அகிலாண்டேஸ்வரி பஞ்சகம்
(சமஸ்கிருதம்: ஸ்ரக்விணீ வாய்பாடு: குரு-லகு-குரு x 4
ஆதி சங்கரர்: அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்
தமிழ் வாய்பாடு: ஐந்து மாத்திரைக் கூவிளம் நான்கு கொண்ட அடிகள்)
ஆற்றுநீர் லிங்கமா யாக்கியே நாதனைப்
போற்றியே சேர்ந்தனை பின்னுமேன் உக்கிரம்?
காற்றினை யுண்டுநீ காதலே மேவிவெண்
ணீற்றனை நோக்கியே நீள்தவம் செய்தனை! ... 1
நேற்றவர் சங்கரர் நின்செவித் தோடுகள்
ஏற்றியுன் உக்கிரம் எஞ்சிடச் செய்தனர் ... ... [எஞ்சிட = குறைய]
ஊற்றெனும் இன்பமாய் உன்னருள் கொள்ளவே
சாற்றினர் ஐங்கரன் சன்னிதி உன்முனே. ... 2
முன்னொரு பிள்ளையாய் மும்மதன் சன்னிதி
பின்னொரு பாவகி பிள்ளையாம் சன்னிதி ... ... [பாவகி = அக்கினியில் உதித்தோன்: முருகக் கடவுள்]
இன்னொரு பிள்ளைநான் இன்னலே துய்ப்பதை
இன்னும்நீ காண்கிலை என்னநான் செய்வதோ? ... 3
வின்னமே மேவினேன் வீண்செயல் மேவினேன்
புன்மையே மேவினேன் பொய்யுரு மேவினேன்
இன்னலே பின்னுறும் இன்பமே தேடினேன்
அன்னைநீ வந்தெனை யாட்கொளும் நாளெதோ? ... 4
அன்னைநீ அப்பனாய் ஆரணன் காத்தனை ... ... [ஆரணன் = பிரம்மன்]
உன்னருள் மேகமே உத்தமப் பாவலன் ... ... [கவி காளமேகம்]
அன்னையாய் அர்ச்சகர் அத்தனைப் போற்றுவர் ... ... [திருவானைக்கா உச்சிக்கால பூசனை]
உன்னைநான் வேண்டினேன் உன்னதம் சேரவே. ... 5
--ரமணி, 22/11/2014, கலி.06/08/5115
குறிப்பு:
அகிலாண்டேஸ்வரி பற்றி இணையத்தில்:
Jambukeswarar Temple : Jambukeswarar Jambukeswarar Temple Details | Jambukeswarar - Thiruvanaikaval | Tamilnadu Temple | ?????????????
???????: ??????????? ??????? ????? ??????????????
????????????? ?????????????? ???????????? | Welcome to BHAKTHIPLANET.COM
சிவசிவாவின் பதிகம்:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/d4d3fHtwMPE[1-25-false]
*****
(சமஸ்கிருதம்: ஸ்ரக்விணீ வாய்பாடு: குரு-லகு-குரு x 4
ஆதி சங்கரர்: அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்
தமிழ் வாய்பாடு: ஐந்து மாத்திரைக் கூவிளம் நான்கு கொண்ட அடிகள்)
ஆற்றுநீர் லிங்கமா யாக்கியே நாதனைப்
போற்றியே சேர்ந்தனை பின்னுமேன் உக்கிரம்?
காற்றினை யுண்டுநீ காதலே மேவிவெண்
ணீற்றனை நோக்கியே நீள்தவம் செய்தனை! ... 1
நேற்றவர் சங்கரர் நின்செவித் தோடுகள்
ஏற்றியுன் உக்கிரம் எஞ்சிடச் செய்தனர் ... ... [எஞ்சிட = குறைய]
ஊற்றெனும் இன்பமாய் உன்னருள் கொள்ளவே
சாற்றினர் ஐங்கரன் சன்னிதி உன்முனே. ... 2
முன்னொரு பிள்ளையாய் மும்மதன் சன்னிதி
பின்னொரு பாவகி பிள்ளையாம் சன்னிதி ... ... [பாவகி = அக்கினியில் உதித்தோன்: முருகக் கடவுள்]
இன்னொரு பிள்ளைநான் இன்னலே துய்ப்பதை
இன்னும்நீ காண்கிலை என்னநான் செய்வதோ? ... 3
வின்னமே மேவினேன் வீண்செயல் மேவினேன்
புன்மையே மேவினேன் பொய்யுரு மேவினேன்
இன்னலே பின்னுறும் இன்பமே தேடினேன்
அன்னைநீ வந்தெனை யாட்கொளும் நாளெதோ? ... 4
அன்னைநீ அப்பனாய் ஆரணன் காத்தனை ... ... [ஆரணன் = பிரம்மன்]
உன்னருள் மேகமே உத்தமப் பாவலன் ... ... [கவி காளமேகம்]
அன்னையாய் அர்ச்சகர் அத்தனைப் போற்றுவர் ... ... [திருவானைக்கா உச்சிக்கால பூசனை]
உன்னைநான் வேண்டினேன் உன்னதம் சேரவே. ... 5
--ரமணி, 22/11/2014, கலி.06/08/5115
குறிப்பு:
அகிலாண்டேஸ்வரி பற்றி இணையத்தில்:
Jambukeswarar Temple : Jambukeswarar Jambukeswarar Temple Details | Jambukeswarar - Thiruvanaikaval | Tamilnadu Temple | ?????????????
???????: ??????????? ??????? ????? ??????????????
????????????? ?????????????? ???????????? | Welcome to BHAKTHIPLANET.COM
சிவசிவாவின் பதிகம்:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/d4d3fHtwMPE[1-25-false]
*****