• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

'உய்ய வேண்டும்' என்பது, 'எல்லா நலமும் பெற்று, மேன்மை அடையவேண்டும்' என்ற வாழ்த்து............

கற்பனை வளம் தந்த சிறந்த பொருள் இது!

சொற்களை மட்டும் நோக்கினால்......

உய்ய வேண்டும் = பிழைக்க வேண்டும்!! :thumb:


திருவள்ளுவரின் குறளும், அதன் பொருளும்:


"எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்."


பெரும் தீ சூழ்ந்து சுட்டால்கூட ஒருவர் பிழைக்கலாம்;

பெரியோருக்குத் தவறிழைத்தால், பிழைக்க முடியாது!

உலகம் உய்ய வேண்டும்!!
 
raji,

i have read 'truly great' before in my teens. this was one of those life defining poems for me and which i set for the kids.

know enough of yourself to define your limits. know how to live within those limits. and have time to appreciate life and smell the roses :)

thanks.
 
Thank you Kunjuppu Sir, for enjoying the translations of the English poems.

Very true... If we know our limits and live within our limits and enjoy mother nature....

Nothing like it!!

Regards.....
 
பெண்ணின் பயணம் ... இளம் பருவம் வரை...

சிசுவாகப் பிறந்து, சிறு குழவியாய்த் தவழ்ந்து,
சிறு பெண்ணாய் வளர்ந்து, பூவாக மலர்ந்து,

துணையுடனே வாழ்ந்து, தாய்மை அடைந்து,
இணையிலா இன்பம் பெறுவாள் விரைந்து!

இதோ அன்னையைப் போற்ற ஒரு கவிதை!

********************************

mothers-day-clipart1.jpg


அன்னை!

கண்காணா அளவிலிருந்து, ஈரைந்து திங்கள்
கண்போலப் பேணிக் கருப்பையில் வளர்த்து,

பெண் ஜன்மப் பேறு இதுவெனக் கருதி, பெற்று,
மண் உலகில், அன்னை எனும் சிறப்பும் எய்தி,

தன் உதிரத்தை அமுதமாக்கி, ஊட்டி வளர்த்து,
தன் வாழ்வின் இன்பம், தன் மழலையே என்று,

அன்புடன் பேணி, கண்மணி நீ என்று கொஞ்சி,
பண்புடன் வளர வைத்து, புகழ் எய்த உயர்த்தி,

சான்றோன் எனப் பிறர் சொல்லுவது கேட்டு,
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் அன்னையே!

இன்று உன் தினக் கொண்டாட்டம், என்றாலும்,
என்றும் என் மனம், கொண்டாடும் உன்னையே!

:hail: ... :angel:

...................... 8 - 5 - 2011 ......................
 

'குடமாத்தம்' - (திருச்சூர் பூரத் திருவிழாவில்)


கேரளாவில் சமீபத்தில் வடக்குன்நாதர் கோவில் பார்த்து,
கேரளாவின் சிறந்த விழா, திருச்சூர் பூரம் பற்றி அறிந்து,

நேற்று விழாவை தொலைக்காட்சியிலே பார்த்து, ரசித்து,
நேற்று சில புகைப் படங்களும்கூட எடுத்து, மகிழ்ந்தேன்!

adukkuk%20kudai.JPG


moonu%20adukku%20kudai.JPG


yaanai%20varisai.JPG


பரந்த வடக்குன்நாதர் கோவில் மைதானத்தின் ஒருபுறம்,
சிறந்த பாரமேக்காவு பகவதி கொலுவீற்று அமர்ந்திருக்க,

திருவம்பாடிக் கிருஷ்ணன், பால வடிவினனாய், மறுபுறம்
திருக்கோவில் கொண்டு அருளி இருக்க, பூர நன்னாளில்,

கடல் போல மக்கள் வெள்ளம் திரள, யானைகள், தம் காது
மடல்களை விரித்து ஆட்டி, காற்சலங்கைகளை அணிந்து,

பளபளக்கும் பட்டங்கள் கட்டி, வரிசையாய் நடந்து வர,
தகதகக்கும் குடைகளைப் பலர் சுமந்து, வரிசையில் வர,

நடுவில், இறையின் படம் சுமந்த யானை உயர்ந்து நிற்க,
அடுத்தடுத்து, ஒரு புறத்திற்கு ஏழு யானைகள் என நிற்க,

பகவதி கோவில் வாயிலில், பதினைந்து யானை வரிசை;
பகவான் கோவில் வாயிலில், பதினைந்து யானை வரிசை!

ஒவ்வொரு யானை மீதும் மூவர்; ஒருவர் பிடிப்பது குடை;
ஒருவர் காட்ட மயில் பீலிகள்; ஒருவர் ஆட்டச் சாமரங்கள்!

ஜண்டை மேளங்கள் அடித்து, உல்லாசம் கிளம்பி நிறைய,
அண்டை ஊர் மக்களும் ஆரவாரம் செய்து, குதித்து மகிழ,

'குடமாத்தம்' என்ற திருவிழா, விமரிசையாக ஆரம்பம்;
குடைகள் வண்ண வண்ணமாக யானைகள் மீது பிடிக்க,

இரு வரிசைகளின் போட்டி ஆரம்பம்; ஒரே வண்ணத்தில்,
இரு வண்ணங்களில், அடுக்கடுக்காக, மினுமினுப்பாக,

குடைகள் விரித்துப் போட்டி நடக்க, கொஞ்ச நேரத்தில்,
குடைக் காம்புகளில், இறைவன் படங்களும் இருந்தன!

ஒருபுறம் அர்த்தநாரீஸ்வரனைக் காட்டினால், உடனே,
மறுபுறம் மீனாக்ஷி தேவியின் படம் காட்டப்படுகின்றது!

ஒருபுறம் கிருஷ்ணனைக் காட்டினால், உடனே அங்கு
மறுபுறம் விநாயகரைக் காட்டுகின்றார்கள்! அருமை!

ஜெயிப்பது யார் என்ற தேவையே இல்லாது, இணைந்து,
ஜெயிப்பது மக்கள் சமுதாயமே, என்று உணர வைத்து,

எல்லா மதத்தினரும் வேறுபாடு இன்றிக் கலந்து, அங்கு,
எல்லோரும் சந்தோஷப் பரிமாற்றம் செய்து மகிழ்ந்தனர்!

எவ்வளவு மாற்றங்கள் கால ஓட்டத்தால் ஏற்பட்டாலும்,
அவ்வளவும் தாண்டி, மனதை நிறைத்தது இந்தப் பழமை!


குறிப்பு: இந்த விழாவை youtube இல் கண்டு மகிழலாம்.

இதோ.... 2008 ஆம் ஆண்டில் நடந்த விழா!


YouTube - thrissur pooram kudamattam my home town
 

ஒற்றையடிப் பாதையில் ஒரு பயணம்!


குறையும் ஒரு நிறையே!

flower_bed.jpg


ஒற்றையடிப் பாதையில் ஓர் இளம்பெண், தினமும்
ஒற்றையாகச் செல்லுவாள், இரண்டு வாளிகளுடன்.

தண்ணீர் நிரப்பிய பின், அதே வழியில் திரும்புவாள்;
தண்ணீர் சொட்டுக்கள் ஒழுகும், ஒரு வாளியிலிருந்து!

ஓட்டை இல்லாத வாளிக்கோ, தற்பெருமை அதிகம்;
ஓட்டை வாளியைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கும்!

இளம்பெண் இதே வழக்கத்தைப் பலநாட்கள் தொடர,
தினம் செல்லும் பாதையில், ஒரு புறம் செடிகள் வளர,

இன்னும் சில நாட்களுக்குப் பின், அதில் பூக்கள் மலர,
வண்ணம் மிகு பூக்கள் ஏன் ஒரு புறத்தில் என வியக்க,

சொட்டுச் சொட்டாகச் சிந்திய தண்ணீர், ஒரு புறமே;
பட்டுப் பட்டாக மலர்கள் வந்ததும், அதன் விளைவே!

தன் பெரும் குறையாக, ஓட்டை வாளி நினைத்ததே,
தன் நிறையாக மாறிய விந்தையையும் உணர்ந்ததே!

குறை என எதையும் ஒதுக்க வேண்டாம்; ஏனெனில்
குறை என நினைப்பதே, வேறு நிறையாக மாறிடும்!

:clap2:
 
Last edited:

சிறந்த அழகிக்கு, வாழ்க்கைப் பயணத்தில், பெரிய சோதனை;
சிறந்த புத்தி சாதுரியத்தால், அவள் வென்றதுதான் சாதனை!

*******************************************

இதுதான் சாதுரியம்!

lghr15384%2Bblack-and-white-pebbles-sea-smoothed-stones-mini-poster.jpg


வியாபாரி ஒருவனுக்கு அழகிய மகள் உண்டு;
வியாபாரம் செய்ய, பணம் தேவையான அன்று,

மனத்தில் விஷமுள்ள முதியவனிடம் சென்று,
பணத்தை வாங்கினான், அதுதான் வழி என்று!

கெட்ட நேரத்தினால், நஷ்டமே வர, முதியவன்
கேட்ட பணத்தைக் கொடுக்க முடியாமல் போக,

விஷமுள்ள மனத்தில் வந்து உதித்தது, மிகவும்
விஷமமான கெட்ட எண்ணம், முதியவனுக்கு!

வெள்ளை, கருப்பு நிறங்களிலே பரவிக் கிடந்த,
கொள்ளைக் கூழாங்கற்கள் நிறைந்த இடத்தில்,

தந்திரமாக வியாபாரியை மகளுடன் அழைத்து,
தந்திரமாக அவளை மணக்கத் திட்டமிட்டான்.

'இரு வேறு நிறங்களில் கற்களைப் பையிலிட்டு,
ஒரு கல்லை எடுக்கச் சொல்வேன், உன் மகளை.

வெள்ளைக் கல்லை எடுத்தால் விடுதலைதான்;
தொல்லை இல்லாது, இருவருமே செல்லலாம்!

கருப்புக் கல்லை எடுத்தால், அவளுக்கு என் மேல்
வெறுப்பு இருந்தாலும், மணக்க வேண்டும்! நான்

பணத்தைத் திருப்பிக் கேட்க மாட்டேன்; ஆனால்
பிணக்கம் செய்து, ஒரு கல்லும் எடுக்காவிட்டால்,

உங்கள் இருவருக்கும் சிறைவாசமே கிடைக்கும்!
உந்தன் மகள் இப்போது முடிவெடுக்க வேண்டும்!'

என்று சொல்லியபடி, இரு கருப்பு நிறக் கற்களை
எடுத்துப் பையில் போட்டான், முதியவன்! இதை

கவனித்தாள் பெண்; கொடிய திட்டம் தெரிந்தது!
கவனமாக உடனே யோசித்து, முடிவெடுத்தாள்!

ஒரு கல்லை வேகமாகப் பையிலிருந்து எடுத்து,
மறு நொடியிலேயே, அதைக் கீழே தவற விட்டு,

தவறிய கல்லும் மற்ற கற்களுடன் கலந்து விட,
'தவறிவிட்டதே எடுத்த கல்! ஆனால், இப்போது

பையில் என்ன கல் உள்ளது என்று பார்த்தாலே,
கையில் நான் எடுத்த நிறமும் தெரிந்துவிடுமே!'

என்று கூறியபடி, இன்னொரு கல்லை எடுத்தாள்!
அன்று சாதுரியத்தால், விடுதலையும் பெற்றாள்!

:decision: . . . :target:

 

மலைப் பாதையில் பெரியவர் . . .


uphill.jpg


வயதான பெற்றோரைத் துணையாக அழைத்து,
வயது ஒன்று முடிந்த குழந்தையுடன், ஒரு பெண்,

மலைப்பாதை வழியே மேலே செல்லும்போது, தன்
நிலை தடுமாறித் தந்தை, துன்பப்படுவது கண்டாள்.

தன்னால் இனி ஒரு அடியும் வைக்க முடியாதென,
தன் இயலாமையை அவர் கூற நினைத்தவுடனே,

அவர் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அவள்,
அவர் கையில் குழந்தையைக் கொடுத்துவிட்டாள்!

'எனக்கு மிகவும் அசதி அப்பா! மீதி தூரம் நீங்களே
எனக்கு உதவுங்கள், குழந்தையைத் தூக்கி', என்று

கெஞ்சியதும், தாய்க்கோ மிகவும் கோபம் எழுந்தது!
கெஞ்சிய மகளைத் திட்டத் திரும்பும் சமயம், அங்கு

என்ன அதிசயம்! தந்தை மிக்க உற்சாகத்துடன், தன்
சின்னப் பேரனைக் கொஞ்சியபடி, மலை மேல் ஏற,

ஆச்சரியமாகக் கோபம் மாறி, தாயும் திகைத்தாள்!
ஆச்சரியமான மாற்றம் ஏனென, மகளே கூறினாள்:

'தன் இயலாமையை நினைத்து வருந்திய நேரத்தில்,
தன் சேவை மகளுக்குத் தேவை என்பது அறிந்ததும்,

எங்கிருந்து பலம் வந்தது தந்தைக்கு? அது அவரின்
உள்ளிருந்து அவர் மனம் கொடுத்த பலமே அம்மா!'


:high5: . . . :target:
 

அடுத்த கடல் தாண்டும் படலம்!


இறை அருளால் 'அதோ இதோ' எனச் சொன்ன பயணம்,
விரைவாக வந்ததுபோல, இன்று இரவு தொடங்குகிறது!

நாளை அதிகாலை புறப்பாடு எனினும், இன்று பின்னிரவு
வேளை, கடல் தாண்டும் படலம் ஆரம்பமாகும்! எங்கள்

ஒன்றாவது அமெரிக்க விஜயத்தில் மகன் மட்டும் அங்கு;
இரண்டாவது விஜயத்தில், பெண்ணரசி சேர்ந்தாள், வந்து!

மூன்றாவது விஜயத்தில், குட்டி தேவதையின் வரவு; இது
என்றுமில்லா ஆனந்தத்துடன், கொடுக்கும் மன நிறைவு!

ஒருபோல எல்லாப் பயண ஏற்பாடுகளும் அமைவதில்லை;
இதுபோல நாங்கள் முன்பு வேலைகள் செய்ததே இல்லை!

ஜெ ராஜ்ஜியத்தில் ஓசி அரிசி கொடுக்க ஆரம்பித்ததில்,
சோம்பேறித்தனம் மக்களுக்கு அதிகரித்துவிட்டது! நமது

கடின வேலைகளைச் செய்ய ஆளைத் தேடுவதே, பெரிய
கடின வேலையாகச் சென்னையிலே மாறி வருகிறதே!

என்னவெல்லாம் நாங்கள் புதிதாகச் செய்து மாய்ந்தோம்
என்பதை விரைவில் எழுதுகின்றேன்; இன்னும் பற்பல

கடைசி நிமிட வேலைகள் அழைக்கின்றன; விரைவிலே
தொடர்வேன் என் அனுபவப் பகிர்வுகளை, உங்களுடனே!


நட்புடன்,
ராஜி ராம் :typing:
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் .... 1


இறை அருளால் கிடைத்த தேவதையே அவள்;
நிறைவான அன்பைக் காட்டும், மகனின் மகள்.

இந்த முறை எம் அமெரிக்க விஜயத்தில் காண
விழைந்த முதல் மகள், சின்னஞ்சிறு கிளிதான்!

தனி வீட்டை ஒதுக்கிவிட்டு, மாதக் கணக்கில்
இனிய பயணம் செய்ய, ஏற்பாடுகள் எத்தனை!

சென்ற முறை, மாடியில் நண்பர் தங்கியதால்,
சென்றோம் கவலையே இன்றி, அந்தப் பயணம்!

இந்த முறை, அவரைத் தொந்தரவு செய்யாமல்,
எந்த ஏற்பாடு செய்யலாமென ஆலோசித்தோம்!

முதல் மாடிப் பகுதியை, வாடகைக்கு விட்டால்,
அதில் பாதுகாப்பும் வருமே, என்கிற ஆசையில்,

விளம்பரம் செய்ததுதான் முதல் வேலை! இது
களேபரம் ஆனதே தவிர, ஒரு பயனும் தரலை!

பெண் பார்த்த மாப்பிள்ளை வீட்டார், சம்மதம்
பின் சொல்கிறோம், என்று செல்லுவது போல,

வந்த சிலரும் சொல்லி, மாயமாகப் போய்விட,
வந்த நான்கு இளைஞர்கள், புதிய கம்பெனியை

ஆரம்பிக்கப் போவதாகக் கூற, என்னவருக்கு
ஆரம்பித்தது காருண்யம்! படித்த பசங்களுக்கு

உதவவேண்டும் என்று பெரிய மனது பண்ணி,
முதலில் தரும் அட்வான்ஸ் முதல், வாடகை

வரை குறைத்துச் சொல்லி, agreement போட
விரைவாக ஆடிட்டரை நாடி, பேப்பர் வேலை

முடிக்க, அந்தப் பசங்களோ, எங்கள் நம்பரை
அடித்துத் தொலைபேசியில் கூட sorry என்று

சொல்லாமல், காணமல் போயினர்! எத்தனை
சொல்லியும், நான் சமாதானமே ஆகவில்லை!

சிங்காரச் சென்னை வெய்யிலைப் பாழாக்காது,
பாங்காக எல்லாம் செய்தபின், ஏமாற்றினால்,

எப்படித்தான் பொறுத்துக் கொள்ளுவது? இது
இப்படி நடக்க, மீண்டும் வந்தன சோதனை பல!

தொடரும்..................
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 2

DSCN5861.jpg


மொட்டுவிட்ட பூக்கள் நிறைந்த மாமரத்திலிருந்து,
மொட்டை மாடியில் பூக்கள், இலைகள் உதிர்ந்திட,

அதைப் பெருக்கிவிட ஆள் கிடைக்காமல், நாங்கள்
அதைச் செய்யச் சென்று பார்த்தபோது, கிளைகள்,

காய்களின் பாரம் தாங்காது, சுவற்றின் மேல் சரிய,
காய்களுடன் அந்தக் கிளைகளையும், அரிவாளால்

வெட்டிச் சாய்க்க, 'கோவில்பட்டி வீரலட்சுமி'யின்,
வெட்டும் அரிவாள் பிடித்த அவதாரமாய் ஆனேன்!

மரத்தை, 'Timber' என்று கத்திச் சாய்ப்பது போலவே,
மரக் கிளைகளை வீசிவிட்டேன், தரையிலே! கீழே

விழுந்த அவற்றை எல்லாம் வெளியில் போடுவது,
விழுந்தது என்னவர் மீது, புதிய ஒரு வேலையாக!

கஷ்டமான வீட்டு வேலைகளை, நானே இதுவரை
இஷ்டத்துடன் செய்ததால், மனம் வருந்தினேன்!

பழக்கம் இல்லாத வேலைகள் ஆயினும், எனக்காக,
பழகிச் செய்தார் என்னவர், மிக அனுசரணையாக!

ஆயிரத்திஐநூறு சதுர அடி முழுவதையும் பெருக்கி,
ஆயிரக் கணக்கில் கலோரிகள் செலவும் செய்தேன்!

மூன்று 'பக்கெட்'டுகள் நிறைய மாங்காய்கள்; அதை
மூன்று நாட்களில் வினியோகம் செய்ய வேண்டும்!

ஊறுகாய் போட யாரும் அதிகம் விரும்புவதில்லை,
ஊறுகாய் மாங்காய் ஓசியாகக் கிடைத்தாலும் கூட!

'மெஸ்' மாமாவிடம் கேட்டால், அவரோ, ஆவக்காய்
'ஸைஸில்' மட்டுமே மாங்காய் வேண்டும் என்றார்!

கெஞ்சிக் கூத்தாடி (!) எப்படியோ சுற்றத்திடம், அந்த
மிஞ்சிய மாங்காய்களை எல்லாம் கொடுத்தோம்!

இதன் இடையில், இரண்டு பாட்டில் புதிய ஊறுகாய்
மகன் வீட்டிற்குக் கொண்டு செல்லத் தயாரித்தேன்!

:lever: தொடரும்.....................
 
Last edited:
....
வெட்டிச் சாய்க்க, 'கோவில்பட்டி வீரலட்சுமி'யின்,
வெட்டும் அரிவாள் பிடித்த அவதாரமாய் ஆனேன்!
I am trying to visualize this, but just can't, you are too gentle. You have to provide photographic evidence to convince me, the evidence guy :)


இதன் இடையில், இரண்டு பாட்டில் புதிய ஊறுகாய்
மகன் வீட்டிற்குக் கொண்டு செல்லத் தயாரித்தேன்!
My mouth is aready watering :)

Cheers!
 
Dear Prof Sir!

Believe me! I did have the 'arivaL' in hand and cut 4 branches... Of course in full dress!!

You are welcome to Boston to enjoy the home made pickles!

Regards,
Raji Ram
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 3


சாவி தேடும் படலம் ஆரம்பித்தது! பல விதமாகச்
சாவிகள் நிறைந்து கிடக்க, பூட்டுக்களோ ஒன்பது!

பெட்டியிலிருந்து அறைச் சாவிகளை எடுத்த பின்,
பெட்டியில் மிச்சம் கிடந்தன நூறு சாவிகள் போல!

தொலைபேசி அருகில், எழுதாத பேனாக்கள் போல,
இல்லை எனாது extra சாவிகள், வீடுகளிலுண்டோ?

சிங்காரச் சென்னையின் மழை வடிகால்கள் பற்றி
எங்கும் புகழ் பரவி உள்ளாதால், எம் வீட்டினுள்ளே

மழைநீர் வந்துவிட்டால் செய்யும் முன் ஏற்பாடுகள்,
அழகாகச் செய்தோம், நன்கு பழகிவிட்டதால்! ஒரு

மணி நேரம் estimate போட்டுச் செய்யும் வேலை
மணி மூன்றை விழுங்குவது, பெரும் சோதனை!

கால தேவதை, நமக்கு வேண்டி நிற்பாளா, என்ன!
கால தேவதையுடன் போட்டிதான் போட்டோம்!

புதிய தையல் 'மிஷின்' ஒன்றைப் பெண்ணரசிக்கு
புதிய வீட்டுப் பரிசாக வாங்கியதால், என்னுடைய

தையல் நாயகி வேலைகள் சிலவற்றை, பாஸ்டனில்
செய்யலாமென ஒதுக்கி வைத்தேன்; நேரமின்மை!

புறப்படும் நாள் வேலைகள் சில; ஜன்னல்களை மூடி,
புறப்படும் பல்லி, எறும்புப் படைகளைத் தடுத்துவிட,

பாச்சை உருண்டைகளை, மூடிய ஜன்னல்களிலிட்டு,
'ப்ளீச்சிங் பவுடரை' குளியலறைகளில் நன்கு போட்டு,

பெட்டிகள் கட்டி, 'லேபில்'கள் ஒட்டி, நீண்டபயணத்தை,
சிட்டையாகச் செய்ய, எல்லா வேலைகளும் முடிந்தன!

சாவிகள் அனைத்தையும் பத்திரமாக வைத்து, வீட்டுச்
சாவியின் ஒரு 'செட்'டைத் தம்பியிடம் தந்துவிட்டு,

பின்னிரவு இரண்டு மணிக்குப் புறப்பட்டோம் நாங்கள்;
பின் நடந்த சம்பவங்களை, மேலும் சொல்கிறேன் நான்!

:car: தொடரும்..................

 
Believe me! I did have the 'arivaL' in hand and cut 4 branches... Of course in full dress!!
I sure will stay a safe distance away :)

You are welcome to Boston to enjoy the home made pickles!
Be careful what you write, I may actually show up -- we are planning a vacation in New England early next month!

Cheers!
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 4


புறப்படும் நேரம் வரை ராம ஜபம் செய்தோம்!

சிறப்பாக உதவும் ராம் என்னவரின் தம்பி மகன்.

சிங்காரச் சென்னையில் பணியில் சேர்ந்தவன்;
பாங்காக எல்லா உலக விஷயமும் அறிந்தவன்!

மின்சாரக் கட்டணம், Bank வேலை இன்ன பிற
அவன் செய்வான், நாங்கள் இல்லாதபொழுது.

பல முறை அவனை அழைத்துப் புண்ணியம்
பல பெற்றோம், கடைசி இரு வார நேரத்தில்.

பின்னிரவில் விளக்குகள் வரிசை ஒளிர்ந்து,
மின்னின சென்னை விமான நிலையத்தில்.

பெட்டிகளை எடுத்துக்கொண்டு, நேரே போய்
செக் இன் இடத்தில் கொடுப்பதால், இப்போது

அனகோண்டா பாம்புபோலக் க்யூ வரிசைகள்
அனுதினமும் நிற்பதே இல்லை, ஏர்போர்டில்!

'குழந்தையின் தலையணை அடியில் கொஞ்சம்
கொழுந்து வேப்பிலை இட்டால், பயமில்லாது

தூங்குவாள்' என்று ஒரு பஞ்சாபி மாமி கூறிட,
தூக்கி வரச் சொன்னாள் பெண்ணரசி, சிறிய

வேப்பிலைக் கொத்தைச் சென்னையிலிருந்து!
வேப்பிலையை smart ஆக pack செய்தேன்! ஒரு

துணியில் அதை கெட்டியாகச் சுற்றி, ஓர் அலு-
மினியம் Foil - லில் சதுர வடிவில் மூடினேன்!

X Ray யில் தெரியாது என்கிற நினைப்பு! ஆம்!
X Ray யைத் தப்பித்து, அதுவும் Boston வந்ததே!

புறப்படும் நாள் காலை..........

தேங்காய் ஒன்று தென்னை மரத்திலிருந்து விழ,
தேங்காய் பர்பியாக உருவெடுத்தது அது! வீட்டில்

மீதியுள்ள நெய்யையும் சர்க்கரையையும் கூடக்
காலி செய்ய ஒரு சந்தப்பம் கிடைத்தது அல்லவா?

தொடரும்..................
 
hi...
i think u visted my place last time....washington dc..............may i have to visit MIT ....may be Boston Tea Party....nice hot weather

in New England.....especially in Boston area.....

regards
tbs
 
hi...i think u visted my place last time....washington dc..............i may be visiting MIT ....may be Boston Tea Party....nice hot weather in New England.....especially in Boston area.....

regards
tbs
 
hi
i think u visited my area last time.....washington dc area....i may be visiting MIT for faculty.....i like Boston Tea Party....nice

weather now in new england area....enga washington pettai nalla irukku...unga boston area pettai eppadi irukku?


regards
tbs
 
Last edited:
Dear Mr. tbs,

If I remember correctly you are the person who wrote about 5 days

noukari and 1day laundry and 1 day grocery.

I made slight modification but forgot to post it!

five days..........Chaakri :ballchain:

two days........ Tokri
:washing:

(since both grocery and laundry involve baskets!)

but when is the time for Chokri.... :love:

the inevitable part of man's life???

Aren't we forgetting something of extreme importance? :rolleyes:

with warm regards,
V.R.
 
Hi TBS sir!

So you ARE reading my write ups, quietly! Yes... We visited DC during our first trip in 2003. I am glad that I have quite a few friends after joining this forum on 10 - 10 - 2010.

Our son had his masters degree from MIT and now settled with his family in Woburn area. Has a nice beautiful house. Our PETTAI is too good. People here say, if there is no fence in between houses, it means a friendly neighborhood. (US spelling creeps in!) And, we do not have fences!!

:cheer2:

Regards,
Raji Ram
 

Latest posts

Latest ads

Back
Top