) |

https://devibhaagavatam5.wordpress.com/

Devi Bhaagavatam (Skanda 10, 11 and 12)
 
An OLD joke!

When the candidate was told "To take seat" in the interview,

he lifted up the chair - wondering what to do with it! :confused:

A NEW Joke!

The boy was staring at his P.C. Then sudenly he lied down on

the floor and rolled over as a dog or a cat does.
1304.gif


His surprised mother asked him,"What are you doing?"

He said,"The P.C says to rollover to view the contents!" :rolleyes:
 
Last edited:

Latest ads

Back
Top