பிரதோஷத் துதி: கண்வண்ணம் காட்டி யருள்!
(அலங்காரப் பஞ்சகம்: வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், வண்ணம்
என்னும் ஐந்து பாவின நிரலில் அமைந்த அந்தாதி மாலை.)
வெண்பா
பால்வண்ண மேனியிலே ஆள்வெண்ணீ றாயவனும்
நால்வண்ண வேதமிழைக் கால்வண்ணம் ஆடையிலே
பெண்வண்ணம் வாமமுறப் பேய்வண்ணம் தட்சிணமாய்க்
கண்வண்ணம் காட்டியருள் வான்.
(கவித்துறை: காய் காய் மா மா காய்)
வான்கலந்த விடையவனே அந்தி வண்ண அமைதியிலே
தேன்கலந்த பண்ணதிலே தேவன் வண்ணம் தீந்தமிழே
ஊன்கனந்த உயிரினிலே உளமாம் துளிரில் ஒளிதங்கி
நான்கலந்த இம்மையிலே இன்னல் தீர நாடுவனே.
(அகவல்)
நாடுவன் எங்ஙனம் நண்ணுவன் எங்ஙனம்
காடென வினையெலாம் கவிழும் மனதிலே!
கூடென வாழும் உடலிதே பீடெனில்
ஏடெவண் வந்துறும் பீடையே வருமே!
காடுறும் சாம்பலைக் காமுறும் மேலவன்
வீடெதும் இலையெனில் வினைகளைக் கொல்லும்
வேடனாய் வரவே வேண்டுவன் உளத்திலே!
ஆடலின் நாயகன் அமைவுறும் சந்தியின்
பாடலில் தீருமே பாடெலாம்
நாடுவேன் உமையவள் நாயகன் செவ்வணமே.
(எழுசீர் விருத்தம்: அனைத்தும் காய்ச்சீர்கள்)
செவ்வண்ணம் வானுறுமே சிந்தையெலாம் தேனுறுமே
. செம்மேனி யபிடேகச் சீருறுமே
செவ்வண்டுக் கூட்டினுள்ளே புழுவாக நிற்குமுயிர்ச்
. சிந்தையிலுன் மந்திரமே அதிர்வுறுமே*
இவ்வண்ணம் தங்காதே ஈனத்தில் உளமுறுமே
. இருமையெனும் மாயையதன் மயலுறுமே
எவ்வண்ணம் இருந்தாலும் என்னுள்ளம் வந்தருள்வாய்
. எப்பொழுதும் உன்னாமம் நினைவுறவே.
[*செவ்வண்டின் இனப்பெருக்கம் பற்றிய குறிப்பு:
http://sithharwaves.blogspot.in/2011_01_01_archive.html]
(வண்ணக் கலிவிருத்தம்: தனனன தனனன தனனானன தானன)
நினைவுறும் உளமதில் நிறைவேறிடும் ஈசனவன்
வினையுறும் உயிரதன் விழைவேறிட ஈவனவன்
சுனையுறும் வளமென உயிரேறிடும் ஏகனவன்
நனைவுறும் அனையென அணுகேனவன் பால்வணமே.
[நனைவுறும் அனை = ஈரமும் ஊறும் அன்னை]
--ரமணி, 12/05/2014, கலி.29/01/5115
*****
(அலங்காரப் பஞ்சகம்: வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், வண்ணம்
என்னும் ஐந்து பாவின நிரலில் அமைந்த அந்தாதி மாலை.)
வெண்பா
பால்வண்ண மேனியிலே ஆள்வெண்ணீ றாயவனும்
நால்வண்ண வேதமிழைக் கால்வண்ணம் ஆடையிலே
பெண்வண்ணம் வாமமுறப் பேய்வண்ணம் தட்சிணமாய்க்
கண்வண்ணம் காட்டியருள் வான்.
(கவித்துறை: காய் காய் மா மா காய்)
வான்கலந்த விடையவனே அந்தி வண்ண அமைதியிலே
தேன்கலந்த பண்ணதிலே தேவன் வண்ணம் தீந்தமிழே
ஊன்கனந்த உயிரினிலே உளமாம் துளிரில் ஒளிதங்கி
நான்கலந்த இம்மையிலே இன்னல் தீர நாடுவனே.
(அகவல்)
நாடுவன் எங்ஙனம் நண்ணுவன் எங்ஙனம்
காடென வினையெலாம் கவிழும் மனதிலே!
கூடென வாழும் உடலிதே பீடெனில்
ஏடெவண் வந்துறும் பீடையே வருமே!
காடுறும் சாம்பலைக் காமுறும் மேலவன்
வீடெதும் இலையெனில் வினைகளைக் கொல்லும்
வேடனாய் வரவே வேண்டுவன் உளத்திலே!
ஆடலின் நாயகன் அமைவுறும் சந்தியின்
பாடலில் தீருமே பாடெலாம்
நாடுவேன் உமையவள் நாயகன் செவ்வணமே.
(எழுசீர் விருத்தம்: அனைத்தும் காய்ச்சீர்கள்)
செவ்வண்ணம் வானுறுமே சிந்தையெலாம் தேனுறுமே
. செம்மேனி யபிடேகச் சீருறுமே
செவ்வண்டுக் கூட்டினுள்ளே புழுவாக நிற்குமுயிர்ச்
. சிந்தையிலுன் மந்திரமே அதிர்வுறுமே*
இவ்வண்ணம் தங்காதே ஈனத்தில் உளமுறுமே
. இருமையெனும் மாயையதன் மயலுறுமே
எவ்வண்ணம் இருந்தாலும் என்னுள்ளம் வந்தருள்வாய்
. எப்பொழுதும் உன்னாமம் நினைவுறவே.
[*செவ்வண்டின் இனப்பெருக்கம் பற்றிய குறிப்பு:
http://sithharwaves.blogspot.in/2011_01_01_archive.html]
(வண்ணக் கலிவிருத்தம்: தனனன தனனன தனனானன தானன)
நினைவுறும் உளமதில் நிறைவேறிடும் ஈசனவன்
வினையுறும் உயிரதன் விழைவேறிட ஈவனவன்
சுனையுறும் வளமென உயிரேறிடும் ஏகனவன்
நனைவுறும் அனையென அணுகேனவன் பால்வணமே.
[நனைவுறும் அனை = ஈரமும் ஊறும் அன்னை]
--ரமணி, 12/05/2014, கலி.29/01/5115
*****