• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

raji,

it is not pathetic. this is admirable, i think. we need to look at this with a different lense.....................
Dear Sir,

I asked my son about the word 'pathetic' and he told me that, in US, it does not mean what we mean in India!

I was not aware of this. Sorry. I have written more about the students who strive hard to come up in their lives,

in my other thread.

Once again sorry!

Raji Ram :typing:
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 39

வழிபடும் தெய்வங்களுக்குக் கோவில் அமைத்து,
வழிபாடு செய்வதுதான் இந்தியாவில் நடக்கிறது.

அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியையே இங்கே
பலர் வழிபடும் ஸ்ரீ சாய்பாபா கோவிலாக்கியுள்ளார்.

கோபுர வடிவம் இல்லை; துவஜஸ்தம்பம் இல்லை;
கோவிலின் அமைப்பு, உள்ளே மட்டுமே இருக்கிறது!

பாபா வாழ்வின் அதிசய நிகழ்வுகளை, மிக அழகிய
படங்களாகத் தீட்டிச் சுவர்களில் பொருத்தியுள்ளார்.

பிரதட்சிணம் வருவதற்கு எதுவாக உள்ள அமைப்பு;
பிரசாதம் கிடைத்திடும், மங்கள ஆரத்திக்குப் பிறகு.

வெள்ளிப் பல்லக்கு ஒன்றை அழகாக வடிவமைத்து,
வெள்ளியில் இரண்டு சிம்மங்கள் இருபுறம் வைத்து,

புட்டபர்த்தி பாபாவின் படமும் அருகினில் வைத்து,
ஷீரடி பாபாவின் படம் மையத்திலே விளங்குகிறது.

பக்தர்களின் ஆர்வத்தினால், பாபா மட்டும் அன்றிப்
பக்தி செய்யப் பல தெய்வங்களை வைத்துள்ளார்.

பால், தயிர், இளநீர், தேன், பன்னீர், சந்தனம் நல்ல
நாட்கள் அனைத்திலும் அபிஷேகம் செய்கின்றார்.

பூஜைகள் செய்யும் அர்ச்சகரும், T shirt ஐ அணிந்து
பூஜை செய்தது, நன்றாகவே இருந்தது! நம் நாட்டில்,

துண்டைக்கூடப் போர்த்த விடாது, Topless ஆக்கும்,
முண்டு அணியும் மலையாள தேசத்தினர் உண்டு!

தங்கள் உடையை இவ்வாறு ஆக்கிவிட்டதற்கு, நம்
ஆண்கள் சிலரேனும் போராடி, எதிர்க்க மாட்டாரோ?

இந்த எண்ணம் சின்ன வயது முதலாக என் மனதை
வந்து உறுத்தும் ஒரு எண்ணம்! இன்றும் தொடரும்!

குருவாயூரப்பன் தரிசனக் கூட்டத்தில், உளுந்து மாவு
உருண்டு வருவதுபோல, சில குண்டுகள் வந்துவிட்டு,

வியர்வை வழியும், மணக்கும் (!) உடலை, பிறருக்கு
அயர்வை ஏற்படுத்துமாறு தேய்ப்பது, அருவருப்பே!
:bump2:

மாற்றம் வருமா? :noidea:

தொடரும் ........................

 
குருவாயூரப்பன் தரிசனக் கூட்டத்தில்........

guruvayur-temple.jpg
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 40

என் சென்னைத் தோட்ட அனுபவங்களின் உதவியால்,
என் மகன் வீட்டுத் தோட்ட வேலையிலும் பங்கெடுக்க

ஆர்வமானேன்; இதை அவனிடம் கூறியதும், மகிழ்ந்து,
நேர்த்தியான உபகரணங்களை எடுத்துக் காட்டினான்.

வார விடுமுறையில், அவனுக்கு உதவி செய்ய, என்னை
வர அனுமதித்தான்; அதற்கு ஆவலாய்க் காத்திருந்தேன்.

பின் தோட்டத்தில், நீண்டு வளர்ந்த கிளைகள் எல்லாம்,
தன் வேலையாக எடுத்து, அதிகாலையிலே முடித்தான்.

என் பங்குக்கு, புல்வெளியில் களைகளை வெட்டினேன்.
என் வேலையை மாலை ஏழு மணிக்குத் தொடர்ந்தேன்.

எட்டரை மணி வரை நல்ல வெளிச்சமாக இருப்பதால்,
ஒன்றரை மணி நேரம், நான் வேலை செய்ய முடியுமே!

வாடிவிட்ட ரோஜா மலர்களையும், மற்ற மலர்களையும்,
தேடி எடுத்துக் கத்தரித்தேன்; நல்ல உபகரணங்களால்

இங்கு வேலை செய்வது கஷ்டமில்லை; சென்னையில்,
மாங்காய் மரத்தை வெட்டிய கஷ்டத்தை எண்ணினேன்!

நீண்ட கைப்பிடி கொண்ட, மிகவும் கூர்மையான அந்த
நீண்ட வெட்டும் கருவி, எனக்கும் வேண்டும் என்றேன்!

வேலைக்கு ஆள் கிடைக்க அரிதான எங்கள் மாநகரில்,
வேலை நாங்கள் செய்ய எளிதாக இருக்க வேண்டுமே!

வெட்டிய செடிகளை, பெரிய பேப்பர் கவர்களில் போட்டு,
ரோட்டின் ஓரத்தில் அடுக்கிவிட்டோம். இரண்டு பெரிய

பிளாஸ்டிக் டிரம்களிலும் இலைகளைப் போட்டு நிரப்பி,
பிளாஸ்டிக் மறு சுழற்சி டப்பாக்கள் தனியே வைத்தோம்.

மாதத்தில் ஒரு நாள் மட்டும் வெட்டிய செடிகளையும்,
வாரத்தில் ஒரு நாள் குப்பைகள் மற்றும் மறு சுழற்சி

செய்யும் டப்பாக்கள் ஆகியவை எடுத்துச் செல்கிறார்.
செய்யும் தொழிலே தெய்வம் என்னும் நாடு இதுதான்!

மறுநாள்......

ஒரு லாரி குப்பைகள் எடுக்க; ஒன்று மறு சுழற்சிக்கு;
ஒரு லாரி இலை தழைகளுக்கு என்று மூன்று வந்தன!

தொடரும் ......................
 
வெட்டிய செடிகளை, பெரிய பேப்பர் கவர்களில் போட்டு,
ரோட்டின் ஓரத்தில் அடுக்கிவிட்டோம். இரண்டு பெரிய

பிளாஸ்டிக் டிரம்களிலும் இலைகளைப் போட்டு நிரப்பி,
பிளாஸ்டிக் மறு சுழற்சி டப்பாக்கள் தனியே வைத்தோம்.

DSCN6210.JPG




 
look like wine grapes?
You guessed it right, Sir! Wine grape in grape vines!!!

But who will make the wine and who will 'drink' it in our family?

I make pickles with these (ஐடியா வேற என்ன வரும்?) and it comes out with good taste too!!

Yummy........... More like our களாக்காய்!
:hungry:
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 41

ஒரு கோவில் உண்டா; குளம் உண்டா என்று கேட்கும்
ஒரு வழக்கம் உண்டல்லவா? கோவில் பார்த்தாயிற்று!

குளம் பார்க்க வேண்டாமா? என்னவர் இப்போது உடல்
நலம் தேறி வருவதால், உடன் வருமாறு அழைத்தோம்.

குளத்தின் பெயர் 'Horn pond'; இருபது நிமிட நேரம் எம்
இல்லத்திலிருந்து செல்லவேண்டும், அதை அடைய.

வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மாலை
வெய்யில் குறைந்தபின், ஏழு மணிக்குப் புறப்பட்டோம்.

இரண்டு மைல் உள்ளது, குளத்தைச் சுற்றி ஒரு பாதை.
இரண்டு மாதங்கள் சென்ற பின்னர், நடக்க முடியலாம்!

குளத்தின் அருகில் காரை நிறுத்தி, கொஞ்சம் நடந்து,
குளத்தின் கரையில், சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தோம்.

வாத்துக்கள் சில நீந்திக் கொண்டிருக்க, கரையில் ஒரு
வாத்துக் குஞ்சு நடுங்கியபடி அமர்ந்துகொண்டிருந்தது.

அதைக் காமராவிலே சிறைப் பிடிக்க எண்ணிச் சென்று
அதைப் படம் எடுக்க, தன்னைப் பிடிக்க வந்தோமென்று,

தன் பிஞ்சுக் குரலில் அலறியபடியே, நீரிலே பாய்ந்தது;
தன் அன்னை தந்தை என்று ஒரு ஜோடியிடம் செல்ல,

அவை இரண்டும், குஞ்சைக் கண்டுகொள்ளாமல் போக,
அவை தன்னைப் பெற்றவை அல்ல என்பதை அறிந்து,

வேறு திசையில் தேடியபடியே நீந்திச் சென்றது, பாவம்.
வேறு ஒரு வாத்து, இதன் அருகில் இணையாகச் சென்று

துணை வருவதை தூரத்தில் கண்டு, கண்கள் பனித்தன!
துணை வந்தவுடனே, அலறிய குஞ்சும் அமைதியானது!

பெற்ற பாசத்தை மறக்கும் சில மனிதர்கள் உள்ளபோது,
பெற்ற குஞ்சை அணைக்கும் பறவை உயர்வு அல்லவா?

:hug: . . :thumb: . . தொடரும் ..................

 
Horn pond:

DSCN6270.JPG


கரையில் ஒரு வாத்துக் குஞ்சு நடுங்கியபடி அமர்ந்துகொண்டிருந்தது.

DSCN6280.JPG



 
தன் அன்னை தந்தை என்று ஒரு ஜோடியிடம் செல்ல............

DSCN6281.JPG


அவை இரண்டும், குஞ்சைக் கண்டுகொள்ளாமல் போக......

DSCN6282.JPG



 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 42

இந்தக் கதை முடியவில்லை! இன்னொரு குஞ்சு,
சொந்தமான எதையோ தொலைத்தது போன்று,

கரையை அடைந்து, மேலும் கீழும் அலைந்திட,
விரைவில் ஒரு 'கிளிக்' செய்யலாமெனச் செல்ல,

ஓரிடத்தில் நிற்காமல், அதுவும் பரபரக்க, நான்
ஓடும் அதைப் படமெடுக்க, 'Sports mode' வைத்து,

படம் எடுத்தும், Focus ஆகவில்லை! அது அந்த
இடம் முழுதும் தேடிய பின்பு, மீண்டும் சென்று,

நீரில் புகுந்து, தனது கூட்டத்துடன் கலந்துவிட்டு,
நீச்சல் வீரன் போன்று , சாகசங்கள் பல செய்தது!

வெள்ளை நிறப் பூக்கள், கரை முழுதும் மனதை,
கொள்ளை கொண்ட! என் மனம் கவர்ந்த அது

ன்னவென்று அறியாத நான், அருகில் செல்ல,
என்னை எம் பெண்ணரசி தடுத்து நிறுத்தினாள்!

பாரில் மூச்சுத் திணறலை, சிலருக்கு ஏற்படுத்தும்
பார்த்தீனியம் செடி என்று அறிந்து, நடுங்கினேன்!

கொடிய அந்தச் செடிக்கு, ஆண்டவன் அழகான
வடிவில் பூக்களைத் தந்துள்ளான்! விஷமுள்ள

நல்ல பாம்பும், வழுவழுப்பான, கண் பறிக்கும்
நல்ல வடிவினால் நம்மை மயக்கவில்லையா?

எண்ணத்தில் எழுந்தது, இதுபோன்று மனிதரில்,
எண்ணம் தீதாக, வடிவு அழகாக உள்ளனரே, என!

எட்டரை மணிக்கு, நிறைந்து பரவியது இருட்டு;
எட்டினோம் இனிய இல்லம், உடனே புறப்பட்டு!

:car: . தொடரும் ........................
 
Last edited:
'Sports mode' வைத்து,

படம் எடுத்தும், Focus ஆகவில்லை!

DSCN6274.JPG


நீரில் புகுந்து, தனது கூட்டத்துடன் கலந்துவிட்டு,
நீச்சல் வீரன் போன்று , சாகசங்கள் பல செய்தது!

DSCN6271.JPG
 
Last edited:

வெள்ளை நிறப் பூக்கள், கரை முழுதும் மனதை,

கொள்ளை கொண்ட..............

DSCN6278.JPG


கொடிய அந்தச் செடிக்கு, ஆண்டவன் அழகான

வடிவில் பூக்களைத் தந்துள்ளான்.................

DSCN6279.JPG


 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 43

மருத்துவமனையிலிருந்து இனிய இல்லம் வந்து
இருபது நாட்கள் ஓடிவிட்டன; ஒரு முறை சென்று

பார்க்க அறிவுறுத்தியதால், உறுதி செய்துவிட்டு,
பார்க்கும் மருத்துவரின் பெயரையும் அறிந்தோம்.

எல்லோரும் தந்தை பெயரையே சொல்லுவதால்,
எல்லோரின் முதற் பெயரும் அறிவது அவசியம்.

இரண்டு நாட்கள் சந்திக்கும் நேரத்தைத் தந்தனர்.
இரண்டு நாளும் மகன் வருவது கடினம்; மேலும்

செவ்வாயன்று குழந்தைக்கு வகுப்பு இருக்கிறது!
செவ்வாய் மகனும், புதன் பெண்ணரசியும் வந்திட

முடிவு செய்து, இரண்டு நாட்களும் மருத்துவரின்
முடிவு நல்ல விதமாக வர, நிம்மதியும் பிறந்தது!

அந்த Astronaut shoe வை அணிய வேண்டாம் என
வந்த மருத்துவரின் சொல்லே, மிகவும் பிடித்தது!

சிறைப்பட்ட பறவை விடுதலையால் மகிழும்;
அதைப்போல என்னவர் நிலையும் இருந்தது!

குட்டிக் கண்ணமாவிடம், இன்னும் ஆறு வாரம்
எட்டி நின்று விளையாடலாம்! தூக்கிக்கொண்டு

நடை பயில, இப்போது முடியாது என்று கூறினர்.
நடைப் பயிற்சி தந்த வினைதான் இது, என்றேன்!

வேலைகள் ஒரு மாதம் எளியதாகச் செய்த பின்,
வேலைகள் எப்போதும்போலவே செய்யலாம்.

சென்ற முறை, பல இடங்கள் பார்த்து வந்தோம்;
இந்த முறை, பலர் எங்களைக் காண வருவார்!

:grouphug: தொடரும் ...................
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 44

ஐந்து வயதுக்குக் குறைந்தால், பள்ளி செல்ல முடியாது
என்று இருந்த காலம், மலை ஏறிவிட்டது! இந்நாட்டில்,

குழந்தை தாய் வயிற்றில் வளரும்போதே, வகுப்புக்கள்;
குழந்தை வளர்ப்பைப் பற்றிப் பெற்றோருக்குப் பாடம்!

நான்கு மாதக் குழந்தை, 'படிக்க'ச் செல்லலாம்; நிஜமே!
நான்கு முதல், ஒன்பது மாதம் நிறைந்த குழந்தைகளை,

அன்னையர் கூட்டிக் கொண்டு, ஓரிடத்தில் கூடுகிறார்.
அன்புடன் ஆசிரியை வந்து, குட்டி பொம்மைகள் தந்து,

பலவிதமான உபகரணங்களுடன் விளையாடவைத்து,
பல வகைகளில் ஒற்றுமையும் கற்பிக்கின்றார். மதியம்

இரண்டு மணி முதல், தொண்ணூறு நிமிடங்கள், அங்கு
திரண்டு வரும் அனைவரையும், நன்கு மகிழ்விக்கிறார்!

செவ்வாய்க் கிழமை மட்டும் செல்லவேண்டும், அங்கு.
சென்று விளையாடிய கண்ணம்மா நன்கு உறங்குவாள்!

பிறந்தது முதல், மூன்று வயதுவரை நிறைந்தவர்களை,
சிறந்த Nursery Rhyme பாடல்களால் மகிழ்விக்க, வகுப்பு!

வாரம் ஒருநாள் நடக்கும் இந்த வகுப்பிற்கு, நண்பகல்
நேரம், வியாழக்கிழமை மட்டும் போய்வர வேண்டும்!

ஒரு வயது அதிகம் கொடுத்து, நான்கை ஐந்தாக ஆக்கி,
ஒரு பள்ளியில் சேர்க்கும் பழைய காலம், நம்முடையது!

ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு பள்ளி என்பதே,
இப்போது புதிய வழக்கமாக ஆகிவிட்டது; நல்லதே!

பெற்றோர் இருவரும் பணிக்குச் சென்றால், இப்போது,
மற்றவர் உதவியின்றிக் குழந்தை வளர்ப்பு கடினமே!

:blah: தொடரும் .........................
 
hi raji...
now east coast is under heavy heat..heat advisory given around boston metropolitan....this more 100 degrees in many cities USA....

more than chennai veyyil...............but no current cut in USA...but still current cut in chennai...here AC 's are fine..in chennai

AC irukku...current illai......so take care....

regards
tbs
 
Thank you TBS sir, for your caution!

சென்னையோட நூத்தி அஞ்சை அஞ்சாதவருக்கு, பாஸ்டன் வெய்யில் எல்லாம் வெறும் 'ஜுஜுபி'!!

We did have mercury soaring to higher nineties. But since good people (like us!!) live here, we get
'friendly rains' now and then, which drop the night temperature to seventies! That is real COOL! :rain:


 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 45

நடக்க இடக்குப் பண்ணும் Astronaut shoe வேண்டாம்;
நடக்க இரண்டு ஜோடி 'நடையன்'கள் இனி வேண்டும்!

ஒன்று வீட்டில் அணிந்து உலவ, கனம் இல்லாமலும்,
மற்றொன்று நடைப் பயிற்சிக்காகவும், என்னவருக்கு!

தள்ளுபடிக்காக பண்டிகைகள் வேண்டாம்! எப்போதும்
தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைக்கும், இங்கு.

குறைவான விலையில், நன்கு உழைக்கும் காலணிகள்,
நிறைந்து கிடக்கும் கடையே, Pay Less காலணிக் கடை.

எல்லாச் சிறப்பு அங்காடி வளாகங்களிலும், இருக்கும்;
எல்லோரும் தேர்ந்தெடுக்க, பல வகைகள் கிடைக்கும்!

என்னவருக்கு என்று கடைக்குள் நுழைந்த பின், நானும்
எனக்கென்று நல்ல காலணிகள் வாங்கிக்கொண்டேன்!

சென்ற முறை அமெரிக்க விஜயங்களிலே அறிந்தேன்,
இந்த ஊர் கடின ரோடுகளுக்கு, இந்தியக் காலணிகள்

வெறும் 'ஜுஜுபி' தான்! சில மைல்கள் நடந்துவிட்டால்,
இதம் தரும் மெத்தென்ற அடிப்பகுதி தேய்ந்தே போகும்!

முதல் முறை வந்தபோது, என் கனமில்லாத High heels,
முதல் வாரத்திலேயே தேய்ந்து போனதை அறியாமல்,

திடீரென்று என் நடை 'மகாபாரத சகுனி'போலச் சாய,
பகீரென்று அஞ்சி நடுங்கிய பின்பு, காரணமறிந்தேன்!

கடினமான பாதைகள் அமைப்பதால், அணிந்துகொள்ள,
கடினமான அடிபகுதி கொண்ட காலணிகள் தேவையே.

பாதி விலைக்கும் குறைவாகக் காலணிகள் கிடைக்க,
பாதுகைகள் வாங்கும் வேலை, நன்கு நிறைவேறியது!

:thumb: தொடரும் ....................

குறிப்பு:
'நடையன்' என்ற சொல்லை, திரு லேனா அவர்களிடம்
கற்றதாக நினைவு. நடையன் = காலணி = பாதுகை!
 
raji,

while praising how inexpensive consumer goods are in the usa, and how good the medical care the system can provide, you inadverently hit upon a minefield.

you might or might not know, that the usa, spends one dollar, for every 66 cents that it generates through services, personal and income taxes.

this 34 cents of extra spending is done through borrowing, and just because there is so much confidence in the usa, the usa pays next to nothing in interest.

the americans like a big military and a lot of entitlements like social security, unemployment, medicaid, medicare - but nobody wants to pay for it.

while you are in the usa still, it might be interesting to look at the usa with the critical lense, of one, like you, who has lived within your means all your life and saved some. the usa is just the opposite. i mean the government.

please ask your son, what he thinks of it. and pray enlighten us.

thank you.
 

Latest ads

Back
Top