• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

'காக்கை குருவி எங்கள் ஜாதி', என்று பாரதி பாடினாரே! சுத்தமான இடத்தில் வசிக்கும் குருவியும், அசுத்தம்

களையும் காக்கையும் போல இருக்கும் எல்லா வகை மனிதர்களையும், இதனால் மறைமுகமாகக் குறிப்பிட்டாரோ?

:noidea:
 
எங்களை அழைப்பதுபோலக் குரல் கொடுத்து,

நடை பயின்றது, ஒரு நெட்டை வாத்து....

DSCN6298.JPG
 

நரி என்று எண்ணிக்கொண்டு படம் எடுத்த பின்,

நரி அல்ல, பூனை என, அதன் முகம் அறிவித்தது! :peace:

DSCN6303.JPG

 
.......................
now you desist, from accepting my challenge.

i am disappointed, but will continue to be your fervent fan,...............
I don't want to disappoint you, Sir! Please to through my other thread - இலக்கணமே....

and view post #183 and #184 in the 19th page!
:madgrin:
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 50

பல் பொருள் அங்காடிகள் எங்கும் இருக்கும்;

பல விதப் பொருட்களும் நிறைந்து கிடக்கும்!

எந்தப் பொருள் எடுக்க வேண்டுமாயினும்,
அந்தப் பொருளில் பற்பல வகைகளுண்டு!

நமக்குப் பிடித்த வகையைக் கண்டுபிடிக்க,
நமக்கு நிறைய நேரம் ஆகிவிடும்; எனவே

இந்த ஊர்ப் பசங்கள், தேடித் தேடித் தமக்கு
எந்த வகை தேவையெனத் தேர்வு செய்து,

அந்த வகையையே உடனே எடுக்கின்றார்!
இந்த முறையால், நேரம் மிச்சப்படுகின்றது.

சாப்பிடும் பொருட்கள் பலவற்றை, சர்க்கரை
சாப்பிடாத நபர்களால் தொடவே முடியாது!

எங்கும் சர்க்கரை; எதிலும் சர்க்கரைதான்!
இங்கு செயற்கை இனிப்பு இட்டவை உண்டு.

ஆனால் Aspartame போன்றவை தீதேயாகும்.
ஆபத்தான பின் விளைவுகள் கொண்டவை.

பக்க விளைவு தரும் அவற்றைத் தொடாது,
தக்க எச்சரிக்கை கொள்ளுதல் அவசியம்.

ஆனாலும் செயற்கை இனிப்பிட்ட ஐஸ்க்ரீம்,
எவராலும் வேண்டாமென ஒதுக்க முடியாது!

கொஞ்சம் ருசித்துப் பார்ப்போமே என்று, நம்
நெஞ்சம் நினைக்க வைக்கும் வண்ணங்கள்!

வெனில்லா, சாக்கலேட், ஸ்ட்ராபெர்ரி என்று,
இனிய மூவண்ண ஐஸ்க்ரீமைச் சுவைத்தேன்!

icecream.jpg


:hungry:
தொடரும் ...............
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 51

பெற்றோர் இருவரும் பணி நிமித்தம் சென்றால்

உற்றவர் குழந்தைகளைப் பேணுவார், இங்கு!

உற்றவர் என்பது அந்தப் பெற்றோர் ஒருவரைப்
பெற்றவராக இருப்பதுதான், நடைமுறையாகும்!

மகனின் நண்பன், தனது அலுவலக வேலையாக,
அவனின் மனைவியுடன் வெளிநாடு சென்றுவிட,

இரு விஷமக்காரக் கண்ணன்களும் தாத்தா, பாட்டி
இருவர் பாதுகாப்பில்! பெரிசுகள் ஓடிக் களைத்தன!

எங்கள் இல்லத்திற்கு அவர்களை அழைத்து வந்து,
எங்களுடன் ஒரு மாலை இருக்கச் சொன்னோம்!

இந்த ஊரில் கார் ஓட்டவே நம்மவருக்கு பயம்தான்;
இங்கு, எம் மகனே அவர்களை அழைத்து வந்தான்.

பெரிய விஷமம் உணவில் நாட்டம் உள்ளது! ஆனால்
சிறிய விஷமம் உணவுப் பக்கம் வருவது கிடையாது!

பெரியவனுக்கு நாலு வயதில் உணவுக் கட்டப்பாடு!
பெரிசுகள் அவனைச் சாப்பிடவே விடுவது இல்லை!

அவன் எதைப் பார்த்தாலும், வேண்டுமெனக் கேட்க,
அவன் பின்னாலே, அவன் பாட்டி ஓடி ஓடித் தடுக்க,

எப்படியெல்லாம் மாறிவிட்டது, குழந்தை வளர்ப்பு?
இப்படி எண்ண அலைகள் ஓடியதில் என்ன வியப்பு?

:baby: தொடரும் .........................
 
re your post 506, 7:

it is amazing such terrors grow up to be responsible high acheiving young men. we have had a few nephews, whose behavaiour we used to wonder, when they were young. once they started going to college, they automatically shaped up, and are today good wage earners with excellent jobs!! we can never tell how our kids will turn out based on their behaviour when they are young.

it is suprising how quickly and often we can view rainbows here. never used to see rainbows in india. did you have the same feeling?
 
The விஷமங்கள், my cousins, about whom I wrote in my other thread வண்ண வண்ண மனிதர்கள் are now very

high ranked doctors. Children who are very naughty turn out to be good citizens and some times very well behaved

children become rude adults, later in their lives... It is really strange... Kunjuppu Sir may have a few examples too!


Regarding rainbows... The double rainbow we saw in Los Alamos, during our last visit, is still fresh in my mind. It

starts almost vertical from the ground! The picture I have posted here in # 508, taken at the water park , is the

rainbow colors formed by the droplets spraying from the fountain! We seldom see rainbows in India because during

rainy season, sun will not be visible in the correct angle on most of the days!


Now the rainbow picture shot in 2009!

Rainbow.jpg
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 52

வீட்டைச் சுற்றிலும் மரங்கள் செடிகள் இருப்பதால்,

வீட்டைச் சுற்றி வித விதமாகப் பறவைகளும், சில

மிருகங்களும் கண்களில் தெரிவதும் வழக்கம்தான்;
ஒரு முறை பூனையை நரியென நினைத்தேன், நான்!

எங்கள் வீட்டைச் சுற்றி, குரல் கொடுத்த ஒரு வாத்து,
எதிர் வீட்டில் நுழைந்தவுடன், காணாமலே போனது!

இன்னொரு நாள் காலையில், புதிய மிருகம் உலவிட,
என்னவர் பார்த்துச் சொல்ல, உடனே காமரா எடுத்து

படம் எடுத்த பின்பு மகனிடம் காட்ட, அவன், அதுதான்
Groundhog என்ற வகையாகும் என்றான். 'வலை'யில்

எந்த மிருகத்தின் விவரங்கள் வேண்டுமோ, அவை
அந்த நொடியிலேயே கிடைக்கும்! மிகவும் வசதியே!

எலி வகையைச் சேர்ந்த இது, மண்ணின் அடியில்
குழி தோண்டிப் பொந்து அமைத்து வாழும் மிருகம்.

கட்டடக் கலை நிபுணர்போல அழகாக அமைக்கும்;
சுட்டிடும் வெய்யில் முதல், நடுக்கும் பனி வரையில்

எல்லா தட்ப வெப்பமும் தாங்கும் வகையில், அங்கு

எல்லா வசதிகளுடன் (கழிவறை உட்பட) கட்டிடும்!

PHOTO2(2).GIF


நரிகள், கரடிகள் போன்ற மாமிச பட்சணிகள் போக,
பெரிய பருந்து வகைகளும், இவற்றுக்கு எதிரிகளே.

வட அமெரிக்கா முழுதும் பரவிக் கிடக்கும்; அதன்
படத்தை உடனே ஆல்பத்திலே போட்டுவிட்டேன்!

:photo: தொடரும் ........................
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 53

'ஒரு கோவில் உண்டா, குளம் உண்டா'? என்பது போல,
'ஒரு Park உண்டா, Beach உண்டா? என்றும் கேட்பார்கள்!

நாங்கள் கோவில், குளம் பார்த்தோம்! இனிமேல், இங்கு
நாங்கள் பார்க்க வேண்டியது, மற்ற இரு இடங்களுமே!

அக்காவின் இரண்டாம் மகன், மனைவி, மகனுடன் வர,
அக்காரணத்தை முன்னிட்டு, குழந்தைகள் விளையாட,

நீரூற்றுக்கள் இருக்கும் 'Water Park' காணச் சென்றோம்.
நீரில் விளையாட, பல குழந்தைகள் ஆவலாக இருக்க,

'நட்பு மழை' நட்பில்லாத மழையாக மாறிப் பொழிய,
தட்ப வெப்பம் குளிராக மாற, எல்லோரும் ஓடிப் போக,

நீருற்றுக்களைப் படம் எடுத்தேன், காலியாக! பின்னர்
நீரூற்று மேல் சூரியக் கிரணங்கள் விழ, மிக அழகிய

வானவில் வண்ணங்கள் தோன்றி மனத்தை மயக்க,
வானவில் வண்ணங்கள் சிறைப்பட்டன, காமராவில்!

இரு வயது மதிக்கத் தக்க சிறுவன் ஒருவன், நடக்காது,
இரு குட்டிக் கால்களால், பந்தை உதைத்து விளையாட,

எங்கள் வீட்டு வாண்டும், பந்தை உரிமை கொண்டாட,
எங்கள் பாடு படு திண்டாட்டமானது, பந்தைப் பிடுங்க!

ஊஞ்சல்கள், சறுக்கு மரங்கள், வளைந்த பாலங்கள்;
நெஞ்சில் நிற்கும் பல குழந்தை விளையாட்டுக்கள்!

எங்கள் கண்ணம்மா வேடிக்கை பார்த்து, மகிழ்ந்தாள்;
எங்கள் உதவியுடன் ஊஞ்சல் ஆடிச் சிரித்து ரசித்தாள்!

நன்கு மாலைப் பொழுதைக் கழித்த பின், எல்லோரும்
வந்து சேர்ந்தோம், எம் இனிய இல்லம், இரவு நேரம்!

:car: தொடரும் ......................
 
Last edited:
படம் பார்த்துக் கதை சொல்லுவது போல, Post # 507 - 8 இன் கதை # 513 இல் எழுதியுள்ளேன்! :typing:
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 54

மறுநாள் காலை என் அண்ணா, அண்ணி வந்துவிட,
மறுபடியும் ஊர் சுற்றப் புறப்பட்டோம் அனைவரும்.

சென்ற இரண்டு விஜயத்திலும் போகாத Duck Tour
சென்று வரத் தீர்மானம் செய்தோம். அதைப் பற்றி

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், அதுவே
எளிதில் நிலத்திலும், நீரிலும் செல்லும் 'படகு பஸ்'!

Boston இல் சரித்திரப் புகழ் பெற்ற இடங்களில் சுற்றி,
Boston இன் அழகிய சார்ல்ஸ் ஆற்றில் இறங்கிவிடும்!

அமெரிக்க சரித்திரம் தெரிந்தால், நன்கு ரசிக்கலாம்.
அதற்கும் எனக்கும் காத தூரம் ஆயிற்றே! அதனால்,

இயற்கை வளம் நிறைந்த பூங்காக்களில் தெரிகின்ற
இயற்கை அழகை ரசித்தவாறே சென்றேன், நானும்.

பழைமையான கல்லாலான சில கட்டிடங்களுடன்,
புதுமையான கண்ணாடி ஜன்னல் கட்டிடங்களும்

வானுயர ஓங்கி நிற்க, அதிசயமான நகரம்தான் இது.
வாய் ஓயாது ஓட்டுனர் கதைகள் சொல்லி வந்தார்!

குட்டிப் பசங்கள் பல வண்டியினுள் இருக்க, அவர்கள்
சுட்டித் தனம் பல செய்து, வாத்துபோலக் குரலெழுப்ப,

எதிர்பார்த்தபடி ஆற்றில் இறங்கியது, அதே பேருந்து!
எதிர் நீச்சல் போடத் தேவை இல்லாத, அமைதி ஆறு!

மெதுவாக நீரிலே செல்ல ஆரம்பித்ததும், ஓட்டுனர்
மெதுவாகக் குழந்தைகளை, படகு ஓட்ட அழைத்தார்!

தொடரும் ...................
 
பழைமையான கல்லாலான சில கட்டிடங்களுடன்,
புதுமையான கண்ணாடி ஜன்னல் கட்டிடங்களும்

வானுயர ஓங்கி நிற்க, அதிசயமான நகரம்தான் இது.


DSCN6378.JPG


DSCN6405.JPG
 

எதிர்பார்த்தபடி ஆற்றில் இறங்கியது, அதே பேருந்து!


DSCN6381.JPG


எதிர் நீச்சல் போடத் தேவை இல்லாத, அமைதி ஆறு!

DSCN6402.JPG
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 55

அழகான வடிவில் அமைந்த புதிய பாலம் தெரிய,
மெதுவான ஓட்டத்தில் படகும் நகர்ந்து சென்றது.

ஒவ்வொரு குழந்தையும், தானே ஓட்டுவது போல
ஒவ்வொரு நொடியும் நினைக்க வைத்த ஓட்டுனர்,

அவர்களிடம் கேள்விக் கணைகள் தொடுத்தவாறு,
அவர்களுடைய ஆசைகளையும் கேட்டு அறிந்தார்.

ஒருவன் தான் விஞ்ஞானியாக ஆவேன் எனக் கூற,
வேறொருவன் விமானியாக ஆவேன் எனச் சொல்ல,

ஒரு சிறுமி மருத்துவராக ஆவேன் என்று கூற, இன்-
னொரு சிறுமி எழுத்தாளர் ஆவேன் என்று சொல்ல,

கடைசியாக வந்த சிறு வாண்டு சொன்னது, உணவுக்
கடையிலே வேலை பார்ப்பேன் என்று! ஒரு வேளை,

அவன் பெற்றோரில் ஒருவருக்கு அந்த வேலையோ?
அவன் அதே வழியில் போகவே முனைகின்றானோ?

கொள்ளைச் சிரிப்பும், கும்மாளமுமாக அங்கே உள்ள
பிள்ளைகள் சந்தோஷித்தது என்றும் நினைவிருக்கும்!

சில பாலங்களின் அடியே போகும்போது, தெரிந்தது
பல ஆண்டுகள் பழைமையான துருப்பிடித்த இரும்பு!

அந்தப் பழைய வடிவங்கள் புதியதாக மாற்றும் பணி,
அந்தப் பாலத்தின் அடுத்த பகுதிகள் தெரிவிக்கின்றன.

ஓரிடத்தில் வரிசையாகப் படகுகள் அணிவகுத்தன.
மேலிடத்து மக்களின் விளையாட்டுக்கே அவை!

காற்றின் விசையால் செலுத்தும் ஒரு படகை, அந்த
ஆற்றின் மேல், ஒருவர் செலுத்தி மகிழக் கண்டோம்!

தொடரும் ......................
 
Last edited:

விஞ்ஞானியும் விமானியும் பார்த்தீர்கள்...
இனி மருத்துவரும் எழுத்தாளரும்...

DSCN6412.JPG


DSCN6413.JPG
 

கடைசியாக வந்த சிறு வாண்டு சொன்னது, உணவுக்

கடையிலே வேலை பார்ப்பேன் என்று.................

DSCN6414.JPG

 

சில பாலங்களின் அடியே போகும்போது, தெரிந்தது
பல ஆண்டுகள் பழைமையான துருப்பிடித்த இரும்பு!

DSCN6408.JPG



அந்தப் பழைய வடிவங்கள் புதியதாக மாற்றும் பணி,
அந்தப் பாலத்தின் அடுத்த பகுதிகள் தெரிவிக்கின்றன.


DSCN6409.JPG

 

ஓரிடத்தில் வரிசையாகப் படகுகள் அணிவகுத்தன.
மேலிடத்து மக்களின் விளையாட்டுக்கே அவை!

DSCN6393.JPG


காற்றின் விசையால் செலுத்தும் ஒரு படகை, அந்த
ஆற்றின் மேல், ஒருவர் செலுத்தி மகிழக் கண்டோம்!

DSCN6404.JPG

 
Last edited:
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 56

சிறிய படகுகள் தூரத்தில் தெரிய, அவையெல்லாம்

சிறிய வயதினர் விடுமுறையைக் கழிக்க, என்றனர்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற சித்தாந்தம் இங்கு;
வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கிறார்.

கூட்டமாக மனிதர்கள் மனம் மகிழ்ந்திருக்க, தனது
கூட்டத்தை விட்டு விலகிய, ஒரு கரு நிறப் பறவை,

தண்ணீரில் மிதந்த ஒரு Drum - மின் மேல் அமர்ந்து,
தன் தனிமையை அனுபவித்து, மௌனம் காத்தது!

அந்த ஆற்று நீரும் கருமையாகவே தெரிகின்றது,
எந்த ஜீவனும் அதை ஆற்று நீர்தான் என நம்பாது!

அரிய நகரத்தின் பல பகுதிகளையும் பார்த்த பின்,
பெரிய வட்டம் அடித்து, எங்கள் படகு திரும்பியது.

ஆற்று நீரின் உள்ளிருந்து மீண்டும் கரை ஏறியது;
ஏற்றமான பேருந்தாக மாறி, ஓடத் தொடங்கியது!

நிலத்திலும், நீரிலும் ஒரே வாகனத்தில் போவது,
நினைத்தாலே ஓர் இனிய அனுபவமே ஆகிறது!

வந்த முந்தைய இரு பயணங்களில் பார்க்காதது,
இந்த முறை பார்த்ததில், எனக்குப் பெருமகிழ்ச்சி!

அண்ணா அண்ணி எங்களுடன் வந்தது, எனக்கு
இன்னும் அதிகமான மகிழ்ச்சி தந்தது, நிஜம்தான்!

தொடரும் .............................
 

Latest ads

Back
Top