• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...


அழகிய சிறு மணல் பரப்பும், பீச் போல அங்கிருக்க....

IMG_1715.JPG


Date appears in the photos taken in my son's camera! :)
 

அதை எடுத்துப் பாலைவனமாகக் காட்டலாம், சினிமாவில்! .. Close-up shot!

IMG_1718-1.JPG
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 90

ஏதேனும் வண்ணத்தில் நாம் உடை வாங்கினால்,
அதே வண்ணம் நம் கண்களிலே அடிக்கடி படும்!

வண்ண மரங்கள் நீண்ட பயணத்தில் கண்ட பின்,
வண்ணங்கள் பல எங்கள் பகுதியிலே தெரிந்தன!

மகன் வீட்டைச் சுற்றியுள்ள செடிகளின் இலைகள்,
அதன் வண்ணத்திலே அழுத்தமும் பெற்றிருந்தன!

மீண்டும் ஒரு வட்டம் காமராவுடன் சுற்றி வந்தேன்;
மீண்டும் சில வண்ணங்களைச் சிறைப்பிடித்தேன்!

அன்னையிடமிருந்து எனக்கு ஒரு வேண்டுகோள்,
அன்புடன் வந்தது; வாரம் ஒரு முறை நேரும் நிற

மாற்றங்கள் அவருக்குக் காண வேண்டுமாம்! இது
ஏற்றமான எண்ணமே! மாற்றங்கள் தேடுகின்றேன்!

கிழக்குப் பகுதியில் வண்ண மாற்றம், சில நாட்கள்
கழித்தே தோன்றுகின்றன. இது நன்றாகப் புரிந்தது,

நடைப் பயிற்சிக்கு என்றே அமைத்த பூங்காவில்,
நடை பயின்று ஒரு மாலை வேளை சென்றபோது!

நம் வாகனங்கள் செல்லத் தடை விதித்த பகுதிகள்;
நம் சக்கரக் காலணிகளும், சைக்கிள்களும் போக

ஏற்றவாறு உள்ளது, சுமார் பத்து அடி அகலப் பாதை.
ஏற்றமான நெடும் மரங்கள் இருபுறம் இருப்பதால்,

நல்ல குளிர்ந்த காற்று நம்மை அரவணைக்கிறது!
செல்லக் கண்ணம்மாவை, குட்டி வண்டியில் இட்டு,

ஒரு மணி நேரம் சுற்றி வந்தபோது, விந்தையான
சிறு பூக்கள், பாதை ஓரம் மலர்ந்து அழகு கூட்டின!

:) தொடரும்..................
 
Last edited:
மகன் வீட்டைச் சுற்றியுள்ள செடிகளின் இலைகள்,
அதன் வண்ணத்திலே அழுத்தமும் பெற்றிருந்தன!

DSCN7013.JPG
 
நம் வாகனங்கள் செல்லத் தடை விதித்த பகுதிகள்;

நம் சக்கரக் காலணிகளும், சைக்கிள்களும் போக


ஏற்றவாறு உள்ளது, சுமார் பத்து அடி அகலப் பாதை.

DSCN6992.JPG

 

கிழக்குப் பகுதியில் வண்ண மாற்றம், சில நாட்கள்
கழித்தே தோன்றுகின்றன. இது நன்றாகப் புரிந்தது,

DSCN7004.JPG

 

ஒரு மணி நேரம் சுற்றி வந்தபோது, விந்தையான

சிறு பூக்கள், பாதை ஓரம் மலர்ந்து அழகு கூட்டின!

DSCN6997.JPG



 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 91

பூக்களின் தேன் உண்ண, தேனீக்கள் சுற்றின; அதில்

பூமேல் அமர்ந்த ஒரு தேனீ, என் வண்ணப் படத்தில்!

பலர் மிதிவண்டிகளில் 'Passing' என்று கூறிச் செல்ல,
சிலர் சக்கரக்காலணிகளில் மிக வேகமாகச் செல்ல,

சிறு குழந்தை ஒன்று தன் மூன்று சக்கர வாகனத்தை,
சிறு கால்களால் மிதித்துச் செல்ல, ஒரு தாய், தனது

மிதிவண்டியினுடன் இணைத்த குட்டி மிதிவண்டியில்,

மிக ஆனந்தமாகத் தன் குழந்தையுடன் செல்ல, அவன்,

தானே வண்டி ஓட்டுவதாக பாவித்து, பெருமையாகத்
தன் இருக்கயில் அமர்ந்து ஒய்யாரமாகப் போக, இந்த

நீட்ட வாக்கில் அமைந்த நான்கு சக்கரக் காலணியும்,
நீட்ட வடிவில் அமைந்த தாய் - மகன் மிதிவண்டியும்,

புதிய கண்டுபிடிப்புக்களால், இவர்கள் எல்லோருமே,
இனிய நேரங்களை நாடுவதை உணர்த்த, மகிழ்ந்தேன்!

கிழக்குப் பகுதிகளில் இப்பொழுதுதான், இலைகளிலே
அழகிய வண்ண மாற்றங்கள் தொடங்கி இருக்கின்றன!

சவுக்கு மரங்களின் வாடிய இலைகள்கூட, வேறுபட்டு
இருப்பதால், அதுவும் மிக அழகாகவே தெரிந்தது! ஒரு

மரத்தில் யாரோ பழைய ஆடையைத் தொங்கவிட்டது,
மரத்தில் யாரோ தூக்குப் போட்டுத் தொங்குவது போல,

திடீரெனத் திரும்பியதும், பயமுறுத்தியது! மாலையின்
பளீரென்ற வெய்யிலில் எடுத்த அந்தப் படத்தை, நான்

வெளிச்சம் குறைத்து, எடிட் செய்தபோதே அறிந்தேன்,

வெளிச்சம் குறைந்தால், பேய் போலத் தோன்றுமென!

:scared:


தொடரும்..................


 

நீட்ட வாக்கில் அமைந்த நான்கு சக்கரக் காலணி...

Photo courtesy: Wikipedia.

220px-Inline_skating.jpg
 
சவுக்கு மரங்களின் வாடிய இலைகள்கூட, வேறுபட்டு
இருப்பதால், அதுவும் மிக அழகாகவே தெரிந்தது!

DSCN7005.JPG
 

மரத்தில் யாரோ பழைய ஆடையைத் தொங்கவிட்டது,

மரத்தில் யாரோ தூக்குப் போட்டுத் தொங்குவது போல,

திடீரெனத் திரும்பியதும், பயமுறுத்தியது! :scared:

DSCN7003.JPG
 

வெளிச்சம் குறைத்து, எடிட் செய்தபோதே அறிந்தேன்,
வெளிச்சம் குறைந்தால், பேய் போலத் தோன்றுமென!

DSCN7002.JPG
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 92

படத்தை எடுக்க நான் நின்றுவிட்ட பொழுது, மற்றவர்
நடந்து பல அடிகள் சென்றதால், வேகமாக ஓடினேன்!

தனியாக அந்த உடையருகில் நிற்கும்போது, மனதில்
எளிதாக பயம் வந்து புகுந்துவிடும் என்று அறிந்தேன்.

அருகில் இருந்த லைப்ரரியில் புத்தகங்களை மாற்றி,
விரைவில் இனிய இல்லம் திரும்பினோம். அப்போது

வெளிச்சம் கொஞ்சம் குறைந்ததால், என் காமராவில்
வெளிச்சம் தரும் Flash set செய்து, இனிய இல்லத்தின்

தோட்டத்தை ஒரு வட்டம் சுற்றி வந்து, இலைகளின்
மாற்றத்தை, மீண்டும் என் அன்னைக்காக எடுத்தேன்.

ஒரு மரத்தில் முழுதும் இலைகளே கிடையாது; அது
ஒரு முற்றும் துறந்த முனிவரை நினைவுபடுத்தியது!

இந்த வீட்டை விற்றவரின் உடன் பிறப்பு, இந்நாட்டில்
சிறந்த ஒரு Landscape நிபுணராம்; நன்கு தெரிகின்றது!

வண்ணக் கலவைகள், இலையுதிர் காலத்தில், நல்ல
வண்ணம் இருக்குமாறு, செடிகளை வைத்து உள்ளார்.

பச்சைப் புல்லின் மேல் அரக்கு நிறப் பூக்கள்; அருகில்
பச்சை ஆழ்ந்த சிவப்பாக மாறும் செடிகள்; இன்னும்

வெள்ளை நிறத்தில் மாறும் புற்கள்; பார்ப்பவர் மனம்
கொள்ளை அழகில் மயங்கிவிடுவது, சர்வ நிச்சயம்!

இரு மரங்கள்
வீட்டின் முன்பு உயர்ந்து நிற்கின்றன;
ஒரு இரவில், அப்படியே ஆழக் குழியில் நட்டாராம்!

எதிர் வீட்டில் ஒரு பெரிய Maple மரம்; இயற்கையின்
சதிர் ஆட்டத்தில், தினம் அழகாக நிறம் மாறுகிறது!

தொடரும் ........................


 
இரு மரங்கள் வீட்டின் முன்பு உயர்ந்து நிற்கின்றன;
ஒரு இரவில், அப்படியே ஆழக் குழியில் நட்டாராம்!

One of those trees!


DSCN6103.JPG
 

ஒரு மரத்தில் முழுதும் இலைகளே கிடையாது; அது

ஒரு முற்றும் துறந்த முனிவரை நினைவுபடுத்தியது!

DSCN7218.JPG

 

வண்ணக் கலவைகள், இலையுதிர் காலத்தில், நல்ல

வண்ணம் இருக்குமாறு, செடிகளை வைத்து உள்ளார்.

DSCN7222.JPG

 
எதிர் வீட்டில் ஒரு பெரிய Maple மரம்; இயற்கையின்
சதிர் ஆட்டத்தில், தினம் அழகாக நிறம் மாறுகிறது!

DSCN7215.JPG
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 93

எத்தனை முறைகள் வண்ண இலைகள் கண்டாலும்,
அத்தனை முறைகளும் வியப்புதான் மேலிடுகின்றது!

மிக நீண்ட சாலைப் பயணம் இதுவரை போகாததால்,
மிக நல்ல வாய்ப்பில், மகன் எங்களை அழைத்தான்.

Philadelphia வில் ஓர் அலுவலக வேலை உள்ளதால்,
Philadelphia சென்று வர, வாடகைக் காரை எடுத்தான்.

நம் கார் டயர் தேயாமல், நெடும் பயணம் சென்று வர,
நம் உதவிக்கு வருவதுதான் இந்த வாடகைக் கார்கள்.

என்னவருக்கு மிக ஆனந்தம்; அங்கு வசிக்கின்றனர்
என்னவருடைய பெரியம்மாவின் ஐந்து வாரிசுகள்!

ஓர் அண்ணாவுக்கு, எண்பது வயது நிறைவு ஆனது!
ஒரு மாதம் முன் நடந்த விழாவுக்குப் போகவில்லை.

குட்டிப் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு, எம்
குட்டிப் பெட்டிகளில் இட்டுக்கொண்டு புறப்பட்டோம்!

நீல வானத்தில் வெண் மேகங்கள் மிதந்து வர, அந்த
நீண்ட பயணத்தை உச்சி வெய்யிலில் ஆரம்பித்தோம்.

குளிர் காலம் தொடங்கியதால், அது சரியான நேரமே.
தளிர் இலைகள் முதிர்ந்து, நிற மாற்றம் மரங்களிலே!

சோலைபோல வளர்ந்துள்ள மரங்களின் நிறங்களை
சாலையின் இருபுறம் இருந்து காமராவில் பிடித்தேன்!

:car: . தொடரும் ..............
 
நீல வானத்தில் வெண் மேகங்கள் மிதந்து வர, அந்த
நீண்ட பயணத்தை உச்சி வெய்யிலில் ஆரம்பித்தோம்.

DSCN7034.JPG
 
சோலைபோல வளர்ந்துள்ள மரங்களின் நிறங்களை
சாலையின் இருபுறம் இருந்து காமராவில் பிடித்தேன்!

DSCN7035.JPG

 

Latest ads

Back
Top