• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...


கவின் மலையாள தேசத்தில் பயணம் - 5


திருச்சூரிலிருந்து சிறிது தொலைவில் அமைந்தது

த்ரிப்ரயார் ராமர் கோவில்; செல்லும் பாதை நெடுக

பல விஷ்ணு மாயா கோவில்களை அமைத்துள்ளார்.
பல குடும்பங்கள் நிர்வகிக்கும் இவற்றைக் காணவே

ஆச்சரியம்தான்! செய்வினைகள் செய்து கெடுப்பவர்
ஆயிரங்களில் இருப்பார்களோ, கேரள மண்ணிலே?

சில விஷயங்களை நாம் அறியாமல் இருப்பது நலம்.
பல மனக் கிலேசங்கள் நம்மை அணுகாது இருக்கும்!

த்ரிப்ரயார் ராமர் கோவிலில் விசேஷங்கள் பற்பல.
திரி வைக்காத வெடிக் கட்டு அதிலே ஒன்று ஆகும்!

இரும்புக் குடுவைகள் போல உள்ளவைகளில், நன்கு
இறுக்கமாக வெடி மருந்தை அடைத்து வைத்து, ஒரு

வரிசையில் அவற்றை அடுக்கி, ஒரு ஓரத்தில் ஏற்ற,
வரிசையிலுள்ள அனைத்தும் உடனே டப, டப, டப!

நெஞ்சு படபடக்கிறது, நம் காது பிளக்கும் ஒலியில்!
அஞ்சும் விதம் திருஷ்டி தரும் கேடுகள் எல்லாமே

வெடிகள் வைக்கப் பிரார்த்தனை செய்துகொண்டால்,
வெடித்துச் சிதறி, நன்மை வந்திடும் என நம்பிக்கை!

பெரிய குளம் இருக்கிறது கோவிலில்; அங்கு உள்ள
பெரிய வகை மீன்களுக்கு 'மீனுட்டு' செய்கிறார்கள்!

அரிசியில் நெய்யும், வெல்ல நீரும் சேர்த்துக் கலக்கி,
அருகில் சென்று மீன்களுக்கு உணவாக இடுகின்றார்.

இதுவும் ஒரு பிரார்த்தனைதானாம்! இங்கு வருகிற
பொதுமக்கள் கூட்டத்தைப் பார்க்கவும் அதிசயமே!

பெரிய பிரகாரத்தைச் சுற்றி வந்த பின்பு, மூலவரை
தரிசிக்கச் சென்றோம்; அங்கும் பற்பல அதிசயங்கள்!

தொடரும் .............


 

கவின் மலையாள தேசத்தில் பயணம் - 6

அழகின் வடிவாக ஸ்ரீ ராமரை எண்ணிக் கொண்டு,
அழகுத் திருமுகத்தை நோக்கினால், அதிர்ச்சியே!

ஒரே ஒரு திலகம் மின்னுகிறது மூலவர் முகத்தில்;
வேறு எதுவும் இல்லை! கண்கள், நாசி, வாய், காது

தெரியாதபடி, ஒரு சந்தனப் பூச்சு போல இருக்கிறது!
தெரியவில்லை என்ன காரணத்தால் என்று! நான்கு

திருக்கரங்கள் உள்ளன; சங்கு, சக்கரம், வில், மாலை
இருக்கின்றன, விஷ்ணுவின் வடிவம் போன்று! ராமர்

சிவனின் அம்சமும், பிரமனின் அம்சமும் கொண்டு,
அவனியைக் காக்க வந்ததாகக் கூறினர்! சன்னதியை

நோக்கி நிற்கும்போது, படிகளின் அருகே, இடப்புறம்
தொங்கி வளைந்து உள்ளது, பேய்போல ஓர் உருவம்!

அதன் கீழே அமைந்த பெரிய உண்டியலில், இளைஞர்,
ம் தலையைச் சுற்றிவிட்டுக் காசு போடுகிறார்கள்!

தோஷம் அகன்று நிவர்த்தி கிடைத்திடும் என்று, சந்-
தோஷமாகப் போடும் காசில், உண்டியல் நிறைகிறது!

இவை எல்லாமே எனக்குப் புதிய அனுபவங்கள்! நான்
இதைப் போன்ற கோவில்களைப் பார்த்ததே இல்லை!

ஐயப்ப பக்தர்கள் பலர் கூட்டமாக வந்து, சன்னதிகளில்
ஐயப்பன் பாடல்களைப் பாடிக் கொண்டாடினர்! முன்பு

வயதானவர் ஒருவர், 'அந்தந்த இறையைப் பாடினால்
பயன் நன்கு கிடைக்குமே', எனக் கூற, பதில் வந்ததாம்,

'எல்லா இறைவனும் ஒன்றுதானே! அதனால் நாங்கள்
எல்லாச் சன்னதியிலும் ஐயப்பனைப் பாடுவோம்' என!

கோவிலை விட்டு வெளியே வரும்போது, ஒரு யானை
கோவிலின் நுழைவாயிலை அடைத்தபடி உள்ளே வர,

பக்தர்கள் எல்லோரும் கஜராஜன் தரிசனத்தில் மகிழ்ந்து,
பக்திப் பெருக்குடன் வணங்கிச் செல்வதைக் கண்டோம்!

புதிய அனுபவங்கள் பெற்ற பின்னர், மன நிறைவுடன்
இனிய இல்லம் திரும்ப, மகிழ்வுந்தில் பயணித்தோம்!

தொடரும் .............................. :car:
 
Dear Raji,
you are right, I have been to the Ramar kovil and quite few others, I can't remember them all.. Kerala temple experience is unique indeed.. I am enjoying your payana kadhaigal.. :-)
Take care
love
bushu :-)
 

கவின் மலையாள தேசத்தில் பயணம் - 7


சென்ற முறை, பயணக் க(வி)தையில், நான்

சென்ற சில கோவில்கள் பற்றி எழுதினேன்.

எழுதாமல் விட்டுப்போன செய்தியைப் பற்றி
எழுதுகின்றேன் இப்போது, புதிய தகவலாக!

திருச்சூர் பாரமேக்காவு பகவதி கோவிலிலும்,
இருக்கிறது ஒரு மிகப் பழைய சம்பிரதாயம்!

பகவதி அம்மன் சன்னதியைத் தாண்டி, ஒரு
மிகப் பெரிய பாறை மீது இன்னொரு சன்னதி.

மனதில் ஏதேனும் வேண்டிக்கொண்டு, அங்கு
கணத்தில் அறிகின்றார் அது நடக்குமா என்று!

உடைக்கின்ற தேங்காய் அழகான மூடிகளாய்
உடைந்தால் 'முட்டு' இல்லையாம்! நினைத்த

காரியம் நன்கு நடக்குமாம்! இல்லையென்றால்,
கோரிக்கை நிறைவேறச் சில வாரங்கள் அங்கு

நெய் விளக்கு ஏற்றிவிட்டு, மீண்டும் அங்கேயே
மெய்யான பக்தியுடன் 'முட்டு'ப் பார்க்கின்றார்!

இந்த முறை தேங்காய் அழகாக உடைந்தாலே,
அந்த எண்ணிய பணி, சிறப்பாக நடந்திடுமாம்!

தேங்காய் உடைத்த வண்ணம் பக்தர்கள் இருக்க,
தேங்காய் ஜோசியம் எனக்குப் புதிதாக இருந்தது!

இம்முறை இன்னொரு புது விஷயம் கண்டேன்!
அம்பாடிக் கிருஷ்ணன் கோவிலில், மாலையில்

கற்பூர தீபாராதனை ஆனதும், சன்னதி அருகில்,
கற்பூரத் தட்டை வெளியே வைக்கின்றார்; அதில்

கற்பூர ஜுவாலைக்குக் கீழே இருக்கின்றது, நல்ல
அற்புதமாக மணக்கின்ற, வெண்மையான விபூதி!

சந்தனக் காப்பு இட்டுக் கொண்ட அழகு வடிவான
நந்தகோபாலன் தருகிற திவ்யப் பிரசாதமே அது!

ஹரியும் ஹரனும் ஒன்றே என்பதை, எல்லோரும்
அறிவோம் அல்லவா! இதுதானே நிஜமும் ஆகும்!

தொடரும்.................. :car:
 

பாரமேக்காவு பகவதி:

paramekkavu+bhagavathi.jpg


Picture courtesy: Google images.
 

கவின் மலையாள தேசத்தில் பயணம் - 7


இறை தரிசனங்கள் முடிந்த மறுநாள் நிகழ்வு,

இறை அருளாலே வந்த திருமண வைபவம்!

விடியலில் நீராடி, பட்டுடுத்து, புறப்பட்டோம்,
விரிவாகப் போட்ட புதிய நெடுஞ்சாலையில்.

மலேசிய நாட்டின் நெடுஞ்சாலைகள் போன்று,
மலையாள நாட்டில் இந்த நெடுஞ்சாலைகள்!

இரு வழிப் பாதைகளாக இருபுறமும் செல்வது,
மூன்று வழிப் பாதைகளாக விரிவடைகின்றது!

எதிர்த் திசையிலிருந்து வண்டிகள் வராததால்,
எதிர்பார்க்கலாம் நாம், மிக வேகப் பயணத்தை.

யானைகள் நிறைந்தது இந்த நாடு; மிகப் பெரிய
யானை ஒன்று பயணித்தது பெரிய வண்டியில்!

சூரியனின் தாக்கம் இங்கு மிக அதிகம்; வெப்பம்,
சீரிய குளிர்ப்படுத்தும் ac யைத் தாண்டி வந்தது!

ஒரு மணி நேரத்தில் எர்ணாகுளம் எட்டினோம்!
ஒரு கோவில் வளாகத்தில் திருமண மண்டபம்.

எர்ணாகுளத்தில் அருளுகின்ற சிவபெருமானுக்கு,
எர்ணாகுளத்தப்பன் என்ற பெயர் பொருத்தம்தான்!

மிகப் பெரிய பரப்பளவில் சிவபெருமான் கோவில்;
மிக அழகிய ஆஞ்சநேயர் கோவில், அதன் அருகில்.

அந்த ஆஞ்சநேயர் கோவிலை ஒட்டி இருக்கின்றது,
இந்தப் பெரிய 'பிராமண சமூகக் கூடம்', வசதியாக!

தொடரும் ............................ :)
 

மிகப் பெரிய பரப்பளவில் சிவபெருமான் கோவில்... (West GOpuram)

800px-Ernakulathappan_Temple_West_Gopuram.jpg


Photo courtesy: Google images.

மிக அழகிய ஆஞ்சநேயர் கோவில், அதன் அருகில்... shot in my camera :D

IMG_2916.JPG
 
கவின் மலையாள தேசத்தில் பயணம் - 8

இந்த எர்ணாகுளத்தப்பன் கோவில் பற்றி, நமக்கு
வந்த கதையை இங்கு பகிர்ந்துகொள்ளுகிறேன்!

மஹாகாபாரதக் கதையுடன் இணைந்த கோவில்!
மஹா பக்தனான அர்ஜுனனுக்கு அருள் வழங்கிட,

வேடன் உருவிலே சிவ பெருமான் வரும்பொழுது,
வேகமாக அர்ஜுனனைத் தாக்க வந்த, கோரமான

காட்டுப் பன்றியை அம்பால் அடிக்க, அதே சமயம்
காட்டுப் பன்றியை அர்ஜுனனும் அம்பால் அடிக்க,

அதைக் கொன்றவர் யார் என்று வந்த போட்டியால்,
அதைத் தொடர்ந்து இருவரும் யுத்தம் செய்ய, அது

அர்ஜுனனின் தோல்வியில் முடிய, உடனே அவன்
அர்ச்சனை செய்திட, சேற்றால் லிங்கம் உருவாக்கி,

அன்று பூக்களை இட, அவை வேடனின் தலையைச்
சென்று அலங்கரிக்க, சிவனாரை அவனும் அறிந்திட,

வணங்கிய அவனுக்கு, மனமுவந்து பாசுபதாஸ்திரம்
வழங்கியதாகவும் புராணக் கதை சொல்லுகின்றார்!

அந்த லிங்கம், இன்றும் வடக்கு திசையில் அமைந்த
சின்னச் சன்னதியில் இருக்கின்றது, என்று கூறினர்!

இன்னொரு வினோதமான கதையும் இருக்கின்றது;
இன்னும் சில நூற்றாண்டு கழித்து நடந்த நிகழ்வாக!

தேவலன் என்ற சிறுவனை ஒரு முனிவர் சாபமிட,
தேகத்தில் முகம் தவிர மற்றவை பாம்பாக மாறிட,

அர்ஜுனன் வழிபட்ட சேற்றாலான லிங்கத்தை நாடி,
அர்ச்சனை செய்து வழிபட, அவனுக்கு ரிஷி நாகம்

என்று மக்கள் பெயரிட, அவன் கடும் தவம் செய்திட,
நன்று என மகிழ்ந்த சிவன், தன் தேவியுடன் வந்திட.

அங்குள்ள குளத்தில் நீராடினால் சாபம் நீங்கும் என
கங்கை அணிந்தவன் சொல்ல, அதுபோலச் செய்திட,

ரிஷியின் சாபம் நீங்க, அன்று முதல் அந்தக் குளம்
ரிஷிநாகக் குளம் எனப் பெயர் பெற்றது, எனக் கதை!

மூலவர் சன்னதியில் உள்ளது ஸ்வயம்பு லிங்கமாம்;
மூலவர் அரபிக் கடலை நோக்கியபடி இருக்கின்றார்!

:hail:


தொடரும் ......................
 

வணங்கிய அவனுக்கு, மனமுவந்து பாசுபதாஸ்திரம்

வழங்கியதாகவும் புராணக் கதை சொல்லுகின்றார்!

Raja Ravi Varma's painting - from Wikipedia.

423px-Kiratarjuniya.jpg
 
Last edited:
கவின் மலையாள தேசத்தில் பயணம் - 9

கோவிலைச் சுற்றிப் பார்க்க நேரமே இல்லை;
கோவிலில் குடிகொண்ட இறைவனை எமது

மனத்தால் வணங்கி, கோபுர தரிசனம் செய்ய,
மனமகிழத் தங்கையின் குடும்பம் வரவேற்று,

அன்புடன் உபசரித்துக் காலைச் சிற்றுண்டி தர,
நன்கு வயிறார உண்டு, மாடிக்குச் சென்றோம்.

கீழ்த் தளத்தில் உணவகம்; மாடியில் வைபவம்;
'கீழ்த் தளத்தில் உணவு முடித்த பின்னர், சிலர்

பரிசு தராமல் 'எஸ்கேப்' ஆவாரோ?' என்று எம்
அருமை மகன் வேடிக்கையாகச் சொல்லுவான்!

பெரிய மண்டபத்தில் நல்ல பூக்கள் அலங்காரம்;
உயரிய கர்நாடக இசை பொழிந்தனர், சகோதரர்

இருவர், தமது ராஜ வாத்தியங்களில்! அவர்கள்
இருவரும் பழனி இசைக் கல்லூரியில் கற்றவர்!

காசி யாத்திரை, மாலை மாற்றல், ஊஞ்சல் என
கச்சிதமாகச் சடங்குகள் துவங்க, ஊஞ்சல் பாட்டு

இந்தத் திருமணத்திற்கு என்று நான் எழுதியதை
இந்தத் திருமணத்தில் என் தங்கையுடன் பாடிட,

'நானும் வரேன் அக்கா!' என்று ஆவலுடன் வந்து
தானும் சேர்ந்து மாப்பிள்ளையின் அம்மா பாடிட,

சுற்றத்தார் கரகோஷித்து மகிழ, ஊஞ்சல் முடிந்து,
உற்ற நேரம் மணப்பெண்ணின் கோத்திரம் மாற்றி,

தந்தையின் மடியில், கூறை உடுத்திய மகள் அமர,
சொந்த பந்தங்கள் மனம் மகிழ, மங்கல நாண் கட்ட,

அருமையாகத் திருமணம் முடிந்தது; தொடர்ந்தது
அம்மி மிதித்தலும், பொரி இடலும், ஆசீர்வாதமும்!

கல்யாணப் பரிசு நாங்கள் அளிக்க, எதிர் மரியாதை,
கல்யாண பக்ஷணங்கள்; பட்டுப் புடவை, வேஷ்டி!

தொடரும் ........................

 
கூறைப் புடவை என்றால் என்ன பொருள் என்று தேடியதில் கிடைத்த செய்தி இது:

ஆடையை, கூறை என்ற தமிழ்ச் சொல்லால் குறிப்பர். தறியில் நெய்யப்பட்டு

கூறுபடுத்தப்படுவதால் 'கூறை' என்று ஆடை குறிக்கப்படும்.
icon3.png
 
ஆடையை, கூறை என்ற தமிழ்ச் சொல்லால் குறிப்பர். தறியில் நெய்யப்பட்டு
Mrs. RR, yes, many Azhvars have used this term quite often to refer to clothes. Andal uses this term and Pattu interchangeably in the third decad of Nacchiyar Thirumozhi. In these 10 verses, Andal demands from Kannan silk sarees. She cajoles Kannan to பட்டைப் பணிந்தருளாயே and கூறை பணியாய். These 10 verses are among the best of Andal.

Cheers!
 
hi RR madam,
Kerala...God's own country....now they have nice roads...i visited ernakulam sivan temple some years back.....nice temple...
my cousin is from ernakulam....there is a nice Kerala brahmana sabha....very active brahmin association....
 
கவின் மலையாள தேசத்தில் பயணம் - 10

:hungry:

இரண்டு வகைப் பச்சடி, காலன், ஓலன், தோரன்,

இரண்டு வகைப் பாயசம், அவியல், பலாக்காய்ப்

பொடித்தூவல் (கறி), வெல்ல சிப்ஸ், உப்பு சிப்ஸ்,
புளிக்காச்சல், உருளைக் கிழங்குப் பொடிமாஸ்,

எலுமிச்சைச் சாதம், அப்பளம், வடை, ஊறுகாய்;
அலுங்காமல் பரிமாறினர்; கேரள ஸ்பெஷலாக

குண்டு அரிசிச் சாதம், நன்கு குழைய வெந்தது;
கொண்டு வந்தனர், சாம்பார் ரசம் போன்றவை!

அன்னாசிப் பழத்தில், திராக்ஷை இட்டுச் செய்த
அன்னாசிப் பச்சடியை நான் ருசித்ததே இல்லை!

சூப்பர் கெட்டித் தயிரைக் கப்பினில் வைத்தனர்.
சூப்பர் சாப்பாட்டை ருசித்து உண்ணும் பொழுது,

வெற்றிலை பாக்குடன், ஆரஞ்சு, லட்டு, கையால்
சுற்றிய ஐந்து வரி முறுக்கு இவற்றைப் பையில்

அழகாகப் போட்டு, ஒவ்வொருவரிடமும் வந்து,
அழகாகப் புன்னகைத்து, ஒரு பெரியவர் தந்தார்!

சிலர், கல்யாணச் செலவு குறைய வேண்டுமென
சிந்தனை செய்திருக்க, செலவுகள் பலவகையில்

அதிகரித்த வண்ணம் இருப்பது காண்கின்றோம்!
புதிய வகைச் செலவுகளை உயர்த்துகின்றோம்!

சுற்றத்தாரிடம் விடை பெற்ற பின்னர், ஊரைச்
சுற்றி ஒரு வட்டம் அடிக்கச் சென்றோம். கடல்

நீர், பல இடங்களிலே நீர் நிலைகளாகச் சூழ்ந்திட,
நீண்டு உயர்ந்த கட்டிடங்கள் வான் நோக்கி உயர,

இந்த நகரம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது என,
அந்தக் காட்சிகள் நமக்கெல்லாம் உரைக்கின்றன.

தொடரும் ........................

 
........................................................... கடல்

நீர், பல இடங்களிலே நீர் நிலைகளாகச் சூழ்ந்திட,

IMG_3070.JPG
 
Optical illusion:

I never ever thought that one of the 'click's in my camera would have this effect!!

There are two buildings in the above post. When we scroll down, the buildings appear to move away form each other

and when we scroll up they appear to come nearer!! :thumb:

We can give an explanation like this: If our thoughts are high, we come closer to others and..........
icon3.png
 

Latest posts

Latest ads

Back
Top