நண்பர் வாக்மி அவர்களே!
நீங்கள் என் பாடலில் ’நெருடல்கள்’ சுட்டுவது எனக்கு மகிழ்வும் ஊக்கமும் அளிக்கிறது!
1. ’பேயுடன் ஆடும் பித்தன்’ என்பது சிவனின் இயல்பைப் பற்றிய ஒரு புகழ்பெற்ற உண்மை. அதே நேரம் அவன் தாயாகவும் தந்தையாகவும் அருள்செய்வான். காய்ப் பருவத்திலே பழுக்காதே, கனிந்த பருவத்திலும் இனிக்காதே இருக்கும் எனக்கு சிவனின் இந்த இயல்பு அச்சமாக, அன்னியமாகத் தெரிவதால், அவனது அருளை வேண்டுகிறேன்.
2. ’வாயினாற் போற்றல் இல்லை’ என்று திருத்திக்கொள்கிறேன்.
3. ’நகத்திலே உணர்வைப் போல’ என்ற உவமையைப் பாராட்டியதற்கு நன்றி.
4. ’இல்லையும் உண்டும் என்றே’ என்பதை ’இல்லை எனப்படுபவைகளும், உண்டு எனப்படுபவைகளும்’ என்னும் பன்மை தொனிக்குமென்று எழுதினேன். எனினும் உங்கள் ’நெருடல்’ நியாயமாகப் படுவதால் இதை ’இல்லையும் இருப்பும் என்றே’ என்று மாற்றிக்கொள்ளுகிறேன்.
நான் முன்பே சொன்னதுபோல் உங்கள் ’நெருடல்’களை வரவேற்கிறேன். கவிஞர் நோக்கில் சிந்திக்கும் ஒரு வாசகர் எனக்குக் கிடைத்தது என் பேறு. நீங்களும் மரபுக் கவிதை முயலுமாறு மீண்டும் பரிந்துரைக்கிறேன்.
அன்புடன்,
ரமணி
*****
நீங்கள் என் பாடலில் ’நெருடல்கள்’ சுட்டுவது எனக்கு மகிழ்வும் ஊக்கமும் அளிக்கிறது!
1. ’பேயுடன் ஆடும் பித்தன்’ என்பது சிவனின் இயல்பைப் பற்றிய ஒரு புகழ்பெற்ற உண்மை. அதே நேரம் அவன் தாயாகவும் தந்தையாகவும் அருள்செய்வான். காய்ப் பருவத்திலே பழுக்காதே, கனிந்த பருவத்திலும் இனிக்காதே இருக்கும் எனக்கு சிவனின் இந்த இயல்பு அச்சமாக, அன்னியமாகத் தெரிவதால், அவனது அருளை வேண்டுகிறேன்.
2. ’வாயினாற் போற்றல் இல்லை’ என்று திருத்திக்கொள்கிறேன்.
3. ’நகத்திலே உணர்வைப் போல’ என்ற உவமையைப் பாராட்டியதற்கு நன்றி.
4. ’இல்லையும் உண்டும் என்றே’ என்பதை ’இல்லை எனப்படுபவைகளும், உண்டு எனப்படுபவைகளும்’ என்னும் பன்மை தொனிக்குமென்று எழுதினேன். எனினும் உங்கள் ’நெருடல்’ நியாயமாகப் படுவதால் இதை ’இல்லையும் இருப்பும் என்றே’ என்று மாற்றிக்கொள்ளுகிறேன்.
நான் முன்பே சொன்னதுபோல் உங்கள் ’நெருடல்’களை வரவேற்கிறேன். கவிஞர் நோக்கில் சிந்திக்கும் ஒரு வாசகர் எனக்குக் கிடைத்தது என் பேறு. நீங்களும் மரபுக் கவிதை முயலுமாறு மீண்டும் பரிந்துரைக்கிறேன்.
அன்புடன்,
ரமணி
*****