• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!


பிள்ளை மனம் கல்லு!


இது எத்தனை உண்மையான வாசகம்! பெற்றோரின் அனுமதியின்றி, தனக்குப் பிடித்தவனை மணந்து வெளிநாடு

சென்றுவிட்டாள், ஒரு சாதுபோலத் தோற்றம் தரும் மங்கை. அவளின் அப்பா கோபத்தின் உச்சியிலிருந்து

இறங்காமல் இருக்க, அம்மாவோ பரிதவித்தாள். ஒரு முறை சென்று பெண்ணைப் பார்த்து வந்தால்தான் நிம்மதி

என்று நினைத்தாள். ஆனால், போகக் கணவனின் அனுமதி கிடைக்காது என்பது சர்வ நிச்சயம்! பேசா மடந்தையாக,

ஒரு விஷயமும் சொல்லாத மகளைக் காண, தன் மகனை அனுப்பத் தீர்மானித்தாள். அன்புடன்,
ளுக்குப் பிடித்த

சில பொருட்களுடன், தங்கையைக் காண வெளி நாடு சென்றான், பெறும் பணச் செலவு செய்த மகன். உறவினர்

வீட்டில் தங்கிக் கொண்டு, மறுநாள் தங்கையைச் சந்திக்கச் சென்றான்.



திடீரெனத் தன் அண்ணனைக் கண்ட தங்கைக்கு, ஒரு சில நொடிகள் அவனை அடையாளம் தெரியவில்லை! அதன்

பின், சிரித்தபடி அருகில் வந்து பேசி, அவன் தந்த பொருட்களையும் வாங்கிக் கொண்டாள். ஆனால், தப்பித்

தவறிக்கூட, அவனை வீட்டிற்கு வருமாறு அழைக்கவே இல்லை!


இதைத்தான் கல் மனம் என்று சொல்லுகின்றாரோ? :ohwell:


 

நாடகமே இந்த உலகம்!


இது அனைவரும் அறிந்ததுதானே! நமக்கு இறைவன் தந்த வேஷத்தைக் கச்சிதமாக முடிப்பதே நமது கடமை. இது ஒரு

புறம் இருக்க, தம் சௌகரியத்துக்கு வேண்டி, சில வேளைகளில், மனிதர் வேஷம் இடுவதும் உண்டு! இதோ ஒரு சம்பவம்:



திருப்பதி ஸ்வாமி, நண்பரின் குல தெய்வம். ஆண்டுக்கு ஒரு முறையேனும் செல்ல வேண்டிய கட்டாயம். திருப்பதி
க் கூட்டம்

பற்றி நமக்குத் தெரியாதா, என்ன! அலைமோதும் கூட்டத்தில் தத்தளித்து, ஏதேனும் சேவைக்கு டிக்கட் தேடி அலைந்து,

அதுவும் கிடைக்காதபோது, ஜீயர் சுவாமிகளின் சிஷ்யர் ஒருவர் கண்ணில் பட்டார். மிகவும் பவ்யமாக அவரிடம் சென்ற

நண்பர், 'தரிசனத்துக்கு ஏதேனும் உதவி செய்ய முடியுமா?' என்று கேட்க, அவர், 'நீங்கள் வைஷ்ணவ சம்பிரதாய

உடைகளை அணிந்து, திருமண் நெற்றியில் பெரிதாக இட்டு, நான் சொன்ன நேரத்தில் வந்தால், எங்கள் கூட்டத்துடன் நல்ல

தரிசனம் செய்து வைக்கிறேன்' என்று சொல்ல, நண்பரின் மனைவி மனதில் நினைத்தாராம், 'நாங்கள் நாமம் போட்டுக்

கொள்கிறோம்; நீங்கள் எங்களுக்குப் போடாமல் இருந்தால் சரி' என்று! சொன்ன நேரத்தில், சொன்ன வேஷத்தில் சென்ற

நண்பரும், அவர் மனைவியும், சிறப்பு தரிசனம் பெற்றுத் திரும்பினர், மனம் மகிழ!



நாடகமே இந்த உலகம் என்பது எத்தனை நிஜம்? :drama:


 

தன் கையே தனக்கு உதவி.



இது எல்லோரும் அறிந்ததுதானே! நம்மால் இயன்ற அளவு, நம் வேலைகளை நாமே செய்தல் நலம் தரும். ஆனாலும்,

உதவிகளைக் கேட்டுப் பெறுவதும், செய்பவர்களை மேலும் செய்ய வைப்பதும் சிலரது இயல்பு. இப்போது நான் சொல்லப்

போவது, ஒரு எண்பது வயதைக் கடந்த முதியவரைப் பற்றி.



காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர் அவர். என்னவரின் தூரத்து உறவினர். அவருக்கு நான்கு மகள்கள்; மூன்று

மகன்கள். தன் தேவைகளை குறைத்துக் கொண்டு, அனைவரையும் நன்கு படிக்க வைத்து, வாழ்க்கையில் நல்ல நிலை

பெறச் செய்தவர். எளிய வாழ்க்கை, கடைசி மூச்சு வரை! தள்ளாத வயதிலும், தானே தன் வேலைகள் அனைத்தும்

செய்தவர்; தன் ஆடைகளைத் துவைப்பதும் அவரே! கட்டுப்பாடான உணவு முறையால், உடல் நலம் காத்தவர். சென்ற

வாரம், தன் தினப்படி வேலைகளை முடித்து விட்டு, மாலையில் பேரனிடம் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கச் சொல்லிக்

கேட்டு, அதன்பின் அமைதியாக உயிர் நீத்தார்! தனது அந்திமக் கிரியைகளுக்காக, வங்கியில் அவர் சேர்த்து வைத்தது,

எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்.



அடுத்த தலைமுறைக்கு, இவர் வாழ்வு நல்ல எடுத்துக்காட்டு! :thumb:
 

முடியாது!


திடீரென
ஓர் எண்ணம் உதிக்கிறது. நடக்க முடியாத சீனியர்கள், சுற்றுலா மையங்களுக்குச் சென்றால், எத்தனை வசதிகள்

செய்து தருகின்றார், அமெரிக்க நாட்டில்! இந்தியாவில் அதுபோலக் காணவே முடியாது. வயதான பெரியோரை, வீட்டிலேயே

முடங்கிக் கிடக்கச்
செய்வதுதான் இங்கு காணலாம். ''வயதானால் கிருஷ்ணா ராமா என்று கிடக்க வேண்டியதுதானே', என்பது

மிகச் சாதாரணமாக நாம் கேட்கும் வசனம். 'முடியாது, முடியாது என முதியோரை முடங்கச் செய்யாதீர்!' என்று உரக்கக்

கத்தினாலும், யார் கேட்பார்கள்?



அமெரிக்க நாட்டில், வயது முதிர்ந்த பலர், தானே காரை ஓட்டிக்கொண்டு வந்து, பொருட்கள் வாங்கிச் சுமந்து செல்வதைக்

கண்டிருக்கிறேன்! ஆனால், அதை அவர்கள் தம் சுதந்திரமாகவே எண்ணுகின்றார்கள்; மகிழ்கின்றார்கள். பிள்ளைகளை நம்பி

வாழ்வதைப் பலர் விரும்புவதே இல்லை. ஒருவேளை, அதனால்தான் சக்கர நாற்காலிகளில் செல்வோருக்கும், பொது

இடங்களில் அத்தனை வசதிகள் செய்கின்றாரோ!



முதியோராய் இருந்தாலும், அமெரிக்க நாட்டில் இருக்க வேண்டுமோ? :noidea:
 

முதல் மரியாதை!



மரியாதை என்பது உருட்டி மிரட்டி வாங்க முடியாதது, என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்! யாராக இருப்பினும்,

அவர்கள் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் முறையிலிருந்தே அவர்களுக்கு மரியாதை காட்டப்படும்.
நல்ல மனித

நேயத்துடனும், உதவும் பண்புடனும் இருக்கும் ஒருவருக்குத் தானே மரியாதை வந்து சேரும்.



சில பிரக்ருதிகள் தன்னை யாருமே மதிக்கவில்லை என்பதையே எண்ணி எண்ணிப் புழுங்குவார். காணும் எல்லோரிடமும்,

தனக்கு மரியாதை தராத சம்பவங்களை நினைவுபடுத்தி, மனம் கசந்துபோக வைத்திடுவார்.
மலரும் நினைவுகளாக,

பழைய கதைகள் பேசி, நேரத்தை வீணடிப்பார்.
சந்திக்கும் சுற்றம், நட்புடன், கிடைக்கும் நேரத்தை இனிமையாக்க

விழைய மாட்டார்!


வாழ்வில் எல்லாமே இன்ப மயமாக இருப்பது முடியாத செயலாகும். அல்லவை மறந்து, நல்லவை நினைத்து, வாழும்

நாட்களை அன்பு செலுத்திக் கழித்தால் மட்டுமே, வாழ்வில் நிம்மதி பிறக்கும்.



சுற்றி வரும் சுற்றத்தை, அன்பு காட்டி அரவணைப்பதை அறிந்துகொள்வோம்! :grouphug:
 

நல்ல சந்தேகம்!


பள்ளிப் பருவத்தில் நான் இருந்தபோது, ஆண்டு விடுமுறையில் மூன்று சித்தப்பாக்கள் தம் குழந்தைகளுடன் வந்து,

எங்களுடன் சில நாட்கள் செலவிடுவது வழக்கம்.


ஒரு சித்தப்பாவின் பெண் மழலைப் பருவம். தன் அப்பா, விடாமல் இந்தியர்களைப் பற்றிக் குறை கூறியபடி இருந்ததைக்

கவனித்தாள்! 'இந்த இந்தியர்களே இப்படித்தான்... சரியாக வேலை செய்ய மாட்டார்கள்; தூங்க மூஞ்சிகளாக இருப்பார்கள்;

தனக்காகவும் தெரியாது; யார் சொன்னாலும் புரியாது; தாந்தோணியாக நடந்து, நாட்டைக் கெடுப்பார்கள்!' இன்ன பிற

குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தன. சில நிமிடங்கள் மெளனமாக கவனித்த அந்த மழலை, தன் அப்பாவிடம், குட்டிப் புருவங்களைத் தூக்கியபடிக் கேட்டாள், 'நாமெல்லாம் யாருப்பா?' என்று! :decision:
 
Last edited:

இணையதள எழுத்தாளர்கள்.


இந்த இணையதள எழுத்தாளர்களில், எத்தனை வகைகள்! சிலர், சுனாமி போலப் புகுந்து கலக்கிவிட்டு, மறைவார்கள். சிலர், புதிய

சமுதாயக் கருத்துக்கள் கூறுவது போல ஆரம்பித்து, மேகமாகப் பொழிந்து, மேகம் ஓடுவது போலவே ஓடிப் போவார்கள்! சிலர், தம்

'பாயிண்டுகள்' அதிகரிக்கும் வகைகளை நாடி அலைவார்கள். சிலர், தன் வாழ்க்கைத் துணையைத் தேடிக் காண முயல்வார்கள். சிலர்,

தாம் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிப் படுத்துவார்கள். சிலர், இரண்டு மூன்று பெயர்களில் நுழைந்து கலக்குவார்கள்!

சிலர், அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிப்பார்கள், எழுத்தின் அளவைக்கூட மாற்றாமல்! சிலர், பொன் மொழிகளாகத் தேடித் தேடி

நமக்கு அளிப்பார்கள். சிலர், நண்பர்களாக
ப் பலரைச் சேர்த்துக் கொண்ட பின்பு, காணாமல் போய்விடுவார்கள்! இன்னும் எத்தனை

எத்தனை ரகங்களில் எழுத்தாளர்கள்!


மனித குணங்கள் விசித்திரமானவை அல்லவா?
:dance:
 

இதுவா வரவேற்பு?


சிலருக்கு. சுபாவத்தில் கோபம் அதிகம் இருக்கும். அது அவர்களின் இயல்பு; மாறவும் மாட்டார்கள்! தம் வீட்டிற்கு யாரும் வந்து

போவதில்லை என்றும், தம்முடன் யாரும் தங்குவதே இல்லை என்றும் ஆதங்கம் கொள்வார்கள். அன்புடன் பேசினால்தான்,

தன்னைப் பிறர் விரும்புவார் என்று இவர்களுக்கு ஏனோ புரிவதே இல்லை! இது போன்ற மனிதரின் கோப சுபாவத்தால்,

என்றேனும் அத்தி பூத்தது போல, உறவினர்கள் எட்டிப் பார்ப்பது வழக்கம். அந்த சமயத்திலேனும் அன்புடன் வரவேற்றுப்

பேசினால், மீண்டும் வர வேண்டும் என்ற எண்ணம் விருந்தினருக்கும் வரும். ஆனால், இவர்களோ, வந்தவுடன் குரல்வளையைப்

பிடித்துக் கடிக்காத குறையாக, கத்தித் தள்ளுவார்கள்! 'ஏன் இத்தனை நாட்கள் வரவில்லை? எங்களைக் கண்டால் மனிதராகத்

தெரியவில்லையா? ஒரு முறையேனும் இங்கு தங்கி இருப்பீர்களா?' என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்து,

வந்தவரின் மனதைத் துளைத்துவிடுவார்கள். இது போலச் செய்தால், தம் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட எல்லோரும்

தயங்குவார்கள் என்று இவர்களுக்கு ஏன் புரிவதே இல்லை?

அன்பு காட்டினால்தான், அன்பு காட்டப்படுவோம் என்பதை
மறவாமல் நினைவில் கொள்ளுவோம்! :grouphug:

 
இளைய சமுதாயம்!


சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்த்தேன். நாடோடிகள் என்ற தலைப்பைப் பார்த்து, ஏதோ ஊர் சுற்றும் இளசுகள்

பற்றிய கதை என்றுதான் எண்ணினேன். ஆனால் ஒரு வித்தியாசமான திரைக்கதையாக இருந்தது, அது.



அரசாங்க வேலைக்கு அலையும் ஒருவன்; கணினி மையம் வைக்க விழையும் ஒருவன்; வெளி நாடு சென்று

சம்பாதிக்கக் கனவு காணும் ஒருவன். இவர்கள் நண்பர்கள். ஒருவனின் நண்பன் அவர்களின் ஊருக்கு வந்து

தற்கொலை முயற்சியில் இறங்க, அதன் காரணம் அவனின் நிறைவேறாத காதல் என்று அறிகின்றனர். மூவரும்

புறப்பட்டு, பல இன்னல்களை எதிர்கொண்டு, அந்தக் காதலர்களைச் சேர்த்து, திருமணம் செய்து வைத்து, வேறு ஒரு

ஊருக்கு அனுப்புகின்றனர். இந்த முயற்சியில் ஒருவனுக்குக் கண்ணுக்கு அருகில் காயம் படுவதும், கணினி மையம்

வைக்க விழைபவனுக்கு ஒரு கால் துண்டிக்கப்படுவதும், வெளிநாடு செல்ல விரும்புபவனுக்கு காதில் அடிபட்டுக்

கேட்கும் திறன் போவதும் துயரங்கள். காதலர்களின் பெற்றோர், கேஸ் போட, போலீசார் இவர்கள் தேடிக்

கண்டுபிடித்து, துன்புறுத்திய பின், கோர்ட்டில் தினமும் கையெழுத்துப் போடுமாறு கூறுகின்றனர். ஒரு நாள்,

திடீரென கேஸ் வாபஸ் வாங்கப் படுவதாகச் சொல்ல, காரணம் கேட்க, காதலர் பிரிந்து அவரவர் வீட்டிற்குச்

சென்றதைக் கூற,
அதிர்ச்சி அடைகின்றனர். இத்தனை துயரங்களை எதிர்கொண்டு சேர்த்து வைத்தால், வாழமால்

பிரிந்தது மட்டும் அல்லாமல், வேறு திருமணம் செய்துகொள்ளவும் தயாராகின்றனர்! மூன்று நண்பர்களும்

கோபத்தில் பொங்கி எழுந்து, காதலர் இருவரையும் கடத்திச் சென்று, ஒரு பொட்டல் காட்டில் இறக்கிவிட்டு,

'நினைத்தபோது காதலித்து, திருமணம் செய்த சில நாட்களிலேயே பிரிவது என்ன வாழ்க்கை?', என்று திட்டித்

தீர்க்கின்றனர். அவர்களை அங்கேயே விட்டுவிட்டுத் திரும்புகின்றனர்.



நிஜ வாழ்வில் அடிக்கடி இதுபோல நடப்பதைப் பார்க்கின்றோமே! வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை ஆராயாமல்,

ஏனோதானோ என்று காதலித்து, நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்துகொண்டு, பின் சில மாதங்களிலேயே

சண்டை போட்டுப் பிரிந்தால், காதலுக்கு என்ன மரியாதை? நட்புக்கு என்ன மரியாதை? இளம் சமுதாயம் இவற்றை

ஆராய்ந்து, திருந்துமா? :noidea:
 

நேற்றைய கதை!

இதில் விட்டுப்போனது ஒரு முக்கியச் செய்தி! காதலர் இருவருக்கும் மிக வசதியான பெற்றோர். ஆனால்,

ரு குடும்பங்களை இடையேயும் வெறுப்பு. அதனால் நண்பர்கள் அவர்களைச் சேர்த்து வைக்க முயலும்போது,

பணக்காரர்களின் அடியாட்களால் தாக்கப்படுகின்றார்! :brick:
 
அனுசரித்து வாழும் வாழ்க்கை!

இந்தக் காலத்தில், பெற்றோருக்குக் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளுவது அதிகரித்துவிட்டது! அலுவலகக்

காதலில் இணைந்த ஒரு ஜோடி, திருமணம் ஆன பிறகும், அதை வீட்டில் தெரிவிக்காமல், அவரவர் வீடுகளில்

எப்போதும்போல வாழ்ந்தனர். அக்காவின் வீட்டில் வசித்த தங்கையின் கழுத்தில் தொங்கிய தாலியை, இரண்டு

ஆண்டுகளுக்குப் பிறகு (!) எதேச்சையாக அக்கா கண்டுபிடிக்க, குட்டு வெளிப்பட்டது! ஏன் இரண்டு ஆண்டுகள்

சொல்லவில்லை என்ற கேள்விக்கு வந்த பதில் விசித்திரமானது! அவர்கள் இருவரும், சுக வாழ்விற்குப் பணம்

சேர்த்துகின்றார்களாம்; தேவையான பணம் சேர்ந்த பின், சொல்லுவார்களாம்!



இவ்வாறு மணந்துகொள்ளும் ஜோடிகள் பலரும், பெற்றோரால் தேர்வு செய்யப்பட்ட வரனை மணந்து

கொண்டவர்களும், விரைவில் மனம் கசந்து பிரிவது அதிகரித்துவிட்டது! ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழும்

மனப்பான்மை குறைவதே இதற்கு முதன்மையான காரணம் என்று நான் நினைக்கின்றேன்!



திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று பெரியோர் சொல்லுவார். அது நடை முறையில் வருமா?
 

எல்லாமே அம்பலம்!


பேச்சில் வல்லவர் என்று பெயர் எடுக்க வேண்டுமென்று சிலர், எல்லா வீட்டு விஷயங்களையும் அம்பலம் ஆக்க விழைவார்!

மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாதவை, அம்பலம் ஆகிவிடும்!


ஒரு முறை, தன் வீட்டு விஷயங்கள், தாம் அழைத்துக்கொள்ளும் செல்லப் பெயர்கள் ஆகியவை ஒருவரால் அம்பலம் ஆயின.

காற்று வாக்கில் செய்தி பரவி ( அடுத்த வீட்டு வம்பு என்றால் எல்லோருக்கும் கேட்க ஆசைதானே!) ஒரு பிரஹஸ்பதி, அவர்

வீட்டிற்கு விஜயம் செய்தான். அவருடைய அண்ணனுடன், அவரின் அனுபவங்களை விலாவாரியாகச் சொன்னான்!

(சொன்னதென்னவோ இவரே!) காபி உபசாரங்கள் முடிந்த பிறகு, ஐயாயிரம் ரூபாய் தேவை என்றும், அதை ஊருக்குச் சென்றதும்

அண்ணனிடம் தந்துவிடுவதாகவும் சொல்ல, அவரின் மனைவிக்குச் சந்தேகம் வந்துவிட்டது! (பெண்கள் பல சமயம்

புத்திசாலிகளே) 'அண்ணாவின் மகள் எங்கே இருக்கிறாள்?' என்று கேள்வி கேட்க, ஏதோ ஒரு ஊரை வந்தவரும் சொல்ல, குட்டு

வெளிப்பட்டது! ஏனென்றால், அந்த அண்ணாவுக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே! நல்ல வார்த்தை சொல்லி அந்த மனிதனை

அனுப்புவதற்குள், இவர்களுக்குப் போதும் போதுமென்று ஆகிவிட்டதாம்! இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன! அது

அலைபேசி இல்லாத காலம்; இப்போதானால், உடனே சந்தேகம் தீர்த்துக்கொள்ளலாமே!


இன்று, வலைத்தள நட்பு பெருகிவிட்ட காலத்தில், எல்லா விஷயங்களையும் பகிர்வது ஆபத்தில் முடியாவிட்டாலும், தேவை

இல்லாதவற்றைச் சொல்லாமல் இருப்பது நலம் பயக்கும்!
:tape2:

 
Last edited:

இது ஏற்கனவே G D பிரிவில் நான் இட்டது. ஆனால், ஒரு வகைப் பெற்றோரைப் பற்றி இருப்பதால், மீண்டும் இங்கு!


ஆனந்தமாய் இருந்த பெண்ணை!



இதோ இன்னொரு கதை அல்ல; நிஜம்!



நன்றாகப் படித்து, மாதம் ஒரு லக்ஷம் ஈட்டும் அளவு உயர்ந்த பெண்; அவள் உயரமும் அதிகம்தான்! அவளுக்கு மூளையில்

சிறு கட்டி தோன்றிவிட, அதற்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. சின்னக் குழாய் ஒன்று, கழுத்தின் அருகில் ஆரம்பித்து,

வயிற்றுப் பகுதி வரை பதிக்கப்பட்டது! அறுவை சிகிச்சையால் பெருகும் நிணநீர், அதன் வழியாக வடியுமாம்.



திருமணத்தில் ஆசை இல்லாத அவளுக்கு,
சம்பளத்திலும், உயரத்திலும் அதிகமாக உள்ள பிள்ளையைத் தேடி அலைந்தனர்.

'எனக்குப் பதினெட்டு; உனக்கு இருபது' என்ற அடிப்படையில், இரண்டு வயது வித்தியாசத்தில் பிள்ளை தேடி அலுத்தபின்,

ஏழு வயது வித்தியாசத்தில், அவளது முப்பத்தி இரண்டாவது வயதில், அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்துவிட்டனர்.

பிள்ளை வீட்டார், மிக நல்லவர்கள் என்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது! திருமணம் முடிந்தபின், வெளிநாட்டில் வேலை

கிடைத்தது என்று கூறிய மாப்பிள்ளை, அவளுக்கு 'விசா' ஏற்பாடு பின்னர் செய்வதாகச் சொல்லிச் சென்றுவிட்டான்!

அவனின் அம்மாவும், அக்காவும், தொலைக்காட்சி 'மெகா சீரியல்'களில் வரும் மாமியார், நாத்தனாராக மாறிவிட்டனர்!

அவள் சம்பாதித்த பணம் யார் பெயரில் உள்ளது என்றும், அதைத் தங்களிடம் தருமாறும் நச்சரிக்க ஆரம்பித்தனர்.

கணவனோ, தொலைபேசியில் பேசுவதையும் தவிர்த்தான்! பெண்ணுக்கு பயம் வந்துவிட்டது. அதைப் பற்றி விசாரித்த

பெண்ணின் தந்தை அவமதிக்கப்பட்டார்! பின் என்ன? விவாகரத்துக்காக, ஓராண்டு காத்திருக்க ஆரம்பித்தாள்!



ஆனந்தமாய் இருந்த பெண்ணை, திருமண பந்தத்தில் மாட்டிவிட்டு, அவள் வாழ்வையும் கெடுத்தனர் பெற்றோர்! :ballchain:


 

நேர்மை!



நேர்மை என்பது அரிதாகப் போய்க்கொண்டிருக்கும் இந்நாளில், இன்னும் நேர்மையாக நடக்கும் எளியவர் பலர்

இருக்கின்றனர். இதோ ஒரு சம்பவம்:



திருமண வரவேற்பு ஒன்று; மிக வேண்டிய நண்பரின் மகளின் திருமணம். அவர் ஆடிட்டர் என்பதால், கூட்டம்

அலைமோதியது! வரிசையில் நின்று, 'மொய்'ப் பணத்தை அளித்து, நண்பர்களுடன் உரையாடிய பின்பு, உணவுக்

கூடத்தை அடைந்தோம். என் கைகளில் குட்டிக் கண்ணம்மா. பெண்ணரசியும் என்னவரும் என்னைப் பின்

தொடர்ந்து வர, ஒரு அறிவிப்பு பெண்ணரசியின் காதில் விழுந்தது! 'யாராவது கொலுசைத் தவற விட்டீர்களா?'

என்று கேட்டவர் உணவு பரிமாற வந்திருந்த, எளிய ஊழியர் ஒருவர்! ஓடி வந்த பெண்ணரசி, என்னிடம்,

கண்ணம்மாவின் இரு கொலுசுகளும் அவள் காலில் இருக்கின்றனவா என்று பார்க்கச் சொன்னாள். அவள், முன்பு

அணிந்திருந்த, திருகு பூட்டும் கொலுசைத் தவறவிட்டாள்! புதிய கொலுசுகள், கொக்கிகளால் மாட்டப்பட்டதால்,

அலுங்காமல் இருந்தன. 'அட! என் கொலுசில் திருகுதானே உள்ளது', என்ற எண்ணம் வர, மெதுவாக என் இரு

பாதங்களால் கொலுசுகளை வருடிப் பார்க்க, வலது காலில் 'மிஸ்ஸிங்'! அதைச் சொன்னவுடன், 'சின்னக்

குழந்தையின் கொலுசு அல்ல; பெரிய குழந்தையின் கொலுசு!' என்று என் நண்பி மாமி கிண்டல் செய்ய, பெண்ணரசி

ஓடிச் சென்று, என் கொலுசை மீட்டு வந்தாள்!
அத்தனை கூட்டத்தில், கொலுசை மறைத்து எடுத்துச் செல்லுவது,

கடினமான செயலே அல்ல! எனினும், வெள்ளி விற்கும் விலையில், அதைத் தானே எடுத்துச் செல்லாமல், திருப்பிக்

கொடுத்த நல்ல மனத்தை, நானும் சென்று பாராட்டினேன்!


இவர்களைப் போன்ற நல்லவர்கள் உள்ளதால்தான், நாட்டில் மழை பொழிகிறது! :angel: ... :rain:

 

இதுதானே தூய காதல்!



என் நண்பியின் மகன். நல்ல அழகன்; உயரம் ஆறடி நாலு அங்குலம்; நடனக் கலையில் வல்லவன்; நட்டுவாங்கம்

செய்வதிலும் மிகச் சிறந்தவன். நாட்டியப் பள்ளி வைக்க வேண்டும் என்று தீராத தாகம் கொண்டவன். அவன் மீது

நாட்டியம் கற்ற
ஒரு பெண்ணுக்கு நாட்டம். அவன் அண்ணனின் திருமணம் முடிந்தவுடன், அவனிடம் தன் ஆவலை

அவளே சொன்னாள். அவனுக்கோ இருபத்தி
ஐந்து வயதுதான்! தன்னைவிட ஒன்றரை ஆண்டுகளே சிறியவளான

அவளிடம், தனக்கு மேல் படிப்பிலும், நாட்டியப் பள்ளி நிறுவுவதிலும் ஆர்வம் என்று சொல்லி, அவள் பெற்றோர்

பார்க்கும் மாப்பிள்ளையை மணக்குமாறு அறிவுரை தந்தான். இவள் விடுவதாக இல்லை. சில நாட்களில், அவன்

தந்தை இறந்து, அவரது கம்பெனியை இவன் நடத்தும் நிலைமை வந்தது! நாட்டியப் பள்ளியா, கம்பெனி அதிகாரமா

என்ற கேள்வி வந்தபோது, நானும், என் போன்ற நலம் விரும்பிகளும், அவன் தந்தையின் நிறுவனத்தை

மேன்மையுறச் செய்வதே அவனது தலையாய பணி என்று அறிவுறுத்தினோம்.



ஓராண்டுக்குப் பின், அவள் மீண்டும் அவனிடம் கேட்டாள். வேலையைக் கற்கும் நிலைமை இருப்பதாகக் கூறி,

திருமணம் செய்ய இன்னும் நான்கு ஆண்டுகளேனும் ஆகும் என்பதை விளக்கினான் அவன். அவளோ, தன் தந்தை

கொண்டு வந்த எல்லா சம்பந்தங்களையும் தட்டிக் கழித்தாள். நான்கு ஆண்டுகளில் அவனின் நிறுவனம்

வியாபாரத்தில் நல்ல நிலைமையை எட்டியது; அவனும் முப்பது வயதை எட்டினான்! இப்போது காரணம் சொல்ல

வழியே இல்லையே! தன் விருப்பத்தைத் தந்தையிடம் சொல்லி, 'பையன் கேட்டு' வரவும் வைத்தாள். அவர்கள்

பட்டை விபூதி; இவன் நாமதாரி! ஆயினும் என்ன? இருவரும் அழகிலும், நாட்டியக் கலையிலும் சிறந்தவர்கள்.

இறைவன் அருளால், ஜாதகங்களும் பொருந்திவிட்டன. அவள் காதல் ஜெயித்தது! இன்னும் மூன்று மாதங்களில்

'டும் டும்' தான்!!



நேற்று என்னிடம் இந்த விஷயத்தை நண்பி கூறியதும், அவளை நேரில் சந்தித்து வாழ்த்தி வந்தேன்! (அவள் என்

இசை மாணவியும்தான்!!) :thumb:

 

காத்திருந்து, காத்திருந்து!



டாக்டர் பட்டம் வாங்கி, கனடாவின் பணி செய்த அழகிய பெண்! திருமணம் செய்து வைக்க அவளின் அம்மா

விழைய, எல்லா வர
ன்களையும் தட்டிக் கழித்தாள். இப்படிச் செய்தே வயது முப்பதை எட்டிவிட, இந்தியாவில்

செட்டில் ஆகிறேன் என்று முடிவெடுத்து, சென்னை பல்கலைக் கழகத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டாள்.

அவளுக்குப் பிடித்த வகையில், ஒரு வயது வித்தியாசத்தில், வரன் வந்தான். ஆனால், அவன் படிப்பது அமெரிக்க

நாட்டில்! மனதிற்குப் பிடித்ததை உடனே சொல்லாமல், அவனை நேரில் சந்திக்க வேண்டும் என்று பிடிவாதம்

செய்தாள். அம்மாவும் ஒப்புக்கொண்டு, அவளுடன் அமெரிக்காவுக்குப் பறந்தாள். சந்திப்பு முடிந்தும், உடனே

சம்மதம் சொல்லாமல் நாட்களைக் கடத்தினாள். அவனுக்கு வேலை அமையட்டும் என்று காத்திருந்தாள்! இதன்

இடையில் அவனுக்கு வேலையுடன் Green card கிடைத்துவிட்டது; அதனால் வந்தது தொல்லை! G C

வைத்திருந்தால், இந்தியாவிலிருந்து மனைவியை உடனே அழைத்துச் செல்ல முடியாது. அவள் காத்திருந்து

காத்திருந்து நாட்களைக் கடத்தியதால், திருமணம் முடிந்து ஒரு ஆண்டு ஆகியும், சென்னையிலேயே

இருக்கின்றாள், விசா கிடைக்கக் காத்திருக்கின்றாள்! அவளுக்கு இதுவரை சரியான வேலை அமெரிக்காவில்

கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்தால், அங்கு சென்று குடித்தனம் ஆரம்பிக்க முடியும்.



சில முடிவுகளைக் காலம் தாழ்த்தி எடுப்பது விவகாரமாக முடிகின்றது!
:sad:
 
இப்படியும் பெண்கள்!


தந்தை தாயிடம் உருட்டி மிரட்டிப் பிடுங்கும் பெண்களைக் கண்டது உண்டோ? நான் சிலரைப்

பார்த்துள்ளேன்!


விசாகையில் வசித்தபோது, ஒரு நண்பரின் மகள், காதலித்துத் திருமணம் செய்து கொள்ள விழைந்தாள்.

தாயிடம் ஒரு நாள், 'காதல் கல்யாணம்தானே என்று ஒரு சீரும் செய்யாமல் விட்டு விடாதே! நகைகள்,

வெள்ளிப் பாத்திரங்கள் வரிசையுடன், கட்டில், மெத்தை, பீரோவும் இருக்கட்டும்', என்று கறாராகச்

சொல்லிவிட்டாள்! அப்படிச் சொல்லாவிட்டால், அம்மாவே அவளை ஏமாற்றிவிடுவாளாம்! இது எப்படி

இருக்கு?



ஒரு கல்யாணத்தில், இரட்டை வடச் சங்கிலியைச் சீர் நகைகளுடன் கேட்டு கலாட்டா செய்த ஒரு

முதியவரை மனமாரப் பாராட்டி, 'அவர் அப்படிக் கேட்டிருக்காவிட்டால், எனக்கு அந்த நகை கிடைத்தே

இருக்காது!', என்று மகிழ்ந்த ஒரு பெண்ணைப் பற்றி, முன்பு ஒரு முறை எழுதினேன்! இப்போது

இன்னொரு பெண், பேரன், பேத்திகள் எடுத்த பின், தன் அன்னையிடம் கேட்கின்றாளாம், 'எனக்கு என்ன

பெரிதாகச் சீர் செய்து கல்யாணம் செய்தீர்கள்?', என்று!


உலகம் பலவிதம்!!
:bowl: . . . :twitch:
 

நற்குணங்களைப் பழக்க வேண்டும்!



சமீபத்தில் நான் சென்ற ரயில் பயணத்தில், ஆறு பேர்கள் அமரும் cubicle! எதிரில் அமர்ந்தவர் நடு வயதுப்

பெண்மணி. மற்ற நால்வர்: இளம் பெற்றோரும் அவர்களின் இரு வால் பையன்களும்! அம்மா சுடிதார் அணிந்து,

ஒய்யாரமாக ஒரு ஆங்கில வார இதழுடன் அமர, பையன்கள் இருவரும் 'அச்சா! அச்சா!' என்று நொடிக்கு ஒருமுறை

அழைத்து, அவர்களின் அப்பாவைப் படுத்தியபடி வந்தனர். அவர்களின் கையில் இருந்த i pad காட்டியது அவர்களின்

செல்வச் செழிப்பை! கொஞ்ச நேரம் சென்றதும், மேலே ஏறிப் படுத்துக்கொள்ள இரு பையன்களும் மறுத்துவிட்டு,

ஒரே 'பெர்த்'தில் ஒவ்வொரு முனையில் ஒருவர் தலை வைத்தபடிப் படுத்தனர். ஒவ்வொருவரும்

உருவிக்கொண்டது, மூன்று தலையணைகளை! ஆறு பேருக்கும் வைத்திருந்த தலையணைகளை, அவர்கள்

இருவருமே எடுத்துக் கொண்டதும், நான் அதைச் சுட்டிக் காட்டினேன்! அதனால் பரவாயில்லையாம்; தூங்கும்

நேரத்தில் அவர்கள் தருவார்களாம்! இது எப்படி இருக்கு? அவர்கள் உபயோகிக்கும் முன்பே எனக்கு ஒன்றை

எடுத்துத் தருமாறு கேட்டேன். வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்பார்கள், அல்லவா? வேண்டா வெறுப்பாக

ஒரு தலையணை என்னிடம் தரப்பட்டது. மற்றவர்களின் சௌகரியத்தைத் துளியும் உணராதபடி அந்தப் பிள்ளைகள்

வர, அம்மாவோ அவர்கள் யாரோ என்பதுபோலப் படிப்பில் மூழ்கி இருக்க, 'என்ன குடும்பமடா இது?' என்று என்

மனம் எண்ணியது!



பிள்ளைகளைப் பெற்றால் மட்டும் போதாது! அவர்களை நல் வழியில் வளர்ப்பது பெற்றோரின் கடமை ஆகும்! :first:


 
பிள்ளைகளைப் பெற்றால் மட்டும் போதாது! அவர்களை நல் வழியில் வளர்ப்பது பெற்றோரின் கடமை ஆகும்! :first:


Nandru sonneer.


Idhu oru kodumai endral innoru kodumai they keep songs in high pitch throughout the day and not allowing others to sleep or go on talking and talking in loud voice. Many times I feel second class is better than 2nd AC.

Enney ungal anubavam. Thodarattm um kaivannam.
(I do not know how to type in tamil)
 
......... Enney ungal anubavam. Thodarattm um kaivannam.(I do not know how to type in tamil)
நன்றி! எப்பொழுதும் என் நண்பர்களிடம் கூறுவது இதுதான்:
தங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம்! :popcorn:
 
Dear S. R. Sir,

If gmail with rich text is available, typing Tamil is easy. But, the person who types in Thanglish should know the correct

spelling in Tamil! The example I would like to give is this:
குலவி; குளவி; குழவி.


தாய் தன் குழவியைக் குலவி மகிழும்போது, அருகில் வந்த குளவியை அடித்தாள்!


 

Latest posts

Latest ads

Back
Top