• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!


Your experience is really terrible, Bushu! It is frightening even to read the episode. You said it right! Yes...

'தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு!' - is what each one in our circle of family and friends told us

after hearing about the hit and run case. We could see a silver lining in the dark cloud... We were with our only son,

here and not in Chennai when this happened. 'Ennavar' escaped with fractures of a few ribs and shoulder blade,

because only the rear view mirror hit his shoulder. He had the knack of falling down, since he was a national

basketball player when he was young. Otherwise, he would have had multiple fractures, when he was thrown about

10' away!
Thanks for sharing your experience! :ranger:
 
Dear Bushu,

I often see mamis sitting with their eyes glued to the TV screen and get irritated if some guests arrive at that hour. I

know this because I go as the guest!! Then I started checking what all TV serials they like and adjust my visit so as to

avoid their prime time!

One 90 year old man was getting jittery, when I went to his house to get 'thAmboolam' during a 'navarAthri' evening,

because his favorite show was telecast at that time and others in the house had switched the TV off! :der:

Best wishes,
Raji
 
Dear Bushu,

I often see mamis sitting with their eyes glued to the TV screen and get irritated if some guests arrive at that hour. I

know this because I go as the guest!! Then I started checking what all TV serials they like and adjust my visit so as to

avoid their prime time!

One 90 year old man was getting jittery, when I went to his house to get 'thAmboolam' during a 'navarAthri' evening,

because his favorite show was telecast at that time and others in the house had switched the TV off! :der:

Best wishes,
Raji

That is so sad.. if you miss one or in fact a few days, you can catch up what happened in no time.. this is not real, people are just so changed, what happened to the hospitality.. anyway, that is a whole another subject..
 

Your experience is really terrible, Bushu! It is frightening even to read the episode. You said it right! Yes...

'தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு!' - is what each one in our circle of family and friends told us

after hearing about the hit and run case. We could see a silver lining in the dark cloud... We were with our only son,

here and not in Chennai when this happened. 'Ennavar' escaped with fractures of a few ribs and shoulder blade,

because only the rear view mirror hit his shoulder. He had the knack of falling down, since he was a national

basketball player when he was young. Otherwise, he would have had multiple fractures, when he was thrown about

10' away!
Thanks for sharing your experience! :ranger:

it is very unfortunate but again your husband being an athlete perhaps had some bearing on the injury.. when you are in a car, there is no way you can escape that fury of the speed and impact, Jan 25th will never be the same for me.. and funny thing is I am not at all afraid of snow and ice and have driven in the worst weather, but his accident happened when he missed an ice patch and the roads were quite clear otherwise.. it just all is the time.. like I said he was much younger that helped him heal, the doctor in fact did tell me that one leg might be smaller than the other, but by some miracle that never happened, except for the huge scars in his legs and hand, no one can tell he had such a touch and go accident.. :-)
 

இப்படி ஒரு மனிதரா?


அரசியல் நாற்காலிகளைப் பரம்பரைச் சொத்தாக ஆக்கி, இந்தியாவின் சொத்துக்களைக் கொள்ளை அடித்து, அரச

வாழ்க்கை வாழ விரும்பும் எத்தனையோ அரசியல்வாதிகளுக்கு இடையில், அரச பரம்பரையில் வந்து, தன்

மூதாதையரின் சொத்துக்கு ஆசைப்படாத ஒரு வினோதமான அரச வாரிசை, இன்றுதான் பார்க்கின்றோம்! திரு

உத்திராடம் திருநாள், மார்த்தாண்ட வர்மாவைத்தான் குறிப்பிடுகின்றேன்! அவர் உருவைப் பார்த்தால், அவருடைய

தொண்ணூறு வயதை நம்புவதே கடினம்!


marthandavarma2.jpg


பதினெட்டாம் நூற்றாண்டு மத்தியில், மிகவும் வளமை நிறைந்த தேசமாக திருவாங்கூர் சமஸ்தானம் இருந்தபோது,

அரச வாழ்க்கையைத் துறக்க விரும்பிய அந்நாள் அரசர், தம் சொத்துக்கள் முழுவதையும் ஸ்ரீ அனந்த பத்மநாப

ஸ்வாமிக்கு வழங்கிவிட்டு, தங்கள் வம்சம், அன்று முதல் ஸ்வாமியின் தாசர்களாக இருப்பார்கள் என்ற முடிவையும்

எடுத்தாராம்! தாசர்கள், வேலைக்காரர்களாக தம் ஆயுள் முழுவதும் சேவை செய்வார்கள். வேலைக்காரர் போல

ஓய்வு பெற முடியாது! இன்று வரை அந்த நியமப்படியே வாழும் இந்தப் பரம்பரை, மிகவும் போற்றற்கு உரியது!



தினமும் அதிகாலை எழுந்து, யோகா பயிற்சிகள் செய்து, ஸ்வாமி கோவிலுக்குச் சென்று, பத்து நிமிடங்கள்

தனிமையில் அவரைச் சேவித்து, பின் மற்ற அலுவல்களைப் பார்ப்பாராம் இந்த ராஜா! இவர் ஒரு பிரிட்டிஷ் ஏற்றுமதி

நிறுவனத்தின் தலைவர். டிராவல் ஏஜன்சி மற்றும் ஹோட்டல் தொழில்களை இவர் பரம்பரையினர் செய்கின்றார்கள்.

லக்ஷம் கோடி மதிப்புள்ள நகைகள் இருந்த பெட்டகங்கள் திறக்கப்பட்ட சமயம், இவர் போகவே இல்லையாம்!

அத்தனை சொத்துக்களைப் பார்த்தால், மனம் மாறிவிடுமோ என்று நினைத்தாராம்!


இவர் அளித்த பெட்டியைக் கீழ்க்கண்ட வலைத்தளத்தில் படிக்கலாம்.

தமிழà¯￾ஹிநà¯￾தà¯￾ » பதà¯￾மநாபனினà¯￾ செலà¯￾வமà¯￾: மகாராஜா மாரà¯￾தà¯￾தாணà¯￾ட வரà¯￾மாவà¯￾டனà¯￾ à®’à®°à¯￾ நேரà¯￾காணலà¯￾

இந்த அற்புத மனிதரை மனதாரப் பாராட்டுவோம்! :clap2:
 
....., தம் சொத்துக்கள் முழுவதையும் ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமிக்கு வழங்கிவிட்டு, தங்கள் வம்சம், அன்று முதல் ஸ்வாமியின் தாசர்களாக இருப்பார்கள் என்ற முடிவையும் எடுத்தாராம்!

தனிமையில் அவரைச் சேவித்து, பின் மற்ற அலுவல்களைப் பார்ப்பாராம் இந்த ராஜா!
மன்னிக்க வேண்டுகிறேன், தாஸர்கள் எனில், தனிமையில் ப்ரத்யேகமான தர்சனம் ஏனோ?

நேர்மையான கொடுங்கோலனை விட ஊரை ஏமாற்றும் நடிப்பு செங்கோல் மன்னன் மேலானவனோ?
 
மன்னிக்க வேண்டுகிறேன், தாஸர்கள் எனில், தனிமையில் ப்ரத்யேகமான தர்சனம் ஏனோ?

நேர்மையான கொடுங்கோலனை விட ஊரை ஏமாற்றும் நடிப்பு செங்கோல் மன்னன் மேலானவனோ?

பிரத்யேக தரிசனம் சன்னதியிலேதானே சார்! நகைப் பெட்டகத்தின் உள்ளே அல்லவே!


அவர்கள் வம்சம் திருடியிருந்தால், இந்த லக்ஷம் கோடியெல்லாம் ஸ்விஸ் வங்கிகளில் அல்லவா
மாறி இருந்திருக்கும்? இது என்னுடைய அபிப்ராயமே! :decision:
 
அவர்கள் ஸ்வாமிக்கு தாசர்கள். மனிதர்களுக்கு அல்ல. அதனால் தனிமை தரிசனமாக இருக்கும். :pray2:
 
இந்த லக்ஷம் கோடியெல்லாம் ஸ்விஸ் வங்கிகளில் அல்லவா
மாறி இருந்திருக்கும்?
அவர்கள் காலத்திலேது ஸ்விஸ் வங்கி, பரந்தாமன் பெட்டகம் தான், அவன் சந்நிதையைய்ப்போலவே, ப்ரத்யேக ரகஸ்ய வங்கிக் கண்ணக்கு.

இந்த சுயநயனலமில்லா வேலைக்கார மன்னாதி மன்னர்களுக்குக்கு எங்கிருந்து வந்தது இந்த செல்வம் எல்லாம்? பாமரமக்களின் வியிர்வியிலா, அல்லது மன்னாதி மன்னனின் ஏகபத்திய தனிமை தரிசன உரிமையிலா? எண்ணிப்பாருங்கள்!

லக்ஷமும் கோடியும் பெட்டகத்துக்கு வந்ததே ஏழை எளியவிரின் உழைப்பினால் என்பதை உணர்வோம், மன்னாதி மன்னனின் பொய்மையான வேலைக்கார வேஷத்தை கண்டிப்போம்.
 
இருநூற்றி அறுபது ஆண்டுகளாக அந்தச் செல்வம் - எப்படிச் சேர்த்ததோ தெரியாது - இருந்திருக்கிறதே!

ஒன்பது / பத்துத் தலைமுறையும் அதை எடுத்து உபயோகித்திருந்தால், என்ன மிஞ்சியிருக்கும்?

இந்தத் தொண்ணூறு வயது முதியவரை நான் மதிக்கிறேன். :)
 

நல்ல முடிவு!


வாழ்வில் சாதனை செய்ய விரும்பும் பெண்கள் பல கஷ்டங்களை எதிர்கொள்ளுவார்கள். நாட்டியக்கலை மிக

மேன்மையானது என்று ஆண்கள் பலர் பேசினாலும், தன் மனைவி மேடை ஏறி ஆடுவதை விரும்பமாட்டார்கள். சில

நாட்டியத் தம்பதியர், தம் கலையை வளர்க்க வாழ்வை அர்ப்பணித்துள்ளார். ஆனால் கணவன் வேறு துறையைச்

சார்ந்து இருந்தால், மனைவிக்கு தன் கலை வளர்ப்பது கடினமாகிவிடும். சிற்பக் கலை ஆராய்ச்சி செய்து, தன்

முனைவர் பட்டம் (Doctorate) பெற்ற ஒரு பெண்மணி, தன் வாழ்வை நடனத் துறைக்கே அர்ப்பணிக்க முடிவு செய்தார்.

அதனால் வாழ்வில் ஒரு முடிவும் செய்துகொண்டார். தனக்குத் திருமணமே வேண்டாம் என்பதே அது! இதைத்தான்

நல்ல முடிவு என்று சொல்லுகிறேன். திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு, பின் சச்சரவுகளை வளரச் செய்து,

துன்பத்தில் உழலுவதைவிட, தனியாக வாழ்ந்து சாதனை புரிவது நன்றென அவர் நினைத்ததுதான் காரணம்.


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறுவது வழக்கம். ஆனால், பெண்களை

வெற்றிப் பாதையில் செல்ல விடும் ஆண்கள் மிக மிகக் குறைவே! சம்சார மின்சாரத்தில் மாட்டாது, தன் வாழ்வின்

லட்சியத்தை அடைந்த அந்தப் பெண்மணி, மிகவும் பாராட்டிற்கு உரியவர்.

:first: . . . :clap2:
 

இப்படியும் பெற்றோர்!


இந்தியாவிலிருந்து பெற்றோர்களை அமெரிக்க வாழ் பிள்ளைகள், தன் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள

அழைத்துக்கொள்வது வழக்கம். முதலில் அவளின் பெற்றோர்; பின்னர் அவனின் பெற்றோர். முடிந்தால், இதுவே

தொடரும், இன்னொரு முறையும்! ஆனால், அமெரிக்காவிலேயே, அதுவும் அடுத்த தெருவிலேயே வாழும் ஒரு

வினோதமான பெற்றோரைப் பற்றிச் சொல்லுகிறேன்!



அவர் ஒரு பெரிய அணு ஆராய்ச்சி நிலையத்தில் உயர் அதிகாரி. அவரின் மனைவி சரியான இல்லக் கிழத்தி!

அதாவது, வீட்டைப் பராமரித்து, வேலைக்குச் செல்லாத பெண். ஒரே மகன். தமிழ் மிக அழகாகப் பேசும் அவர்களின்

மகனுக்கு, தமிழ் 'கிலோ - இல்லை இல்லை - பவுண்டு என்ன விலை?' (குறிப்பு: அமெரிக்காவில் கணக்கில்

புலிகள் - பத்திலிருந்து எட்டைக் கழிக்க, மிஷினைத் தேடும் பல 'ராமானுஜர்'கள் - இருந்தும், இன்னும் இன்ச், அடி,

கெஜம், பர்லாங், மைல் என்றும், அவுன்ஸ், காலன் என்றும், பவுண்ட் என்றும் படுத்துகின்றார்கள்! மெட்ரிக் முறை

'சுன்னம்'. அதாவது கிடையாது!) அவனும் முனைவர் (PhD ) பட்டம் வாங்கி, அணு ஆராய்ச்சி நிலையத்திலேயே

வேலை பாக்கின்றான். I I T யில் படித்து, இரட்டை M S வாங்கிய பெண்ணை, மகனுக்குத் திருமணம் செய்து

வைத்தார்கள். எங்கள் சொந்ததில்தான்! கல்யாணமும் விநோதமாக நடந்தது. சீர் பக்ஷணம் - மூச்! நகைகள்

வேண்டாம்- இஷ்டம் இருந்தால் கொடுக்கலாம். ஆரிய சமாஜ் முறைப்படி, ஒரு மணி நேரக் கல்யாணம்; அதற்கு

மணமகன் வட இந்தியா 'குர்தா' செட் தான் அணிவான்; மணமகளுக்கும் ஆறு கெஜம் புடவைதான்; மடிசார் கட்டு

வேண்டாம். கல்யாணத்திற்கு, இரு பக்கத்தினரும், இருபத்தி ஐந்து பேருக்குமேல் வரக்கூடாது; மாலை வரவேற்புக்கு

பெண்ணின் இஷ்டப்படி எத்தனை பேரையும் அழைக்கலாம்; ஆனால் திருமணத் தம்பதியருக்கு மாலைகள்

வேண்டாம்; அவர்கள் அழைக்கும் பதினாறு சங்கீத வித்வான்கள் ஒவ்வொருவருக்கும் மாலையும், சால்வையும்

வாங்கி அணிவித்து, கௌரவிக்க வேண்டும்! எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டோம், சந்தோஷமாக.



இரண்டு ஆண்டுகளுக்குப் பின், தம்பதியருக்கு அழகிய ஆண் மகன் பிறக்க, மீண்டும் வந்தது, கண்டிஷன்!

பெற்றோர்களின் பொறுப்பே பிள்ளை வளர்ப்பு; அதனால், அவர்களே பிள்ளையை எப்படி வேண்டுமானாலும்

வளர்க்க வேண்டும். தங்களின் பொறுப்பு, தம் பிள்ளையை வளர்த்ததுடன் முடிந்தது! இதுதான் அவர்களின்

கொள்கையாம். இந்தப் பெண்ணின் அம்மா, மிக உடல் நலம் குன்றி இருப்பவர். பெண்ணின் அப்பாதான்

குழந்தைபோல அவளைப் பார்த்துக் கொள்கிறார். அவர்களால் அமெரிக்க செல்வது பற்றி நினைக்கவே முடியாது!

அதனால், குழந்தை Day care இல் விட்டு இருவரும் பணிக்குச் செல்கிறார்கள்.



பணியிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரியும், இல்லத்தரசியும் இவ்வாறு செய்வது எனக்கு மிகவும் அதிசயமாக
இருக்கிறது! இப்படியும் பெற்றோரா? :ballchain:

 
ஆடு நனையுதே என்று...

:clap2:
அவர்கள் ஸ்வாமிக்கு தாசர்கள். மனிதர்களுக்கு அல்ல. அதனால் தனிமை தரிசனமாக இருக்கும். :pray2:

Here, there is a Tamil proverb '' ஆடு நனையுதே என்று ஓநாய் கண்ணீர் விட்டுதாம் '' (aadu nanaiuthey endru onai kanneer vitutham ) remains their intention to grab the Lord's wealth... This is ridicule that these *greedy politicians have come out with their sugar coated statements to the effect that the wealth belongs to the public in general. They have decided with their own that this enormous wealth must be distributed in common.
 
அத்தி பூத்தது போல உங்கள் வருகை, சண்முகம் சார்! பின்னூட்டத்திற்கு நன்றி. ராஜி ராம் :)
 
தொடர்ந்து இங்கு வந்து எழுதிக்கொண்டு தா&

அத்தி பூத்தது போல உங்கள் வருகை, சண்முகம் சார்! பின்னூட்டத்திற்கு நன்றி. ராஜி ராம் :)

திருமதி ராஜி ராம் அவர்களுக்கு,
நான் தொடர்ந்து இங்கு வந்து எழுதிக்கொண்டு தான்
இருக்கிறேன் ! கடைசியாக இருபது நாட்களுக்கு முன்பு கூட
Wandering eyes என்ற தலைப்பில் எனது பெரிய சகோதரி 25 வருடங்களுக்கு முன்பு வரைந்த ஓவியத்திற்கு தகுந்த பாட்டு
எழுதி போஸ்ட் செய்துள்ளேன். பதிவினைப் பார்த்து தங்களின் மேலான கருத்தினை பதியவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். .
 

தொட்டாச் சிணுங்கிகள்!


கேலி பேசுவதையும், நக்கல் செய்வதையுமே சிலர் வாடிக்கையாகக் கொண்டு, அதையே வேடிக்கையாக

நினைப்பார்கள்! மற்றவர்கள் எல்லோரையும் கெட்டித் தோல் உள்ளவர்களாக எண்ணிக்கொண்டு, எப்போதும்

பேசுவார்கள். தாம் பேசும் விஷமமான கிண்டல்களையும் எல்லோரும் ரசிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள்;

ஆனால், அவர்களிடம் ஏதேனும் ஒன்று சொன்னாலும், தொட்டாச் சிணுங்கியாக மாறி, முகம் சுருங்குவார்கள்!

என்ன வினோதமான மனிதர்கள், இவர்கள்!



எல்லோரின் குறைகளையும் சுட்டிக் காட்டி நையாண்டி செய்வதே, எங்கள் வட்டத்தில் ஒருவரின் செயல். அவர்

குணமே அப்படித்தான் என்று எண்ணுவதால், பலரும் சிரித்து மழுப்பிச் சென்றுவிடுவார்கள். ஒரே ஒரு முறை ஒருவர்

அவரிடம், 'சொல்லுவதற்கு உங்களுக்கு நல்ல விஷயமே கிடைக்காதா?' என்று எல்லோர் முன்னிலையிலும்

கேட்டுவிட்டார். அத்துடன் ஆளே அம்பேல்! தொட்டாச் சிணுங்கி போல, முகத்தை சுருக்கி, பின் யாரிடமும் பேசவே

இல்லை!



ஒன்றே ஒன்று எனக்குப் புரியவில்லை! பேசினால் நல்லதை மட்டும் பேசத் தெரியாவிட்டாலும், கெட்டதுடன்

நல்லதையும் சேர்த்தாவது பேசலாமே! குறைகளை மட்டுமே நையாண்டி செய்து வாழலாமா?

:whip: . . . :blah:

 
நல்ல நட்பு!

நல்ல நட்பு கிடைப்பது உலகில் மிக அரிய விஷயம். சிலருக்கு அந்த வகையில் அதிர்ஷ்டம் இருக்கும். அவர்கள்

பாக்கியசாலிகள். ஆனால் நட்புடன் பழகும் சிலரையும், வேலை முடிந்ததும் தூக்கி எறியும் பிரக்ருதிகளும்

இருக்கின்றார். யாராக இருப்பினும், தம் வேலை ஆகவேண்டுமானால், 'சோப்' போடுவது, 'ஐஸ்' வைப்பது இன்ன பிற

செய்யத் தயங்கவே மாட்டார்கள். 'நீயின்றி நானில்லை' என்ற அளவுக்குப் பேசிவிட்டு, உதவி முடிந்தவுடன்

பராமுகமாக இருப்பார்கள். என்ன வண்ணமோ இவர்கள், நான் அறியேன்!



நண்பர்கள் என்றால் ஜால்ரா அடிப்பவர்கள் என்று எண்ணுவது எத்தனை பெரிய தவறு! நாம் என்ன செய்தாலும்,

நண்பர்கள் ஆரவாரம் செய்து மகிழ்வித்தால், நாம் செய்யும் தவறுகளை எவர் சுட்டிக் காட்டுவார்? தவறைச்

சுட்டுபவர்களை ஒதுக்கிவிட்டு, தன்னைப் பாராட்டுவோரை மட்டும் மதிப்பவர்கள், விரைவில் அந்த நட்பையும்

இழக்க வாய்ப்பு உள்ளதே!



நல்ல நட்பு என்பது நல்லவற்றைப் பாராட்டுவது மட்டும் அல்ல; தவறைச் சுட்டுவதும் நல்ல நட்பே!

:grouphug:
 

கருமமே கண்ணாயினார்!


தாம் செய்ய ஒப்புக்கொண்ட வேலையை நேரம் காலம் கருதாமல் முடிக்கின்றனர் பலர், அமெரிக்க நாட்டில். வீட்டின்

கூரையைச் சரி செய்ய இருவர் ஒப்புக்கொண்டு, நாளும் குறித்துத் தந்தனர். அன்று கொட்டுகிறது பெரு மழை. அன்று

வேலைக்கு வரமாட்டார்கள் என்றே நான் எண்ணினேன். ஆனால், சரியாக அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜர்

ஆயினர், மழைக் கோட்டு சகிதம்! ஏணியை வைத்து, மடமடவெனக் கூரை மேல் ஏறி, வேலையை ஆரம்பித்தனர்.

ஒரு மணி நேரம் மழையிலே இருந்து, அந்த வேலையை முடித்துச் சென்றனர்.



சென்ற வாரம், சூரிய சக்தி உபயோகித்து, வெந்நீர் வரவுக்கு ஏற்பாடு செய்ய விழைந்து கொடுத்த இன்னொரு

'கான்ட்ராக்ட்'. 'கான்க்ரீட்' தளம் அமைக்க வேண்டியிருந்தது; கொட்டும் மழை ஆரம்பித்துவிட்டது! மழையில் எப்படி

அந்த வேலையை முடிக்க முடியும்? அந்த வேலையை ஏற்றுக் கொண்டவர், நேரிலேயே வந்து நிலைமையை

விளக்கிச் சென்றார். நாங்கள் மூன்று நாள் பயணமாக Philadelphia சென்று திரும்பியபோது, அழகாக அந்த வேலை

முடிக்கப்பட்டிருந்தது! சிங்காரச் சென்னையில், எந்த வேலைக்கு ஆளை வைத்தாலும், கூடவே நின்று மேஸ்திரி

போல நிற்கும் எனக்கு, இது மிகவும் அதிசயமாகத் தெரிந்தது!



அடித்தளத்தின் கூரைக்கு insulation செய்ய இன்னும் இருவர் ஏற்பாடு. அவர்கள் வேலை முடித்துச் சென்றதும், இரு

ஆபீசர்கள் வந்து அதை மேற்பார்வை இட்டு, சில இடங்கள் சரியாக இல்லை என்றும், அதை மீண்டும் செய்யும்படியும்

கருத்து எழுதிக் கொடுத்தனர். இனிமேல், முன்பு வேலை செய்தவர்கள் வந்து சரியாக வேலை முடித்து, ஒப்புதலும்

வாங்க வேண்டும்!



'கருமமே கண்ணாயினார்' என்பதை நிஜமாகப் பின்பற்றுபவர்கள் பலர், இந்நாட்டில் உள்ளனர்.

:high5:

 

இதுவா புதுமை?

எங்கும் புதுமை; எதிலும் புதுமை.... இதுவே இன்றைய தாரக மந்திரம். ஆனால் சில விஷயங்களுக்கு, புதுமையுடன்

பழமையையும் கலந்து, மனிதர் மதி மயக்குகின்றார்! ஒரு உதாரணம் சொல்லுகிறேன். தன் பெண் தேர்ந்தெடுத்தது

கிறித்துவ மத மாப்பிள்ளை என்றால், அவர்கள் முறைப்படியே திருமணம் செய்துவிடுவதே எளிது அல்லவா?

காலையில் பிராமண முறைப்படி ஒரு திருமணம். காசி யாத்திரை சென்று, ஊஞ்சல் ஆடி, தாரை வார்த்து (கோத்திரம்

மாற்ற முடியாது!) மங்கல நாண் பூட்டி, அக்னி வலம் வந்து, சப்தபதி (ஏழு அடிகள்) யில் பல்வேறு உறுதி மொழிகள்

தந்து (இந்த மந்திரங்களை மாப்பிள்ளை சொல்லவே மாட்டான்; அது வேறு விஷயம்), அம்மி மிதித்து, அருந்ததி

பார்த்து விலாவாரியாக நம்ம முறைப்படித் திருமணம் முடித்து, அதே நாள் மாலையில், அதே தம்பதியருக்கு நடக்கும்

'சர்ச்' திருமணத்தில், கழுத்துப் பெரிதாக வைத்த வெள்ளை கவுன் அணிய வேண்டியிருப்பதால், பெண்ணின்

திருமாங்கல்யம் '
கூலாக'க் கழற்றி வைக்கப் படுகிறது! இவ்வளவுதானா தாலிக்கு மரியாதை? மற்ற

ங்கிலிகளைப்போல அலங்காரப் பொருள்தானா அது? வெறும் அலங்காரப் பொருளாக அவர்கள் நினைப்பதைப்

பூட்டிக்கொள்ள, எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்? எனக்கு இதுதான் புரியவே இல்லை!



வேதகாலத்தில் திருமாங்கல்யம் அணியும் வழக்கம் கிடையாது என்று சாஸ்திர விற்பன்னர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தாலி 'சென்டிமென்ட்' கொஞ்சமேனும் இருப்பதால்தான், பல திருமண பந்தங்கள் முறியாது பிழைக்கின்றன

என்பது என் எண்ணம்!



சிங்காரச் சென்னையில் நடந்த ஒரு திருமணத்தில், கிறித்துவ மத மாப்பிள்ளைக்கு 'சங்கர்' என்று நாமகரணம்

செய்து, அன்னப் பிராசனம் செய்து, பூணல் அணிவித்து, பின் நம்ம முறைப்படிக் கல்யாணம் செய்தார்கள்! பூணலைக்

கண்ட அவனின் சொந்தக்காரர்கள், சாஸ்திரிகளைச் சூழ்ந்துகொண்டு, தக்ஷணை கொடுத்து, ஆளுக்கு ஒரு பூணல்

வாங்கி, கோட்டுக்கு மேல் அணிந்துகொண்டனர்! சௌகரியத்துக்குச் சம்பிரதாயம். காசேதான் கடவுள். சாஸ்திரிகள்

பன்னிருவர் திருமணச் சடங்குகள் (நாந்தி உட்பட) செய்துவைத்தனர்.



என்னதான் சொன்னாலும், நாங்களும் இதுபோலத் திருமணங்களுக்குச் சென்று, பரிசு வழங்கி வாழ்த்தி

வருகின்றோம். 'ஊரோடு ஒத்து வாழ்'!!

:grouphug:

 

முகப் புத்தகத்தில் அகம் மகிழும் விநோதர்கள்!


அது என்ன விநோதர்கள்? வினோதமான மன நிலை கொண்டவர்களே அவர்கள்! வலைத் தளங்கள் மாய வலைகள்

என்று பல முறை எழுதிவிட்டேன். இருந்தாலும், இன்னொரு முறை எழுத வைக்கிறது என் நண்பியின் மன

மாற்றம். யார் வீட்டுக்கு வந்தாலும் அன்புடன் அரவணைத்து, வயிறார உணவு தரும் நல்ல மனம் கொண்டவள்.

சமீபத்தில் முகப் புத்தகத்தில் வந்த ஈடுபாட்டில், தன்னையே மறந்து நிற்கிறாள், இன்று! ஹாபி போல ஆரம்பித்தது,

இன்று முழு நேரே வேலையை விட அதிக நேரத்தை விழுங்குகிறது. பக்கம் பக்கமாக எழுதி, முகம் தெரியாத நட்பு

வட்டத்தை வளர்த்தி, நிஜமான உலகை மறந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. தன் சுற்றத்தார் வருவதே, கொஞ்சம்

முகம் சுருங்க வைக்கிறது, இப்போது. தினப்படி வேலைகள் சுமையாக மாறிவிட்டன.
சகலகலாவல்லி போல

இருந்தவள், சகலத்தையும் மறந்தே போய்விட்டாள்!
தன் வாழ்வே வலை நட்புக்கு என்று அர்ப்பணிக்கும் நிலைக்கு

வந்துவிட்டாள். இதை எழுதும் நோக்கம் என்னவென்றால், இப் பக்கத்தைப் படித்தேனும், நிஜ உலகை மறக்கும் சிலர்

மனம் மாறுவரோ ஆதங்கம்
தான்!

:decision:


 

ஆளைக் கண்டால் சமுத்திரம்!


இப்படிப் பட்ட மனிதர்கள் பலரை நான் சந்தித்துள்ளேன். சில சமயம், நானே இந்த வகையில் வருவேனோ என்றும்

நினைப்பது உண்டு! சுற்றம், நட்பில் யாரைக் கண்டாலும் ஆர்ப்பரித்து மகிழ்பவர்களே, இவர்கள். வேறு ஊருக்குச் சென்றால்,

நம்மைப் பற்றி மறந்தே போய்விடுவார்கள். ஆனால், இந்தக் காலத்தில் இதுதான் சாத்தியமோ என்றும் நான் எண்ணுவது

உண்டு. எல்லோரிடமுமே எப்போதுமே தொடர்பு வைத்துக்கொள்ளுவது இயலாது அல்லவா? எந்த நல்ல, கெட்ட

விஷயமாயினும், நேரில் சென்று கூடி மகிழ்வதைத் தவிர்க்கக் கூடாது. 'பயணச் செலவை அனுப்பிவிடுவேன்; அது

அவர்களுக்கும் உதவியாக இருக்கும்', என்று சிலர் சொல்லுவார்கள்! ஆனால், எல்லோரும் இப்படியே செய்தால், யார் வந்து

கூடுவது?


சமீபத்தில் நடந்த திருமண வைபவத்திற்கு, தொண்ணூறு வயது தாண்டிய என்னவரின் மாமா அழைத்து

வரப்பட்டார். எத்தனையோ முறை அவர் மறுத்தும், கட்டாயப்படுத்தி, அவரின் அக்கா மகன் ( மாப்பிள்ளையின் தந்தை)

கோவையிலிருந்து திருவனந்தபுரம் வரை காரில் படுக்க வைத்து அழைத்து வந்தார். கோவையிலிருந்து நேரடியாக

திருவந்
தபுரம் செல்ல விமான சேவை கிடையாது! வந்தவர் எத்தனை மகிழ்ச்சி அடைந்தார் என்று பார்த்தவுடன்

தெரிந்தது, கூடிப் பேசி மகிழும் ஆனந்தம் மிகவும் பெரிது என்று!



என்றென்றும் தொடர்புகொள்ள முடியாவிட்டாலும், நல்ல சமயங்களை நழுவ விடாது, சமுத்திரமாக மாறுவோம்!

:grouphug:

 

இப்படியும் அம்மாக்களா?


தனக்கு வரும் மருமகள் படித்தவளாக, சம்பாதிப்பவளாக, அழகியாக, சமர்த்தாக, கலைகளில் வல்லவளாக.......... என்று

நீண்ட பட்டியலை வைத்துக் கொண்டு தேடுகின்றார்கள் சிலர். அதில் வென்று, பெண்ணைத் தேடித் திருமணம் செய்தும்

வைத்துவிடுவார்கள். பெண்ணைப் பெற்றவர்களுக்கு லட்சங்களில் பணம் செலவும் ஆகிவிடும். பெண் வீட்டிற்கு வந்த பின்,

முதலில் வேலையை விடச் சொல்லுவார்கள். பின் வெளியில் செல்லக் கூடாது, நண்பிகளுடன் பேசக் கூடாது, அப்பா

அம்மாவைப் பார்க்கச் செல்லக் கூடாது என்று 'கூடாது' பட்டியல் நீண்டு போவதுடன், வீட்டைப் பராமரித்து, சமையல் செய்து

வைக்கும் வேலைக்காரியாகவே மாற்றவும் முனைவார்கள். இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்களா என்று வியக்க

வேண்டாம்! எங்கள் நெருங்கிய வட்டத்திலேயே, இதுபோல மூன்று அம்மாக்களை நான் பார்த்துவிட்டேன்.


பிள்ளைகளின் திருமணம் முடிந்ததும் தனிக் குடித்தனம் அனுப்பினால், அவர்களுக்கும் பொறுப்பு வரும்; அனாவசிய

தலைமுறை வேறுபாட்டுச் சண்டைகளும் வராது! இதை என்றுதான் இவர்கள் புரிந்துகொண்டு, பிள்ளைகளை வாழ

விடுவார்களோ? அறியேன்!
 
Dear Bushu, Please feel free to write your feed backs too! Raji from SingArach Chennai. :yo:

I will Raji dear, it is just that I am so wrapped up looking for jobs and every time they make you fill in an application on line it takes at least 25 minutes of my time.. which is so boring, even though i have my resume ready, all companies have different policies.. also trying to volunteer at the local hospital.. and of course trying to incorporate my stuff in the new home..

So when I come here, I feel like just staying here and checking out every thread and giving my two cents, and it is like eating Theratipaal for me.. to interact with my fellow southees.. which I am so proud to be.. :-))

I will come and give my feedback when I have more time, in the mean time, I will click on the likes.. please pardon me for that.. Take care..
love
Bushu :-)
p..s. on the subject of MIL's they come in all forms and colors, I have known some of the worst and some of the best.. I will share with you soon.. :-)
 

Latest posts

Latest ads

Back
Top